Wednesday, April 03, 2013

long live 

A .I  .D  .W  .A .....!!!

"அபிராமி காதலித்து திருமணம் செய்து கொண்டார்! அவர் கணவர்பெயர் மாரிமுத்து ! பட்டதாரி வாலிபர்."வோடபோன்"  ல்  வேலை பார்த்தார். 

அபிராமியின் குடும்பத்தினர் ஏற்கவில்லை ! காரணம் மாரிமுத்து தலித் குடும்பம்!  அவருடைய தாயார் சொல்லிப்பார்த்தார் ! அபிராமியும் படித்தவர் ! திருமணம் என்றால் மாரிமுத்துவோடுதான் என்று சொல்லிவிட்டார்!


குடும்பத்தினர் வேறு  மாப்பிள்ளையோடு திருமண எற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தனர்! அபிராமி  ரவோடு ராவாக வீட்டை விட்டு வெளியேறினார் ! மாரிமுத்துவும் அபிராமியும் திருமணம் செய்துகொண்டனர்! கிராமத்தில் இருக்க முடியவில்லை!

சென்னை வந்தனர் ! ஓராண்டு தனியாக வாழ்ந்தனர்! குழந்தைபிறந்தது ! சொற்ப சம்பளத்தில் வாழ்க்கையை ஒட்டமுடியவில்லை! பல நாள் பட்டினி! குழந்தையோடு சமாளிக்க முடியவில்லை! செத்தாலும் சொந்தகிராமத்திற்கு போய் சாகலாமென்று தம்பதியர் முடிவு செய்தனர்!

கிராமத்தில் அபிராமியின் உறவினர்கள் ஏற்கவில்லை!   ஏமாற்றி மாரிமுத்துவை அழைத்துச் சென்று கொன்றுவிட்டனர் ! "


31-3-13 அன்று" நீயா நானா" நிகழ்ச்சியில் அபிராமி கண்ணீரோடு சொன்ன தாவல்  இது!  
தொகுப்பாளர் கோபிநாத் முகம் வாட மௌனமானார்! பார்வையாளர் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தனர்! 

"கூலி வேலைக்கு  போகமுடியவில்லை! வேலை தர மறுத்தார்கள்! 
குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டினார்கள்! அந்தக் குழ்ந்தை தலித்துக்குப் பிறந்ததாம் !"
"அப்புறம் எப்படி அம்மா?" கோபிநாத ஆதுரமாக கேட்டார் !
மீண்டும் நிசப்தம் !

"சனநாயக மாதர்சங்கமும்,கம்யூனிஸ்டுகளும் தான் அடைக்கலம்தந்தார்கள் "
 
பார்த்துக் கொண்டிருந்த என் கண்கள் கசிந்தன! இதயம் மேலேறி தோணடைகுழியை அடைத்தது ! இரண்டு கைகளையும் தட்டினேன்! அருகில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த மைத்துனர் பிரண்டு படுத்தார் !

அம்மா ஜானகி அம்மா !

அம்மா  பாப்பா அம்மா!

மைதிலி அம்மா !!

RED SALUTE TO  YOU COMRADES !

LONG LIVE A.I .D.W.A !!! 








3 comments:

hariharan said...
This comment has been removed by the author.
hariharan said...

நானும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன், இடதுசாரி சக்திகள் இல்லையென்றால் சாதீயசக்திகளை தடுப்பதற்கு வேறெந்த கைகளும் இல்லை.

சிவகுமாரன் said...

நானும் சேர்ந்து கைதட்டுகிறேன்.