Saturday, August 03, 2019

(நாடக விழாவை முன் நிறுத்தி )



" இ.கே .நயனாரு"ம் ,

"நினைவுகள் அழிவதில்லை " 

நாடகமும் ...!



கேரளத்தின் வட மேற்கில் உள்ளது காசர்கோடு வட்டம். .சுதந்திரத்திற்கு முன் அந்த பகுதி மதராஸ் மாகாணத்தோடு இணைந்திருந்தது.விவசாயிகள் குரூரமாக சுரண்டப்பட்டு வந்தனர்.

அவர்களுக்கு ஆதரவாக ஐந்து இளைஞர்கள் புறப்பட்டனர். இந்த அவலம் நீங்க  வேண்டுமானால்  பிரிட்டிஷாரை எதிர்த்து சுதந்திரத்திற்காக போராட வேண்டும் .என்று பிரசாரம் செய்தனர். 

பிரிட்டிஷ்  போலீஸ் அடக்கு முறையை ஏவி விட்டது . ஆயுதத்தோடு விவசாயிகள் நடத்தியதாக்குதலுக்கு இளைஞர்கள் தலைமை தாங்கினார்.பிரிட்டிஷ்  போலீஸ் தப்பி ஓடியது> அதில் ஒரு போலீஸ் காரன் ஆற்றுப்   பாலத்தில்  ஓடிக்கொண்டிருந்தவன் மக்களிடமிருந்து தப்பிக்க ஆற்றில்குதித்தான்.ஆற்றில் வெள்ளம் அதிகமிருந்ததால் இறந்தான்.

போலீஸ் இறந்த தற்கு காரணம் அந்த இளைஞ்சர்கள்  தான் என்று போலீஸ் அவர்களை தேடியது. மடதில் அப்பு,அபுபக்கர், சிறுகண்டன்,குஞ்சாம்பு , ஆகிய நால்வர் பிடிபட்டனர்.ஐந்தாவது இளஞன் கடைசிவரை பிரிட்டிஷ் போலீசிடம் பிடிபடவில்லை. 

வழக்கு நடந்தது.நான்கு இளஞர்களுக்கும் துக்கு தணடனை விதிக்கப்பட்டது.மதராஸ் உயர்நீதிமன் றம்  அதனை உறுதி செய்தது.

அந்த ளாவர் தான் "கையூர்தியாகிகள் " என்று கேரளா சுதந்திர போர் வரலாற்றில் இடம் பெற்றனர்.

கையூர் கர்நாடக கேரளா எல்லையில் உள்ளது. கர்நாடகத்தின் புகழ் பெற்ற எழுத்தாளரான நிரஞ்சனா இதனை  "சிராஸ்மரனே"என்ற அற்பு தமான நாவலாக எழுதினர்.கேரளத்து வீர வரலாறு முதன்முதலாககன்னட இலக்கியத்தின் பதிவு செய்யப்பட்டது.

பின்னர் அந்த நாவல் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டது.

இந்திராகாந்தி  அம்மையார் அவசர நிலையை அறிவித்த போது  தமிழக மார்க்சிஸ்ட் கடைசி தலைவர்களில் ஒருவரான பி.ஆர்.பரமேஸ்வரன் தலைமறைவாக இருந்தார்.அந்த சமயத்தில் அவர் அந்த நாவலை தமிழில் மொழி   பெயர்த்தார். "நினைவுகள் ஆழிவதில்லை "என்ற அற்புதமான இலக்கியம் தமிழுக்கு  கிடைத்தது  .  

வேலூரில் இருந்த அரசு ஊழியர்கள், வங்கி,இன்சூரன்ஸ் ஊழியர் ஆகியோர் ஒரு நாடகக்குழுவை அமைத்தனர்." நினைவுகள் அழிவதில்லை " என்ற நாவலை நாடகமாக்கினர்.தஞ்சை நாடக விழாவில் அதனை அரங்கேற்றினர்.


அந்த கையூர் தியாகிகள் தூக்கு மரம் ஏறும் காட்ச்சியை  குறிப்பாக அவர்கள் உடல் மறையும்போது "இன்குலாப் ஜிந்தாபாத்" என்று அவர்கள் முழக்கமிட்ட காட்சியை பார்வையாளர்களும் சேர்ந்து கோஷமிட்டதை என் வாழ்நாளில் மறக்க முடியாது. 

இயக்கத்தை விட்டு வெளியேறினாலும் இந்த நாடகத்தில் மாஸ்டராக நடித்த அரசு ஊழியர் சங்கத்தலைவர் கங்காதரன் மிகசிறப்பாக நடித்தார்என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும்.

நான்கு இளைஞர்களை பிடித்த பிரிட்டிஷ் போலிஸாரால்  அந்த ஐந்தாவது இளைஞனை பிடிக்க முடியவில்லை. ஆறு ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த அவன் சுதந்திரம் பெற்றபிறகு அவன் மீது போடப்பட்ட வழக்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. 

அந்த வீரமிக்க இளைஞன்தான் மூன்றுமுறை கேரளத்தின்முதல் அமைச்சராக இருந்த 

இ.கே . நாயனார் என்ற தீரன் !!! 

 

0 comments: