Tuesday, April 09, 2013

சுனிதா வில்லியம்ஸ் ,

ஹரேன் பாண்டே ,

நரேந்திர மோடி ......!!!

இரண்டு நாளாக சில பத்திரிகைகள் நரேந்திர மோடி நாமாவளியை ஆரம்பித்து விட்டன! மோடி முதலமைசராக வருவதற்கு முன் செசுபாய் பட்டேல் முதலமைச்சராக இருந்தார்! சிறு வயதிலிருந்தே ஆர்.எஸ் .எஸ்  காரர் !

மோடி யும் அப்படிபட்டவர் தான்! உள்குத்து வேலைகளில் மோடி செசுவைவிட  கெட்டிக்காரர்! குஜராத்தில் பட்டேல் ஆதிக்கம் அதிகம் 1 மோடி காத்திருந்தார்! எம்.எல்.ஏ க்களை செட்டப்பண்ணி செசுவை பதவி இறக்கினார்!

வாஜ்பாய்,அத்வானி ஆகியோர் தலையிட்டனர்!     மோடி முதலமைச்சர்! செசுபாயின் ஆதரவாளர்கள் முக்கிய அமைசர் பதவி என்பது சமரசதிட்டம் !

சேசுவின் சிஷ்யர் ஹரேன் பாண்டே! உள்துறை அமைச்சரானார்! கோத்ரா சம்பவம்நடந்தது! எறிந்த சடலங்களை கோத்ராவிலிருந்து அகமதாபாத் கொண்டுவந்து காட்சிப் பொருளாக்கி இந்துக்களை உசிப்பிவிட திட்டம் தீட்டப்பட்டது! ஹரேன் பாண்டே இதனை எதிர்த்தார்! கடுமையான விளைவுகள் எற்படும்! அதனை   சமாளிக்கும் அளவுக்கு நம்மிடம் போலிஸ் இல்லை என்று அதனைத் தடுத்து விட்டார்! 

மோடி வேரு வழியில் தன வேலையை செய்து முடித்தார் !

உள் துறை அமைச்சரான பாண்டேக்கு பல விஷயங்கள் தெரியும்.! அவர் செசுபாய் ஆள்! அவர் வாயை அடைக்கவேண்டும் ! பாண்டே காந்தி நகரில் இருக்கும் அலுவலகம் வரும் போது  அலுவலக வாயிலில் அவருடைய கார் நிறுத்தப்பட்டது ! இரன்டு பேர்காருக்குள் இருக்கும் உள்துறை அமைசர்  பாண்டேயை சுட்டனர்! அவர் வாயை மட்டுமல்ல -அவருடைய உடலையும் துணியால் மூடிவிட்டனர்! 

சுனிதா வில்லியம் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர் தான் ஹரேன் பாண்டே! பாண்டேயின் மனைவியுடன் தான் தங்குவேன் என்று அறிவித்து விட்டார் !

கொலைகார மோடியை பார்க்க மறுத்துவிட்டார்!

2014ல் மோடி இந்தியாவின் பிரதமராவாரா!?

நீங்க ஓட்டு போட்டால் ஆகலாம்!

போட்றுவீங்களோ !!!







இரண்டு பேர் பாண்டெயைச் ச்ட்டுவுடு ஓடிவிட்டனர்!

0 comments: