Friday, November 10, 2017






"லட்சுமி  " என்ற 


குறும்படத்தை , 


முன்வைத்து...!!!





வெண்புறாவின் விமரிசனத்தை படித்ததும் "லட்சுமி " குறும்படத்தை பார்க்க மிகவும் விரும்பினேன். 


படத்தை பார்த்தேன். பார்த்ததும் உடனடியாக  மறைந்த  தோழர் மேலாண்மை தான் நினைவுக்கு  வந்தார். நிறைய இளம் எழுத்தாளர்களை ஊக்கிவித்தவர் .காரணம் அப்போது அவர் செம்மலர் ஆசிரியர் குழவிலயும் பணியாறிவந்தார்> வரும் கதைகள் படித்து பரிசீலித்து பிரசுரம் செய்யும் பணியில் இருந்தார் .ஒய்வு நேரங்களில் பேசிக்கொண்டிருப்போம் .


"வே  செம்மலருக்கு எழுதற இளம் எழுத்தாளரை கூப்பிட்டு கூட்டம் போடவேண்டும் வே ! அருமையான கற்பனை ! எப்படியெல்லாம் சிந்திக்கானுவ !  அதை கதை யாக்கும் பொது சிரமப்படறானுவ ! அதுமட்டும் சொல்லிப்புட்டம்னா நம்ம பயலுகள மிஞ்ச ஆளுகிடையாது" என்பார்.


"லட்சுமி "  படம்  கூறுவதை discriminate பண்ணி  பார்க்கும் விமரிசகனால் ரசிக்கமுடிகிறது.சம்பவங்களின் அழுத்தம் ,சில takings ,ஆகியவை ஒரு நல்ல கருத்தை சொல்லவந்ததை சிதற  விடுகிறது .


தினசரி வாழ்க்கை , அதன் சலிப்பு ,ஆகியவற்றை சித்தரிக்க அந்த இரவு காட்சி அந்தவடிவத்தில் தேவையா ?  கணவனுக்கு வந்த தொலைபேசி அவனுடைய "சோர" த்தை  சித்தரிப்பதாக ஏன் பார்வையாளன் எடுத்துக்கொள்ள வேண்டும்? 


சிநேகிதி வீட்டில தங்கி விடுகிறேன் எனும் பொது காலை உணவு பற்றிக்கவலைப்படும் கணவன் - மீண்டும் பஸ்  நிறுத்தம் வந்து "எனக்கு பசிக்கிறது " என்று கூறும் மனைவி - திறமையிருந்தும் சரியாக covey செய் யாத இயக்குனர் என்றே படுகிறது.



கருணா !   குறும்பட இளம் இயக்குனர்களை வைத்து ஒரு பயிற்சி முகாம்  ஏற்பாடு பண்ணும்  வே !


0 comments: