Thursday, February 09, 2012

சட்டமன்றத்திலேயே "கெட்டவார்தை படம்".......

சட்டசபையிலேயே "கெட்டவார்த்தை" படம்......

ஆப்கானிஸ்தானத்திலிருந்து பர்மாவரை இமயத்திலிருந்து குமரிவரை ஏன் முடியுமானால் கடாரமும் சேர்ந்து அகண்ட பாரதமாகும்வரை பிரும்மசாரியாகவே இருப்பதாக சத்தியம் செய்துள்ள பா.ஜ.க தலைவர்கள் உண்டு.தான் விரும்பிய பெண்ணை திருமணம்செய்ய முடியாமல் அந்தப்பெண்ணுக்கு திருமணமாகி அவளுக்குப் பிறந்த குழந்தையை " தன் " மகளாக நினைத்து வளர்க்கும் தலைவர்களும் உண்டு. சுப்பிரமணியம் சாமியைக் கேளுங்கள் -கதை கதையாக அவிழ்த்துவிடுவார்.அமைச்சராகி வெளிநாட்டு தூதுவர் கொடுத்த விருந்தில் குடித்து கும்மாளமிட்ட தலைவரை அம்பலப்படுத்தியவர் சுப்பிரமணிய சாமி .

பூனே நகரத்தில் "வைப்பாட்டியும்" மும்பைநகரத்தில் மனைவியையும் கொண்டு குடும்பம் நடத்தும் பா,ஜ,க அமைச்சர் உண்டு.சன்னியசினியாயிருந்தாலும் காதலில் வீழ்ந்த தலைவியும் அவர்களிடையே உண்டு.
இப்பொது கர்நாடகசட்டமன்றம் நடந்துகொண்டிருக்கும்போதே "கெட்டவார்த்தை" படம் பார்த்த அமைசர்களும் பா.ஜ.க.வில் இருக்கிறார்கள்.அதனை பார்த்த அமைச்சர்களில் ஒருவர் "பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை" அமைச்சர். அவர் கொடுத்த விளக்கம் அதைவிட கோடூரமானது. "அவர் ஒரு கருத்தரங்கத்தில் கலந்து கொள்ளவிருக்கிறாராம். "கும்பலாக கற்பழிபது" பற்றிய கருத்தரங்கமாம்.அதற்காக அமெரிக்காவில் நடந்த "கற்பழிப்பு" காணொளி" நாடாக்களை பார்த்துக்கோண்டிருந்தார்களாம் " .

இந்தப் பாவிகள் தான் ராமருக்கு கொவில் கட்டப் போகிறார்களாம். ராமர் பட்டாபிஷேக படத்தைப் பார்த்தால் சாதாரணமாக நாம் கன்னத்தில் பொட்டுக்ககோள்வொம். இவர்களுக்கு மனதில் சீதை மட்டும் நிர்வாணமாகத் தெரியும் வாய்ப்பு உண்டு..

2 comments:

John Chelladurai said...

"சட்டமன்றத்திலேயே "கெட்டவார்தை படம்"......." thalaippae aRumai ayya. It's an enticing title.
your righteous indignation is evident in the write up.
We hope to get more and more writings from you

பாரதசாரி said...

இந்த பதிவை சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்கு தெரிந்த மொழியில் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.மனுஷனா இருந்தா கடைசி வரி படித்ததும் ஒண்ணு இந்த அயோக்கியத் தனத்த விடனும் , இல்ல அரசியல விடனும் (உசுர விடற அளவுக்கு மானஸ்தனா இருக்க மாட்டாங்க).