Saturday, April 13, 2013

பாலசந்திரன் படத்தை 

"சானல் 4" க்கு கொடுத்தது யார்?


"தமிழ் தேசீய "குஞ்சுகள் பாலசந்திரன் படம் இந்து பத்திரிகையில்  வந்ததும்போட்டா ஆட்டம் ! எப்பாடி ! 

இந்த படம் எப்படி வெளிவந்தது என்பது ரகசியமாக இருந்தது! அது என்ன ? மற்ற பத்திரிகைகளில் வரவில்லையே ? ஏன் ?

இலங்கை அரசு இலங்கையிலிருந்து வரும் பத்திரிகைகளை அடக்கி வைத்திருந்தது! மீறிய பத்திரிகையாளர்களை கணக்கு பார்த்தது ! சிலர்   தப்பி வெளிநாட்டில் வசிக்கிறார்கள்! இவர்கள் சிங்களர்கள் ! பத்திரிகையாளர்கள் !

மனித உரிமைக்காக உயிரைக் க் கொடுத்து போராட முன்வரும் இடது சிந்தனையாளர்கள்!

பி.பி.சி யோடு நெருக்கமான தொடர்புள்ளவர்கள் ! இலங்கை அரசு செய்யும் கெடுபிடி பிடிக்காமல் (சானல்4)சிங்கள தமிழ் செய்தியை நிறுத்திவிட்டது! 

"சானல்4" க்கு செய்தி கிடைக்காத நிலை !

இலங்கை அரசால் வெளியேற்றப்பட்ட சிங்கள பத்திரிகையாளர்கள் இலங்கையில் இருக்கும் தங்கள் ஆதரவாளர்கள்  மூலம் செய்திகளைச் சேகரித்து கொடுத்து வந்தார்கள்!

 25 பேர் தனியாக ஒரு அமைப்பை நடத்தி வருகிறார்கள்! அதன் மூலம்  இலங்கை அரசுசெய்த்து வரும் செயல்களை வேளிஉலகத்திற்கு கொணடு செல்வது அவர்களுடைய நோக்கம்!

"சாணல்  4" க்கு காணொளியையும் படங்களையும் கொடுத்தவர்கள் இந்த சிங்களர்கள் தான்!

உனக்கு எப்படி தெரியும் ? கேட்பது காதில்விழுகிறது!

"ஜெயா " தொலைக்காட்சியில் "மே 17 " இயக்கத்தை சார்ந்த ஒருவர் பேட்டியின்(14-4-13) போது குறிப்பிட்டார்! 




 





1 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு...