Wednesday, November 08, 2017







"நிஹால் காஸ்யப்"


தேசிய இசைப்போட்டிக்கு 


தேர்வு ...!!!


இந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையே இசைப்போட்டி நடைபெற்று வருகிறது .இந்த போட்டி கல்லூரிகளுக்கு இடையே நடக்கும். பின்னர் இதிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு தேர்வு செய்வார்கள் . தேர்வானவர்கள், அந்தந்த பல்கலைக்கழகங்களை சார்ந்த பிரதிநிதிகளாக மண்டல அளவில் நடக்கும் போட்டிக்கு செல்வார்கள். 


 பேரன் நிஹால் காஸ்யப் இசை யில் நாட்டமுள்ளவன். சிறுவயதில் கர்நாடக இசை சில ஆண்டுகள் பயின்றான் .  கிடார், கீ போர்டு இரண்டும் பழகி இருக்கிறான். அவன் கல்லூரியில் இசை குழுவின்  பொறுப்பாளனாகவும் இருக்கிறான் .


நாகபுரி பல்கலைக்கழகம் மண்டல  அளவிலான மேற்கத்தியஇசைபோ ட்டிக்கு பலகலையின் சார்பில் இவர்கள் குழுவை  தேர்வு செய்து அனுப்பியது. இந்த மாந்தம் 4,5,6 ம் தேதி  போபாலில் நடந்த போட்டியில் கலந்து கொண்டான்.


இன்று பல்கலையிலிருந்து தேசிய அளவில் ராஞ்சி யில் நடக்க விருக்கும் போட்டியில் நாகபுரி பல்கலையின் சார்பில் மேற்கத்திய இசை பிரிவுக்கு இவர்களுடைய குழு  தேர்வு செய்யப்பட்டிருப்பதாக செய்தியினை  பல்கலைக்கழகம் அனுப்பி யுள்ளது .


1918ம் ஆண்டு பிப்ரவரியில் நடக்க விருக்கும் தேசிய போட்டியிலும் வெற்றி பெற நிஹால் மற்றும் அவனுடைய குழுவை வாழ்த்தும்படி  தோழர்களையும் பதிவர்களைக்கேட்டுக் கொள்கிறேன் .



2 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பேரனுக்கு வாழ்த்துகள்.

kashyapan said...

நன்றி ஐயா !