Sunday, August 25, 2019




நாடக விழா ,

பற்றி, 

நிறைவாக ...!!!




23 இடுகை -தொடர்ச்சியாக நாடகம் பற்றி எழுதி வந்தேன் .

பேராசிரியர் Dr .ரவிக்குமார் (ஸ்ரீராசா ) அவர்கள் பலவருடங்களாக என்னை வற்புறுத்தி வந்தார். இடது சரி நாடக வளர்ச்சி பற்றி எழுதும்படி ! மதுரையில் இருக்கும் பொது எழுதாமல் இருந்து விட்டேன்.இப்பொது முதுமையும் இயலாமையும் சேர்ந்து புலம் பெயர்ந்து வந்த இடத்தில்  எழுத ஆரம்பித்தேன். 

எந்த தரவும் இல்லை . நினைவுகளை வைத்து எழுதினேன். காலவர்த்தமானங்களில் தவறு இருக்கும் வாய்ப்பு அதிகம் தான். கலந்து ஆலோசிக்கக்  கூட தமிழ் தெரிந்தவர்கள் இல்லை.

ஆனாலும் எழுதினேன் .எங்கே முடிப்பது என்று தெரியவில்லை .

1989ம் ஆண்டு  டிசம்பர் மாதம் 31ம் தேதி டில்லி அருகில் காசியாபாத்தில் "ஹல்லபோல் "  என்ற நாடகம் நடந்து க்கொண்டிருந்தது. ஜனநாட் யமஞ்ச் என்ற  சப்தர் ஹஷ்மியின் குழுவினர் நடத்தினார்கள். காங்கிரஸ் குண்டர்கள் அந்த குழுவினரை தாக்கினார்கள்> படுகாயமுற்ற சப் த்தர் ஹஷ்மி அடுத்தநாள் இறந்தார்.

இந்தியா புராவிலும் நாடகவியலாளர்கள் துடித்து எழுந் தனர் .தமிழகம் மின்சாரம் பாய்சசியது போல் எழுந்தது

கிராமம் நகரம் என்று பாராமல் தெருவுக்கு தெரு சப்தர் ஹஷ்மி  நாடக குழுக்கள் தேன்றின .நூற்றுக்கணக்கில் குழுக்கள் உருவாகின..

இந்த குழுக்களின் வரலாற்றினை ஆவணப்படுத்தவேண்டும். 

நான் ஒரு skeliton ஐ மட்டுமே செய்துள்ளேன். அதற்கு ரத்தமும் சதையும் நரம்பும் அளித்து அழகுபடுத்தவேண்டியது வருங்கால வரலாற்றாளர்கள் பணியாக விடுகிறன். 

இது ஒரு ஸ்கெலிடன் கூட அல்ல. சில குறிப்புகள் மட்டுமே . 

இந்த தொடரை இதோடு நிறைவு செய்கிறேன்...!!!


வாழ்த்துக்கள் ...!!!




 

 

0 comments: