Thursday, May 19, 2016

(திரைப்பட விமரிசனமல்ல )





"என்று தணியும் " என்ற 

திரைப்படத்தை முன்வைத்து .....!!!



"பார் "

"கடந்துசெல் "


80 ஆண்டுகளில்  "பார் " (கடந்து செல் ) என்று ஒரு திரைப்படம் வந்தது. பீஹார் மாநிலத்தின் உள்ளார்ந்த ஒரு குக்கிராமம் . சாதி திமிர் பிடித்த பண்ணைகளிடம்  சிக்கிய தலித்துகளை க்கொண்ட குடி இருப்புகள் . பண்ணையாரின்  அட்டூழியத்தை தட்டிக் கேட்கும்  பள்ளி ஆசிரியரை மிராசுதார் கொன்று விடுகிறான்.

 இதைக்கண்டு பொறுக்காமல் நாகியா என்ற தலித் மிரசுதார்ரரின் தம்பியை கொன்றுவிடுகிறான்.தப்பிக்க ஊரை  விட்டு தன மனைவி "ரமா" வோடு வேளியேறுகுறான்.அன்ற்றடம் வாழ்க்கையை நடத்த முடியாமல் திணரூகிறான் . கூலி  வேலைசெய்ய ஊர்  ஊராக சுற்று கிறான். 

சிலகாலம் கழித்து அவனுக்கும் அவன் மனைவிக்கும் மீண்டு தங்கள் கிராமம் செல்ல விரும்புகிறார்கள். ஆனால் எப்படி போவது.அன்றாடம் சாப்பாடுக்கே வழி இல்லாத நிலையில் கிராமம்  செல்ல செலவுக்கு பணம் வேண்டுமே.  

அவர்களுக்கு உதவ ஒருவியாபாரி ஒப்புக்கொள்கிறான்.அவன் "பன்றி " களை  விற்கும் வியாபாரி.அவன் கிராமம் கங்கை நதிக்கரையில் இருக்கிறது. ஆற்றைக் "கடந்து " அக்கறைய கொண்டு செல்ல வேண்டும். அங்கு நதியை கடக்க தோனியை பயன்படுத்துவார்கள்.

தோணியில் பன்றியை  ஏற்றமாட்டார்கள். "பன்றி "கள்  குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டு இருப்பவை தோணியை கவிழ்த்துவிடும் .அதனால் அவற்றை ஆற்றில் நீந்தவிட்டு மேய்த்துக் கொண்டு போகவேண்டும் . இது ,ஆபத்தனா பணி . இதில் தலித்துக்கள் தான்ஈடுபடுவார்கள்.நாகியாவும்,ராமாவும் கிடைக்கும் கூடுதல் கூலிக்காக அதனை ஏற்றுக்கொள்கிறார்கள்.

 ரமா கர்பமாக இருக்கிறாள். பிரும்மாண்டமான அகன்ற கங்கை நதியில் பன்றிகளை இறக்கி மேய்த்துக்கொண்டு செல்கிறார்கள். ஒடி ஆடி நீந்தும் பன்றிகள ஓட்டிச்செல்வது கஷ்டமாக உள்ளது. அதுவும் நதிபிரவாகத்தில் நீந்திக்கொண்டு செல்ல வேண்டும். ரமா தன கர்ப்பம் கலந்து விட்டதோ என்று நினைக்கிறாள். ஒருவழியாக அவ்ர்கள் கரையை அடைகிறார்கள். அது கரை  அல்ல. அது நடு நதியில் உள்ள மணல் திட்டு.அவர்கள் பாதி  நதி யைத்தான் கடந்திருக்கிரார்கள். சோர்வாக இருக்கும் ரமாவை  அணைத்துக்கொண்டு நாகிய  பன்றிகளை மேய்த்துக்கொண்டு செல்கிறான் . கரை அடைந்ததும் இருவரும் மணலில் விழுந்து மயங்கி விடுகிறார்கள். .விழித்தெழுந்த நாகியா மாணவி உயிரோடு இருக்கிறாளா என்ரூ அவ்ள் நெஞ்சில் காதுவைத்து பார்க்கிறான் . அவ்ள் வயிற்று  பகுதியிலிருந்து . சிசுவின் இதயம் துடிக்கும்சத்தம் நகியாவிற்கு கேட்கிறது. ராமாவிற்கும், நகியாவிற்கும் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்பதோடு படம் முடிகிறது.

நகியாவாக நசுருதீன்ஷா, ரமாவாக ஷபனா அஸ்மி இருவரும் சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதை பெற்றனர்.இயக்குனர் கெளதம்கோஷ், சிறந்த படம் என்று விருதுகளை அள்ளிக் குவித்தது. கேன்ஸ் திரப்பட விழாவில் ஷாவுக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்தது.அன்னியச் செலாவணியாக ஒர்லட்சம் டாலர் சம்பாதித்து கொடுத்தது.

ப்ஃன்றி (பன்றி )


ஜப்யா  பள்ளி மாணவன் . தலித் குடுமபத்தை சேரந்தவன் . மேல்சாதிக்காரர்கள் அவன நடத்தும் விதம்  அவனுக்கு பிடிக்கவில்ல .அவன வகுப்பில் படிக்கும் சாலி என்ற மேல்சாதி பெண்ண ஒருதலப்பட்சமாகவிரும்புகிறான் அவள் கவனத்தை கவர முயற்சிக்கிறான். சகமாணவர்கள் அவன கேலிசெய்கிறார்கள். 

ஊரில் விழா வருகிறது .விழாவின் போது பன்றிகள் தொல்லை  தரக்கூடாது என்பதால் பன்றிகளை விரட்டும்பணி ஜப்யா வின் வயதான தாய்,தந்தையின் பொறுப்பகிறது.  அவர்களுக்கு உதவியாக ஜப்யா பன்றிகளை விரட்டுகிறான். ஜப்யாவின் மேல்சாதி நண்பர்கள் அவனை கேலி  செய்கிறார்கள்.

 அவனை "பன்றி" என்று கூவி அழைக்கிறார்கள். கோபத்தில் ஜப்யா மேல்சாதி இளைஞன் மீது கல்லை எறிகிறான் . 

அந்த கல் காமிராவை நோக்கி வந்து  சாதீய கொடுமைகளை இன்றும் சகித்துக் கொண்டிருக்கும்  பார்வையாளர்கள் மிது விழுவதாக படம் முடிகிறது.

சிறந்த நட்சத்திரம்,சிறந்த இயக்குனர் , சிறந்தபடம் என்று சர்வதேச அளவில் 16 விருதுகளை இந்தபடம் பெற்றுள்ளது. இயக்குனர் நாராயண் மஞசுளெ தன்  அடுத்தபடமாக "சைரஹத் " என்ற படத்தை வெளியிட்டுள்ளார்.

"சைரஹத் "

(காட்டு மிராண்டிகள் )


பிட்டர் என்ற கிராமத்தை சேர்ந்தவன் பர்ஷியா .தலித் குடும்பத்தை சேந்தவன் பணக்கார மேல் சாதி ஆர்ச்சி யை காதலிக்கிறான். 

சாதி ஆண \வக்காரர்களீடம் இருந்து தப்பித்து வேற்றூர் சென்று விடுகிறார்கள். பதின்ம வயது காதலர்களுக்கு என்னவெலாம் சங்கடங்கள் உண்டோ அதை எல்லாம் சந்திக்கிறார்கள்.

ஆர்ச்சி கர்ப்பமாகிறாள் .அழகான குழந்த பிறக்கிறது. குழந்த பிறந்ததால் தன தாய் தந்தை  தன்னை ஏற்றுக் கொள்வார்கள் என்று ஆர்ச்சி நினைக்கிறாள். தன பெற்றொருக்கு தோலை பேசி முலம் தொடர்பு கொள்கிறாள். இதுவரை அவர்கள் என்கு இருக்கிறார்கள் என்று தேடியலைந்த சாதி ஆண \வக்கொளைகாரக்களுக்கு அவ்ள் இருப்பிடம் தெரிந்து விடுகிறது.இளவரசன்,கோகுல்ராஜ்,சங்கருக்கு நடந்தது பர்ஷியாவுக்கும்னடக்கிறது.சாதி ஆண்வக்ககொலை எந்த அளவுக்கு மிருகத்தனமானது அது எப்படி எல்லாம் காத்திருந்து கொல்லு மென்பதை இவ்வளவு வலிமையாக யாரும் பதிவு சொன்னதில்லை  என்று விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மகாராஷ்ட்ராவில் சக்கை போடு இந்தபடம் மூலம் மகாரஷ்டிரர்களை அவ்மானப்படுத்த்யதாக இயக்குனர் நாராயண் மஞ்சளே  மீது வழக்கு போட்டிருக்கிறார்கள்.

"என்று தணியும் " 

ஆணவக் கொலையை மையப்படுத்தி தமிழில் "என்று தணியும்"  என்று ஒரு படம் தமிழில் வந்துள்ளதாக கெள்வி பட்டேன்.வரும் ஜூலை மாதம் முதல் வாரம்  சென்னை வருகிறேன். பதிவுலக நண்பர்கள் அந்த படத்தை பார்க்க உதவ  வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் .


1 comments:

சிவகுமாரன் said...

ஏழு வருடங்கள் சிவகங்கயில் பணிபுரிந்தேன். மதுரையில் வசித்தேன். சாதிக்கொலைகளை,கவுரக்கொலைகளை நேரில் பார்த்திருக்கிறேன். அரசியலில், முற்போக்குக் கொள்கைகள் கொண்டவர்களே, தன் சாதி என்றுவரும் போது மிருகமாக மாறியதைக் கண்ணாரக் கண்டிருக்கிறேன். எந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள் என்று சொல்ல விரும்பவில்லை.