Thursday, May 05, 2016

"இது ஒரு மீள் பதிவு "







வடக்கே  புத்தன் சிந்தன்


V P C.....!!!


அப்பபோது மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகம் மதுரையில் செயல் பட்டு வந்தது !அங்கு சென்று சிறு சிறு பணிகளை ச் செய்வது உண்டு !


மாநில அளவில் நடை பெறும் நிகழ்ச்சி ஒன்றிற்கான எற்பாடுகளைச் செய்ய தலைவர்கள் வந்திருந்தார்கள் !தீர்மானங்கள் ,அறிக்கைகள் ஆகியவற்றை அவர்கள் சொல்லச்சொல்ல எழுதி கொடுக்க வேண்டும் .




சென்னையிலிருந்து வந்த அவர் சொல்லிக்கொண்டு வந்தார்! நான் எழுதி கொடுத்துக் கொண்டிருந்தேன் ! கிட்டத்தட்ட மதியம் 11 மணிக்கு பசித்ததால் உணவருந்த விரும்பினேன் ! "சரி ! எங்க போய் சாப்பிடப் போற ?" என்று கேட்டார் !


என் பையில் நான் கொண்டுவந்த தை சொன்னேன்! "நானும் சாப்பிடலாமா ?" 


நடுத்தர குடும்பம் ! நான் என்ன பஞ்ச பரமான்னமா கொண்டு வந்திருப்பேன் ! வெட்கமாக இருந்தது ! அவர் எவ்வளவு பெரியதலைவர்! 


பிரித்தேன் ! நான்கு கோதுமை பரோட்டா ! வெஞசனமாக தேங்காய் கலந்த கீரைக் கடைசல் !


 அவருக்கு இரண்டு,எனக்கு இரண்டு என்று பகிர்ந்தோம் ! 


"உன்மனைவி என்ன மலையாளப் பக்கமா?"என்று கேட்டார் !


"இல்லை தோழர் ! நான் நெல்லை மாவட்டம் ! ஆழ்வார்குறிச்சி ! திருவனந்தபுரத்து தொடர்பு உண்டு "என்றேன்!


"எங்கள் ஊர் காரர்கள் செய்வது மாதிரியே கீரை இருந்தது அதனால் தான் கேட்டேன்!"என்றார் !


நான் காப்பி குடிக்க சென்றேன்! அவர் காப்பி குடிக்க மாட்டார்! என்னுடன் காலாற நடக்கலாமென்று வந்தார்! மதுரை 1 ம் நம்பர் சந்திலிருந்து திரும்பி சித்திரை வீதியில் நடந்தோம்! அதன் முக்கில் தான் நகர் காங்கிரஸ் அலுவலகம் இருந்தது ! பலர் அவருக்கு வணக்கம் சொன்னார்கள் ! எனக்கு பெருமை தாங்கவில்லை ! முக்கில் உள்ள கோபி ஐயங்கார் கடைஅருகில்  காபி அருந்தினேன்  ! அவர் எதுவும் சாப்பிட மறுத்து விட்டார்! 


"ஆமா ! நீ என்ன பண்ற ?"


சொன்னேன் !


"கட்சில மேம்பராயிட்டயா?"


"இல்ல "  


"ஏன் ?"


என் வாய்க் கொழுப்பு ! 


"I  don't have any objection " என்றேன்!


கனமான கண்ணாடிக்குள் இருந்து  with a sharp look and broad smile 


"நீ பாதி உறுப்பினராகத்தான்முடியும் " என்றார்!


"ஏன் ?" 


"மறு பாதி கட்சிக்கு உன்னை உறுப்பினராக்க objection இருக்கக் கூடாதல்லவா!"  


எழுந்து செல்லமாக என்தலையில் குட்டி" வா! போகலாம் " என்றார்!


அவர் குட்ட வில்லை !


என்னை ஆசீர்வதித்தார் !என் கொழுப்பு கரைய !!


 இந்த ஆண்டும் என் உறுப்பினர் பதிவினை புதுப்பித்து விட்டேன் தோழா!


என்னை ஆசீர்வதியும்!!!


3 comments:

சிவகுமாரன் said...

யார் அவர் ?

kashyapan said...

v.p. chindhan -

”தளிர் சுரேஷ்” said...

அது மாதிரி தலைவர்களை தோழர்களை மீண்டும் காண முடியாதது காலத்தின் அவலம்!