Monday, August 12, 2013

அரவிந்தன் நீலகண்டனும் ,

" நீயா -நானாவும் ".................!!!


ஞாயிறு அன்று "நீயா- நானா " நிகழ்ச்சி வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது ! 
இறை நம்பிக்கை யுள்ள மக்கள் பிரார்த்தனை செய்வதும் ,அதுபற்றி பார்வையாளர்களின் எதிர் வினையும் அலசப்பட்டது ! ஆண்கள்  ஒருபக்கமும்,பெண்கள் ஒருபக்கமுமாக அமர்ந்து பேசினார் ! விவாதத்தை சிரத்தையில்லாமல் தான் கவனித்து வந்தேன் !

கோபிநாத் மிகவும் நாசுக்காகவும் நயமாகவும் மனம் புண்பட்டு விடாமலும்கொண்டுபோனார் ! 39 வயதுப்பெண் ஒருவர் தனக்கு திருமணம் ஆகாத  நிலையில் இறைவனை வேண்டி பிரார்த்தித்ததை மனம் உருக சொன்னார் ! அவர் விரும்பியபடியே  கணவன் அமைந்ததையும், குழந்தை  வேண்டி பிரார்த்திப்பதையும் குறிப்பிட்டார் !

இறைவனிடம் உங்கள் பிரார்த்தநை நடந்தேறினால் அவருக்கு என்ன தருகிறேன் என்று நீங்கள் கூறுகிறீர்கள் என்று "கோபி " கேட்ட போது எனக்கு சுவாரஸ்யம் பிடித்துக்கொண் டது ! ஒரு அம் மையார் முடியை காணிக்கையாக்கி கொடுத்தாக குறிப்பிட்டார் !

"உங்கள் வேண்டுதல் நிறைவேறாவிட்டால் ?" என்று கோபி கேட்ட போது கோபபட்டு கோவிலுக்கு போகமாட்டேன் என்றார் ஒருவர் ! கர்த்தர் நமக்குக் கொடுத்தது அவ்வள்வுதான் என்றர் ஒரு அம்மையார் !

"உங்கள் வேண்டுகோள் நிறைவேறிய  பிறகு அதற்காக வருத்தப்பட்டது உண்டா ? "என்று கொபிகேட்டார் !

ஒரு இளம் பெண் மனம் உருக " நான் வருத்தப்பட்டிருக்கிறேன் ! என்னுடைய சித்தி என்மீது உயிரையே வைத்திருக்கிறார் ! அவருக்கு குழந்தை  பிறந்தால் அவருடைய பிரியம் குறையுமோ என்று எனக்கு பயமாய் இருந்தது! அதனால் அவருக்கு குழந்தை  பிறக்காமல் இருக்க பிரார்த்தித்தேன் ! அவருக்கு குழந்தை இல்லை ! இப்போது அதற்காக வருத்தப்படுகிறேன்! இதை நான் இப்போதுதான் முதன் முறையாக வெளியே   சொல்கிறேன் ! என்சித்திக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று மனமுருக பிரார்த்திக்கிறேன் !" என்றார் அழுதுகொண்டே !

சிறப்பு விருந்தினர்களாக "கவிக்கோ "அப்துல் ரஹுமான் கிட்டத்தட்ட ஒரு மவுல்வியின் தோற்றத்தில் வந்திருந்தார் !கிறிஸ்துவ பெரியவர் ஒருவரும் வந்திருந்தார் !

மூன்றாவதாக அரவிந்தன் நீலகண்டன் அமர்ந்திருந்தார் !

நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன் !

கவிக்கோவும் , கிறிஸ்துவப் பெரியவரும் வழமையாக பேசினார்கள் ! புதிய செய்தி  எதுவும் இல்லை !

"அரவிந்தன் ! தங்கள் பிரார்த்தனையின் மூலம் நடந்ததாகக் கருதுகிறார்களே ? இது பற்றி என்ன நினக்கிறீர்கள் ? " என்று கோபி கெட்டார் !

அரவிந்தன் " கேமிராவை தீர்க்கமாக பார்த்தார் ! அவர் முகத்தில் உறுதி தெரிந்தது ! "அறிவியல் ரீதியாக நடந்த பரி சோதனையில் அது உறுதியாக வில்லை " என்று கூறினார் !
"அல்Pஃஅ மைண்ட் " கோட்பாட்டை சொன்னார்!

( இந்த அண்டம் விரிந்து கொண்டே இருக்கிறது ! அதன் எல்லை விரிந்து கொண்டு இருக்கிறது  ! விநடிக்கு லட்சக்கணக்கான் மைல் வேகத்தில் விரிந்து கொண்டிருக்கிறது ! இந்தக்கணம் பார்த்த அகண்டம் அடுத்த கணத்தில் இல்லை !பெரிதாகியுள்ளது ! இதனை  கட்டுப்படுத்துவது யார் ? எந்த  விதிக்கு உட்படுகிறது ? அறிவியல் இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கிறது ! இந்தநிலையை ஆத்திகன் கடவுள் செயல் என்கிறான் ! அறிவியல் நான் இன்னும் ஆய்வு செய்ய வேண்டும் என்கிறது ! ஆத்திகமும்,நாத்திகமும் இந்தப்புள்ளியில் திகைத்து விக்கித்து நிற்கிறது ! இதைத்தான் "ஆல்பா மைண்ட் " என்கிறார்கள் என்றால் )

"அறிவியல் ஆய்வு சேய் து கொண்டே  இருக்கும்! விடை தெரியும் வரை !

அரவிந்தன் அவர்களே!
மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது !
என்னிடம் இல்லை  என்பதும்  புரிகிறது !!!











2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஆம் ஐயா. மாற்றம் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.

'பரிவை' சே.குமார் said...

உண்மைதான்... மாற்றம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது..