Sunday, November 05, 2017







மழையும்,



ஊடகங்களும் ...!!!







வடநாட்டில் இருக்கும் என்போன்றவர்களுக்கு தமிழ்நாட்டு செய்திகளை தொலைக்காட்ச்சி  மூலமே தெரிந்து கொள்ள முடிகிறது .குறிப்பாக இயற்கை இடர்பாடுகளான ,மழை,வெள்ளம் போன்றவைகளால் தமிழக்த்திலுறவினர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை உடனறிய இந்த ஊடகங்களுதவுகின்றன.


2015ம்ஆண்டு என்பேரனின்  ன்திருமணத்திற்குபோக முடியாமல்போயிற்று.உறவினர்கள்என் வயதையும்,உடல்நிலையையும்  கணக்கில் கொண்டு தயவு செய்து வராதீர்கள்  என்று  ஆலோசனை கூறினார்கள். நான் பயணத்தை ரத்து செய்தேன்   மீறி சென்ற உறவினர்கள் விஜயவாடா, நெல்லூர் வரை சென்று பின்னர் சென்னையை சரியா நேரத்தில் அடைய முடியாமல் போனது பற்றி  கதை கதையாக சொன்னார்கள்.


நேற்று சனிக்கிழமை அன்று தமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்ச்சி செய்தியில், வேளசேரி, மேடவாக்கம், பகுதியில் தேங்கி நிற்கும் நீர் பற்றிய காட்ச்சிகளை பார்த்து பதறி விட்டேன் .


உடனடியாக அங்கு தங்கி இருக்கும் என் மைத்துனரை பற்றிய  கவலையில் அவரை தொடர்பு கொண்டேன் . 


"dont beleive  E media ! biased and  exagerated  என்று தகவல் அனுப்பி நாங்கள் சவுகரியமாக இருக்கிறோம் என்று மின் செய்தி அனுப்பி இருந்தார்.



திருசியில்  வழக்குறை ஞராக  இருக்கும் என் மகள்  நீதிமன்ற விஷயமாக அடிக்கடி சென்னை வருவார் .அங்கே தங்குவதற்காக வீ டும் வாங்கியுள்ளார் .   அவரை தொடர்பு கொன்டேன். எந்த பிரசினையும்  இல்லை என்று குறிப்பிட்டார் . காலையில்  சென்று வாடிக்கையாளர்களை பார்த்ததாக கூறினார்.


வலசர  வாக்கத்தில் இருக்கும் மகனும் ஒரு பிரசசினையும இல்லை என்றார். 



மழை யினால் சென்னையில் மக்கள் தவிப்பது ஒருபக்கம். ஆனால் 2015 ம் ஆண்டு போல் இல்லை என்பது தெரிகிறது .


தொலைக்காட்ச்சி ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு நடந்து கொள்வது அவசியம் !!!

0 comments: