Tuesday, August 20, 2013

காந்தியைக் கொன்றவர்கள் தான் 

தபோல்கரையும் கொன்றுள்ளார்கள் .....!

முதலமைச்சர் குற்றச்சாட்டு !


டாகடர். நரேந்திர தபோலகர் செவ்வாய் கிழமை காலை நடை பயிற்சிக்கு போகும் பொது சுட்டுக் கொல்லப்பட்டார் !
புனே நகரத்தில் நடந்த இந்த சம்பவம்  மராட்டிய மாநிலத்தை பரபரப்பில் ஆழ்த்தி  உள்ளது !

மாநில முதலமைச்சர் பிருத்வி ராஜ் சவான் " காந்தியைக் கொன்றவர்கள் தான் தபோல்கரையும்கொன்றுள்ளார்கள் " என்றுகுறிப்பிட்டுள்ளார் !

மிராஜ் நகரத்தில் மருத்துவ கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற தபோல்கர்  மருத்துவ சேவையை விட்டு மக்களின் மூட  நம்பிக்கையை ஒழிக்க பணி செய்ய ஆரம்பித்தார்! 

அவருடைய அண்ணன் தேவதத்தா சொசலிஸ்கட்சியில் இருந்தார் ! 
தபோல்கர் மக்களிடையே செல்வாக்கு செலுத்திவரும் போலிச்சாமியார்கள், பூசாரிகள் ஆகியவர்களைஎதிர்த்து இயக்கங்களை நடத்திவந்தார் !

இதற்காக அகில பாரதிய மூட நம்பிக்கை ஒழிப்பு சங்கத்தில் சேர்ந்து பணியாற்றினார் ! இந்த அமைப்பின் தலைமை பா.ஜ.க விடம் இருந்தது ! திருடனிடமே சாவியைக் கொடுத்த  நிலைமையை உணர்ந்த தபோல்கர் மராட்டிய மூட நம்பிக்கை ஒழிப்பு இயக்கத்தை ஆரம்பித்தார் !

சர்வதேச பகுத்தறிவாளர் அமைப்புகளுடன் தொடர்பு கொண்டார் ! மூட  நம்பிக்கையினை ஒழிக்க சட்டமன்றத்தில் ஒரு மசோதாவை கொண்டுவரச் செய்தார் ! எல்லா கட்சிகளும் அதனை ஆதரித்தன ! பா.ஜ.க வும்,சிவசேனை மட்டும் அதனை கடுமையாக எதிர்த்தன !

வினாயக பூஜை செய்யும்பக்தர்களிடம் சிலையை ஆற்றிலோ குளத்திலோ போடாதீர்கள் என்று பிரச்சாரம் செய்தார் ! அதுவும் புனே நகரத்தில் கடுமையாக செய்தார் ! விநாயக சதுர்த்தி அடுத்தமாதம் வரவிருக்கும் நேரத்தில் பலநகரங்களில் இவருடைய குரல் பிரதி பலித்தது !

பொதுக் குளத்தில் தலித்துகள் தண்ணிர் எடுக்கக் கூடாது என்று மேல்சாதியினர் குரல் கொடுத்த மாநிலம் இது ! ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பொதுக்கிணறு தோண்டவேண்டுமென்று  இயக்கம் நடத்தினார் தபோல்கர் ! ஒரே கிணறு தான் என்றால் எல்லாப்பயல்களும் ஒரே இடத்தில தானே தண்ணீர் எடுக்க வேண்டும் ! 

தபோலகரின் இத்தகைய செயல்பாடுகள் இந்து வெறியர்களின் பகையை சம்பத்தித்திருக்கக் கூடும் என்று சமூக ஆர்வலர்களும் செயல்வீரர்களும் கருது கிறார்கள் !

செவ்வாய் கிழமை காலை நடை பயிற்சிக்கு சென்றவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சுட்டு   கொன்றிருக்கிறார்கள் !

மதத்தின் பெயரால் ,மூட நம்பிக்கையை வளர்த்து மக்களைச்சுரண்டும் போக்கை எதிர்த்து இயக்கம் நடத்திய டாக்டர்.நரேந்திர தபொல்கர் 
என்ற உண்மையான பகுத்தறிவாளர் அதற்காக தன் உயிரையே கொடுத்திருக்கிறார் !

(லண்டன் பி.பி.சி தமிழோசை நிருபர்  தபோல்கர் பற்றி நேற்று மாலை கேட்ட பொதும்  இதனையே என் பேட்டியில் குறிப்பிட்டேன் ) 








3 comments:

'பரிவை' சே.குமார் said...

சமூகத்திற்காக போராடிய தபோல்கர் பற்றி அறிந்து கொண்டோம்...
பகிர்வுக்கு நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

தபோல்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா.மிகவும் கண்டிக்கத் தக்க செயல்

அப்பாதுரை said...

very sad.