Thursday, August 01, 2013

தோழர் கே ,முத்தையா 

சில நினைவுகள் .....!!!

(தோழர்  என்.ராமகிருஷ்ணன் எழுதிய பிரசுரத்திலிருந்து )\\\



........................   சில சமயம் தோழர் முத்தையாவுடன் அரசியல் பிரச்சினைகளில் கடும் விவாதம் நடக்கும் ! பின்னர் அவரவர் வேலையில் இறங்கி விடுவோம் ! மாலையில் சுட்டுவிரலை அசைத்து அவருடைய அறைக்கு கூப்பிடுவார் !அங்கெ இரண்டு கோப்பைகளில் சூடான தேநீர் வைத்திருப்பார்! "குடியுங்கள்"  என்று சிரித்துக்கொண்டே கூறுவார் ! அத்துடன் காலை விவாதம் மறக்கப்பட்டு விடும்   ! தோழர்களை  கடுமையான சொற்களால் மனம் நோக வைத்துவிடக்கூடாது என்பது அவருடைய  கொள்கை !

"தீக்கதிர்" ஏட்டில் திரைப்பட செய்திகள் ,விமரிசனங்கள்,கலைஞர்கள் , மற்றும்கலை சம்மந்தமான செய்திகள் இடம்பெற வேண்டுமென்று கருதிய தோழர் ஆர்.சியாமளமும்  நானும் சேர்ந்து அவர் இல்லாத நாளில் ஒருபக்கம் முழுவதும் இத்தகைய செய்திகளைப் போட்டு  அதற்கு " வண்ணப்பூக்கள் " என்று தலைப்பிட்டு விட்டோம்! தோழர் முத்தையா என்ன சொல்வாரோ என்ற கவலையும் எங்களுக்கு இருந்தது! 

அடுத்த நாள்காலை சென்னையிலிருந்து  திரும்பிய  அவர்  "தீக்கதிர்" பத்திரிகையைப் படித்தார்.! ஒன்றும் கூறவில்லை  ! பேனாவை எடுத்து "பூக்கள்" என்பதை அடித்து "கதிர்" என்று எழுதினார் ! அதிலிருந்து அந்தப்பகுதி  "வண்ணக்கதிர்"  என்று வந்து கொண்டிருக்கிறது ! ............


வர் 

2 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு.

'பரிவை' சே.குமார் said...

தலைப்பிடவில்லை போலும் ஐயா...