Sunday, November 05, 2017





"Taping the rich and 

Patting the poor "


 5-11-17 அன்று  விஜய் தொலைக்காட்ச்சியின் "நீயா ? நானா ? " நிகழ்ச்ச்சியில் மறந்த முதலவர் அண்ணாதுரை பற்றி பேசினார்கள். இளம் மாணவர்கள்,கருத்தாளர்கள் ஒருபக்கமும் ,நீயாநானாவில் அடிக்கடி வரும் பழைய முகங்கள் ஒரு பக்கமுமாக பேசினார்கள்.

ஜவஹர்லாலபலகலிக்கழகத்தில்வரலாறு பற்றி ஆராயும் மாணவரிலிருந்து உள்ளூரில் வரலாறு படிப்பவர்கள் வரை ஒருபக்கம் இருந்தது மன நிறைவைத்தந்தது . அண்ணாவின் ஆட்ச்சியை, மாட்ச்சியை விமர்சிக்காமல் முழுக்க முழுக்க   புகழ் பாடும் தொகுப்பாகவே இருந்தது.

1967ம் ஆண்டு தி.மு.க பதிவு ஏற்ற பொது அதன் ரத்த சாடசியாக வாழ்ந்தவர்கள் யாரும் பங்கேற்காதது ஒரு குறைதான் .

நெறியாளர் அண்ணாவின் மிகசிறந்த சொல் எது என்று கேட்டார் . பலரும் பலசந்தர்ப்பத்தில் அவர் பேசியதை சுட்டி காட்டினார்கள் .

1967ம் ஆண்டு தி.மு.க  உள்ளிட்ட ஏழு கடசி கூட்டணிக்காக தேர்தல் பணியாற்றிய லட்சோபலட்சம் பேரில் ஒருவனாக இரவு  கண்விழித்து தேர்தல்முடிவுகளை ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தவன் நான் .

பதவி ஏற்பு விழா நடந்த பொது, காங்கிரசை வீழ்த்தி  அண்ணா அவர்கள் முதலமைசறானதை  தானே பதவி ஏற்றதாக நினைத்து கோடானு கோடி தமிழர்கள் மகிழ்ந்த பொது அதில் நானும் ஒருவனாக இருந்தேன்.

பதவி ஏற்ற பிறகு அண்ணா அவர்கள் தலைமைசெயலகத்தில் உள்ள அதிகாரிகள்,மற்றும் ஊழியர்களை அழைத்து    பேசினார் . 

எனக்கு தெரிந்து அண்ணா பேசியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது . தி.மு.க வின் வரி கொள்கை பற்றி  அண்ணா 

"பணக்காரர்களின் தொந்தியிலிருந்து வரியை உறிஞ்ச்சுவோம் .ஏழைகளிடம் தட்டிக்கொடுத்து வாங்குவோம் "

"taping the Rich and Pating the poor " என்றார் .

வார்த்தை ஜாலத்தில் அண்ணாவை மிஞ்ச யாருமில்லை. 

TAP என்ற ஆங்கில வார்த்தையின் மாற்று PAT  !"

அவர் பெயரை வைத்துக்கொண்டு ஆடுபவர்கள் இன்று 

"taping the  poor and  pating the rich " என்று மாறிவிட்டார்கள்.

என்ன செய்ய ? 



0 comments: