Thursday, August 08, 2013

கீரை விலையும்,

காதல் வலையும்...!!!

ஒரு கிலோ கீரை 40 ரூ . ! ஒரு கிலோ கொத்தவரங்காய்  60 ரூ ! சன்ன அரிசியை விடுங்க ! சுமாரான அரிசி 50 ரூ !

அரிசின்னதும்  ஞாபகம் வருது ! அரிசியை வச்சுதான் கருணா நிதி அமைச்சரானார் ! 

ரூபாய்க்கு 3 படி ! அதாவது 5கிலோவுக்கு மேல வரும் ! போடறதாக சொன்னாங்க !

போடலைனா முச்சந்தில வச்சு சவுக்கால அடின்னாங்க  ! காங்கிரஸ் தொத்து போச்சு ! கருணாநிதி அமைச்சரானார் !

ரண்டுவருஷம் ஆச்சு ! காங்கிரஸ் காரன் ஆரம்பிச்சான் ! முச்சந்தில சவுக்க கட்டி     தொங்கவிட்டான் ! "சவுக்கு ரெடி ! எங்கே மூணு படி ! "  நு போர்டு எழுதிபோட்டான் ! 

"நானா சொன்னேன் !" அண்ணா " தான சொன்னார் !" நு சொல்லி கருணா நிதி அண்ணாவை முச்சந்தில நிறுத்தல !

அண்ணா அதுக்கு முன்னாலேயே இறந்து விட்டார் !

77ல பெற்றோல் ஒரு லிட்டரு 90 காசு ! அப்புறம் 1ரூ 10 காசு ! சன்னம் சன்னமா ஏறிச்சு ! இப்போ !..... பயம்ம்மா இருக்கு !

மதுரை ஆரப்பளையத்திலேருந்து  மகாலுக்கு பஸ் சார்ஜ் 6 பைசா ! அத டி .வி.எஸ் காரன்  9 பசாவா ஆக்கினான் ! கம்யுனிஸ்டு கட்சி மறியல் செய்தது !

இப்படி தீயா விலைவாசி ஏறிப்போச்சே ! பேப்பரை பாத்தம்னா அதவிட முக்கியமான பிரச்சினை சேரன் மக தாமினி காதல் தூள்   பறக்குது  ! 

உலகத்தையே புரட்டி போட வந்த சமூக வலைத்தளத்தை பாத்தோம்னா 
காதல் திருமணம் ,கலப்புத்திருமணம்  நு வியாசம் எழுதிக்கிட்டுருக்காங்க!

மே .வங்க இயக்குனர் மிருணால் சென் ! புனே திரைப்பட கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசினார் ! " நாம் சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் இந்தியனிடம் உன் எதிரி யார்  கேட்டால் பிரிட்டிஷ் ஏகாதி பத்தியம் என்பான் ! இன்று கேட்டால் மேல் சாதி இந்து தலித் என்கிறான் ! பிற்பட்டவன் பிராமணன் என்கிறான் ! நம் எல்லோருக்கும் எதிரி இந்த ஆளும் வர்க்கம் !நம் எதிரியை அடியாளம் தெரியாமல் ஆக்க நம்மை திசை திருப்புகிறார்கள் " என்றார் ! 


என்ன செய்யப் போகிறோம்  !!
  
சர்வேசா ! கருகத் திருவுளமோ !!!







 




4 comments:

'பரிவை' சே.குமார் said...

சர்வேசா ! கருகத் திருவுளமோ !!!

கரந்தை ஜெயக்குமார் said...

பாதை மாறிப் பயணிக்கிறோம் என்பது புரிகிறது

கரந்தை ஜெயக்குமார் said...

பாதை மாறிப் பயணிக்கிறோம் என்பது புரிகிறது

”தளிர் சுரேஷ்” said...

அருமையான கருத்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!