Sunday, October 22, 2017






இஸ்லாமியர்கள் உருவாக்கிய ,

பஜனை பாடல்கள் ...!!!






1952ம் ஆண்டு " பாய்ஜூ  பாவ்ரா " என்ற இந்தி திரைப்படம் வந்தது . அஃபரின் தர்பாரில் தான் சென் கொலோசிக்கொண்டிருந்த காலம் அது. மிகசிறந்த பாடகர் ஒருவர் இறந்து விடுகிறார் தான்சேன் தான் தனக்கு போட்டியாக வருவார் என்று நினைத்து அவரை கொன்றுவிட்டதாக அவரிடைய பதின்ம வயது மகன் கருதுகிறான் .அக்பரின் தர்பாரிலேயே தான் சன் நை வென்று காட்ட சபதம் கொள்கிறான். வென்றும் காட்டுகிறான்.

அந்த இளைஞன் தான் பாய்ஜூ .அவனை கவுரி  என்ற பெண் காதலிக்கிறாள். 


பரத் பூஷன் மீனா  குமாரி  நடித்த இந்த படம் மிகசிறப்பாக பேசப்பட்ட ஒன்றாகும்.

பாய்ஜூ  பாடும் பாடல்கள் போன்று இன்றுவரை எவரும் எழுதவில்லை .எவரும் பாடவில்லை.எவரும் இசை அமைக்க வில்லை.

"கங்கா கி மௌஸிமே "என்ற அந்தப்பாடலை எத்தனை லட்சம் தடவை கேட்டாலும் திகைக்காது


அதே போன்று தான் "பகவான்-பகவான்- பகவான் -!  துனியா கே ரகவாலே " என்ற பாடல். .

"ஹரிதர்ஷன் கோ " என்ற பஜனை பாடல் ஊனை  உருக்கிவிடும். 


இந்த பாடல்களின் மகத்துவம் என்ன தெரியுமா ?

இதற்கான பாடலை எழுதியவர் ஷகீல் பாதயுனி !


இந்த பாடலை பாடியவர் முகம்மது ரஃபி !


இதற்கு இசை அமைத்தவர் நவுஷாத் !!!


மூவரும் பத்திரிகையாளர்களிடம் பின்னாளில் "ஆண்டவன் கருணையால் தான் எங்களால் இப்படி அமரத்துவம் வாய்ந்த பாடல்களை கொடுக்க முடிந்தது . " என்று கூறினார் .

திரைத்துறை ஆரம்பகாலத்திலிருந்தே இணக்கமாக செயல்பட்டுக்கு கொண்டுதான் இருக்கிறது .

"ஜோசப் விஜய்" என்று  கிறுக்குத்தனமாக கூறியதால் ஒன்றும் ஆகிவிட போவதில்லை.!!!



0 comments: