Monday, October 16, 2017







நாடாளுமன்ற ,


சட்டமன்ற , 


தேர்தல்கள் ...!!!





இந்தியா சுதந்திரமடைந்ததும் 1952ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு ,சட்டமனறத்திற்கும்  ஒரேசமயத்தில் தேர்தல் நடந்தது. 1967மாண்டுவரை இதேமுறையில் நடந்துவந்தது . ஆனால் 1971ம் ஆண்டு இதனை மாற்ற யோசனைகளை வந்தன . நாடாளுமன்ற தேர்தலின் பொது தேசிய அளவில் விவாதங்கள்  உருவாக்கிமுடிவுகள் எடுக்கப்படவேண்டும் அதனால் அதன் சட்டமன்ற தேர்தல்களோடு சேர்க்கவேண்டியதில்லை என்று சொல்லப்பட்டது. இதனை விவாதத்திற்கு கொண்டுவந்த காங்கிரஸ் கடசியின் நிலயை திமுக ஆதரித்தது. ஆனால் இதற்குப்பின்னால் இரண்டு கடசிகளின் சுய நலனே முன் நின்றது .


1977ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் பொது காங்கிரசை எதிர்த்து காங் (ஓ )லோக்தளம்,சோஷலிஸ்டுகள்,ஜெகஜீவன்ராம் கட்சி என்று பலகட்சிகள் நின்றன. இந்திரா அம்மையார்    தலைமையில் இருந்த காங்கிரஸ் தோற்றது. மொரார்ஜி யும்  சரண்சிங்கும்  9 மாநிலங்களில் இருந்த இ.காங் அரசுகளை நீக்கும்படி ஜனாதிபதியை கேட்டுக் கொண்டனர். அவசரநிலைக்காலத்தில் செய்த குற்றங்களுக்கு இந்த மாநில அரசுகளும் தண்டிக்கப்படவேண்டும் என்பது அவர்களுடைய வாதம். அதனால் 9 மாநிலங்களுக்கு 1978ம் ஆண்டு தேர்தல் நடத்தவேண்டுய நிலை  ஏற்பட்டது.

இதன் பிறகு நடந்த தேர்தல் எப்போது எப்படி நடக்குமென்று சொல்லமுடியாதநிலை தோன்றியது . பல்வேறு மாநிலங்களில் பலவகையான கட்சிகள்  உருவாகின .அவை இன்றிமையாதவை யாகவும் தோன்றின. மத்தியில் பலம் குறைந்த ஆட்சி  ( கூட்டணி )  வரலாயிற்று. 

2014ம் ஆண்டு தேர்தலில் இந்தநிலையை மக்கள்மாற்றினர். பா.ஜ.க தனி பெரும்பான்மையுடன் ஆட்ச்சியை கைப்பற்றியது. மாநிலங்களில் வேறு கட்சிகள் ஆட்ச்சியை பிடித்தன .


நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் எதிர்க்கட்ச்சிகள் இணைந்து பா.ஜ.கவை  சந்திக்கும் நிலை ஏற்படலாம் . அதன் "பத்தாம்பசலி " கொள்கையை அனுபவித்த மக்கள் எதிரகடசிகளை  ஆதரிக்கும் வாய்ப்பு அதிகமாகிக்கொண்டு வருகிறது.இதனை  கண்டு கொண்ட பா.ஜ.க, ஆர் எஸ் எஸ்  தலைமை நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலையும் நடத்த வேண்டும் என்று ககூ வ ஆரம்பித்து விட்டது  .அவர்கள் ஆதரவு தேர்தல் கமிஷனும்  நாங்கள் தயார் என்கிறது.

சட்டமன்ற தேர்தலில் உள்ளூர் சண்டியர்களை மோதவிட்டு நாடாளுமன்றம்  பற்றிய விவாதத்தில் தான் தப்பி விடவேண்டும் என்று கருது கிறார்கள்.

பாஜ.க வின் இந்த திட்டத்தை மார்க்சிஸ்ட் கடசி எதிர்க்கிறது.திரிணமுல் காங்கிரஸ்,மற்றும்சில கடசிகள் எதிர்க்கின்றன. திமுக,தெலுங்கு தேசம், இன்னும் சில கடசிகள் ஆதரிக்கலாம் என்று கூறப்படுகிறது.


பாஜக.வின் கூட்டணியில் உள்ள சிலகாட்சிகள் எதிர்ப்பதால் மோடியும், அமிடன் ஷாவும் பம்முகிறார்கள். 


நாடாளுமனற ,சட்டமன்ற தேர்தலை ஒரே சமயத்தில் நடத்துவதில் மூலம்,எதிர்க்கட்ச்சிகள் ஒன்றுபடாமல் செய்யவும்,அவர்களுக்குள் அடித்துக்கொண்டு அந்த அமளியில் தன வெற்றியை சாதிக்கவும் பா.ஜ .க திட்டமிடுகிறது .


1 comments:

'பரிவை' சே.குமார் said...

எல்லாம் அரசியல்....