Monday, April 15, 2013

யாழ் மக்கள் வாக்களித்த 

"சோஷலிச தமிழ் ஈழம் "

எங்கே ?

நம்ம  ஊர் தமிழ் குஞ்சுகள்  ஈழத்திற்காக மக்கள் 1977ம் ஆண்டு தேர்தலில் வாக்களித்து விட்டர்கள் என்று சொல்கிறார்கள் ! அது உண்மை தான்!
என்ன! அது பாதி  உண்மை!

1977மாண்டு நடந்த தேர்தல் பற்றி தேடியபோது சில சுவாரசியமான தகவல் கள் கிடைத்தன!

இந்த தேர்தலில் தமிழார் ஐக்கிய விடுதலைமுன்னணி  போட்டியிட்டது! அவர்களொடு விடுதலைப் புலிகள் இயக்கம் ஆதரவினை நல்கியது !
 ஐக்கிய முன்னணி தன்னுடைய தேர்தல் அறிக்கையில் புதிதாக வரவிருக்கும் ஈழம் பற்றி தெளிவாக  குறிப்பிட்டது!அவை :

சோஷலிச தமிழ் ஈழம் 
பொருளாதாரமும்,பிராதான் உற்பத்தி சாதனங்களும் அரசுடமையாக்கும் 
சுரண்டலற்ற ,சாதிகளற்ற சமூகம் 
முஸ்லீம்களுக்கு தன்னாட்சி 
சிங்களர்களுக்குதாய் மொழியில் கலவி 
ஏகாதிபத்திய எதிர்ப்பு 
அணிசெராக்கொள்கை 
விவசாயிகளுக்கு பாதுகாப்பு 
தனிச் சொத்துக்கு உச்ச வரம்பு 
சிங்கள முற்போக்காளர் களோடு நல்லுறவு 
தீண்டாமை ஒழிப்பு!

1977மாண்டு ஜூலை மாதம் இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களின் ஆதரவிக் கேட்டு போட்டியிட்டார்கள்! விடுதல புலிகள் இதனை முன் மொழிந்து ஆதரித்தார்கள்  

தமிழார் ஐக்கிய முண்ணணி அமோக வேற்றி பெற்றது!மொத்தமுள்ள 18 இடங்களையும் வென்றது! இலங்கை நாடாளுமனறத்தில் ஆளும் கட்ட்சிக்கு அடுத்த எண்ணிக்கை கொண்டகட்சியாக வந்தது!

ஆனால் 15-7-89 ம்தேதி தமிழர் ஐக்கிய விதலை முண்னாணியின் தலவர்கள் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோர் விடுதலைப் புலிகளால் சுட்டு கொல்லப்பட்டனர் !

 இதனை அந்த மார்க்சியமாணவன் என்று மார்தட்டிக் கொள்ளும் இயக்குனர் மணிவண்ணன் அவர்களுக்கும்  லயோலா கல்லூரி மாணவர்களுக்கும்
யாராவது தெரியப்படுத்துங்களேன் !










0 comments: