Saturday, April 09, 2011

நூற்றி ஒன்றாவது இடுகை.....

நூற்றி ஒன்றாவது இடுகை.....
"செம்மொழியான தமிழ்மொழி" எனது நூறாவது இடுகை.2010ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தெதி வலை உலகத்தில் கால்வைத்தேன்.ஒருவருடம் ஆகவில்லை.நூறு இடுகைகள் முடிந்துவிட்டன
என்னை வலை உலகத்திற்கும் எனக்கு வலை உலகத்தையும் அறிமுகப்படுத்தியவர்கள் என் அருமை சாத்தூர் தொழர்கள் காமராஜும், மாதவராஜும் தான்.சாத்துரில் இருந்தவாரே எனக்கு "முகப்பு" ஈற்பாடு செய்தவர் தோழர் மாதவரஜ் . நாகபுரியில் உள்ள இந்திய அமைதி மையத்தின் இயக்குனர் Dr.ஜாண் செல்லதுரை அவர்கள் தட்டச்சே தெரியாத எனக்கு தமிழில் இடுகையிட ஏற்பாடு செய்து தந்தார்.
என்னுடைய முதல் இடுகைகு முதல் பின்னூட்டமிட்டவா நான் தொண்டனாக செயலாற்றிய அகில இந்திய இன்சூரன்சு ஊழியர் சங்க தலைவர்களில் ஒருவரான E.M .ஜோசஃப் அவர்களுக்கு என் நன்றி.
பத்திரிகை யாளர்கள், குமரேசன்,கணேஷ் மற்றும் S.V.V ஆகியொர் அளித்த உந்துதலுக்கு நன் மிகவும் கடமைப்பட்டவன். வெளிநாட்டிலிருந்து தோழர் ஹரிஹரன், அப்பாத்துரை பாரதசாரி ஆகியோர் விவாதங்களில் பங்கெடுத்து செழுமைபடுத்தினார்கள். தோழர் இக்பால்,கவிஞர் சிவகுமரன் ஆகியொரின் உற்சாகமான வரவேற்பு மறக்கமுடியாதவைகள்.
பதிவுலக் நண்பர்களே! உங்கள் அத்துணை பெரையும் பெயர் குறிப்பிட்டு எழுத ஆசைதான். முடியவில்லை.
உங்களிடம் ஒரு வேண்டுகேள் இந்த நூற்றி ஒன்றாவதுஇடுகைக்கான பின்னூட்டங்கள் என்னுடைய இடுகைகள் பற்றிய உங்கள் மதிபீடுகளாக இருக்கவேண்டும் என்று விருப்பப் படுகிறேன். அது என்னை மேலும் வளர்த்தெடுக்கும் என்பதால்---காஸ்யபன்

Friday, April 08, 2011

செம்மொழியான தமிழ் மொழி......

செம்மொழியான தமிழ் மொழி........
தமிழ் செம்மொழியாவதற்கான முயற்சிகள் 19ம் நூற்றாண்டுகளீன் இறுதியில் துவங்கிவிட்டான. மதுரையில் வசித்த புலவர் சூரியநாராயண சாஸ்திரியார் செம்மொமொழியாக தமிழை அறிவிக்கவேண்டும் என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்தினார். தமிழ் மொழியின் தொன்மை,இலக்கியவளம்,இலக்கணம் என்பதை பகுத்தாய்ந்து விளக்கினார்.தமிழ் மீது கொண்டிருந்த ஆர்வம் காரணமாக சூரிய நாராயண சாஸ்திரி என்ற தன் பெயரை பரிதி மால் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார். இன்றும் மதுரை குட் ஷெட் தெருவில் அவர்பெயரில் ஆரம்பப் பள்ளி நடந்து வருகிறது.ஆனலும் செம்மொழி என்று தமிழை அங்கீகரிக்க அரசு தயங்கியே வந்துள்ளது.
அவ்வப்போது இது பற்றி கோரிக்கைகள் வைக்கப்பட்டாலும் தொடர்ச்சியான இயக்கம் என்று எதுவும் நடைபெறவில்லை.
1975ம் ஆண்டு அவசரநிலைகாலத்தின் போது இடதுசாரி எழுத்தாளர்கள் கலைஞர்கள் சேர்ந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்று ஒருஅமைப்பை உருவாக்கினர்.இந்த அமைப்பு எழுத்தாளர்களின் உரிமைகாக்கவும், தமிழ் மொழியின் உயர்வுக்காகவும் குறிப்பாக கோரிக்கை வைத்து பொராடியது. அந்த கோரிக்கைகளில் ஒன்று தான்" தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிப்பது" என்பதாகும்.
மாவட்டம்தோறும் மாநாடுகள் நடத்தி அங்கு இந்தக்கோரிக்கயை வலியுறித்தினார்கள் தமிழகத்தின் மூலைமுடுக்குகளிலும்,சிற்றூர்களிலும், சிறுநகரங்களிலும் ,பெருநகரங்களிலும் கருத்தரங்குகள நடத்தி மக்களைத்திரட்டினார்கள்.பண்டிதர்களின்,படித்தவர்களின் கோரிக்கையாக இருந்ததை மக்களின் நலம்சார்ந்த கொரிக்கையாக உருவாக்கினார்கள்.இதற்காக இவர்களை ஏளனம் செய்தவர்கள்,ஏகடியம் சொல்லியவர்கள் உண்டு.
இறுதியாக டெல்லி சென்று நாடாளுமன்றத்தின் முன்னால் ஆர்ப்பாடம் நடத்துவது என்று முடிவு செய்தார்கள். சாயப்பட்டரையில் வெளை செய்யும் கவிஞன், கைத்தறியில் நேய்யும் நாடகக் கலைஞன், பொக்குவரத்துதுறையில் பாட்டுப்பாடும்மக்கள் இசைஞன், மத்திய மாந்ல அரசு ஊழியன், வங்கி,இன்சூரன்சு,ஊழியன், மாணவர்கள், ஆசிரியர்கள் என்று ஒருபட்டாளம் புறப்பட்டது.அவரவர்கள் அவரவர்கள் செலவை அவர்களே எற்றுக்கொள்வது என்று முடிவானது. இவர்களை ரயிலில் பத்திரமாக கூட்டிக்கொண்டு திரும்பி வருவது என்பது சாதாரண காரியமல்ல. மாநிலத்தில், தி.மு.க. மத்தியில் ப..ஜ க
எந்த உதவியையும் .எதிர்பார்க்க முடியாது.
இந்த படைக்கு உதவியாக இருந்தவர்கள்,மதுரை எம்.பி காலம் சென்ற பி.மோகன்,
வை.கோ,சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர்.டெல்லி வருபவர்கள் தங்குவது உணவு ஆகியவற்றிர்க்கு தோழர் மோகன் ஏற்பாடு செய்தார் .பிரதமரைச்சந்திப்பது,தமிழக எம்.பிகளின் ஆதரவை திரட்டுவது ஆகியவற்றை மோகனும் வை.கோவும் கவனித்துக்கொண்டார்கள்.
2001ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சென்னையிலிருந்து புறப்பட்டோம். டில்லி ஜந்தார் மந்தாரிலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. நாடளுமன்றம்வரை செல்லவிடாமல் டெல்லி போலீஸார் தடுத்துவிட்டார்கள்.ஊர்வலத்தில், தொழர் மோகன், மதுரை கிழக்குத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொழர் நன்மாறன்,வை.கோ,சுதர்சன நாச்சியப்பன், இந்தி உருது எழுத்தாளர் சங்கதலைவர் சஞ்சல் சௌஹான், எழுத்தாளர் சங்கத்தலைவர் அருணன், குசிபா,மெலாண்மை, காஸ்யபன், டாக்டர்.ரவிகுமார்(ஸ்ரீரசா) என்ரு ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
பிரதமர்,வாஜ்பயை , சந்தித்து மனு கொடுத்தோம்.அப்பொது,நன்மாறன், மோகன், காஸ்யபன்,சுதர்சன நாச்சியப்பன்,வை.கோ, அருணன் ஆகியோர் இருந்தனர். அ.தி.மு.க எம்பி மலைச்சாமி அவர்கள் வருவதாக இருந்தார். திடீரென்று சென்னை செல்ல வேண்டியதிருந்த்தால் கலந்து கொள்ளவில்லை
ப.ம.க எம்பிகள் ஒரு சிலர் மனுவில் கையெழுத்திட்டிருந்தனர்
மனுவை படித்து அருணன் பிரதமர் வாஜ்பாயிடம் கொடுத்தார். பிரதமர் பதிலாக We are working on it. என்று கூறினார்.
தமிழ் செம்மொழியாக பின்னர் காங்கிரஸ் ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.
திருப்பூர் சாயப்பட்டறைத்தொழிலாளிக்கும், செல்லூர் கைத்தரித் தொழிலாளிக்கும் இதில் பங்கிருந்தது என்பதை பதிவு செய்வதே என் நோக்கம்.
என்ன செய்ய! ஆயிரம் எறும்புகள் மழை வெய்யில் என்று பாதிக்கப்படாமல் இருக்க கரையனால் புற்றெடுக்க மட்டுமே முடியும்!

Monday, April 04, 2011

ப.நெடுமாறனும் குமரி அனந்தனும் ....

ப.நெடுமாறனும் குமரி அனந்தனும்........
பதிவர் ஹரிஹரன் அவர்கள் ஜனதாகட்சி எப்படி பெரிய்யண்ணன் பார்வையால் சீரழிந்தது என்பதைச்சுட்டிட்டிக்காட்டி யிருந்தார். அவர் குறிப்பிட்டது மே.வங்கம் பற்றியது. தமிழகத்திலும் அது நடந்தெறியது.
1975ம் ஆண்டு காமராஜர் மறைந்தார். ப.நெடுமாறன் "காமராஜ் கம்கிரஸ் கட்சியின் தலைவரானார். குமரி அனந்தனோ "காந்தி காமராஜ் 'கட்சியின் தலைவரானார். மற்ற கட்சி தலைவர்களிடையெ நெடுமாறனுக்கு நல்ல செல்வாக்கும் மரியாதையும் இருந்தது. குமரி அனந்தன் ஜனதாவொடு இணைந்தார். எம்.பி ஆனார். தமிழக ஜனதா தலைவர்களில் ஒருவரானர். டெல்லி தலைமைக்கு மிகவும் நெருக்கமானார். அவருடைய ஆட்டம் ஆரம்பித்தது.
1978ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஜனதா கட்சியொடு சேர்ந்து செயல் பட மார்க்சிஸ்ட் கட்சி நினைத்தது.. அப்போது மார்க்ஸிஸ்ட்கட்சியின் செயலாளராக முதுபெரும் தோழர் எம்.ஆர்.வெங்கடராமன் இருந்தார். 30ம் ஆண்டுகளில் ஒரு "ஈரங்கிக்கு" 1000 ரூ வாஙகும் வக்கீலாக இருந்தார். வருவாயைத் துச்சமென கருதி சுதந்திரப் போராட்டத்தில் சேர்ந்தார் காங்கிரஸ் சொசலிஸ்ட், கம்யுனிஸ்ட் என்று வளர்ந்தார் ஜனதா கட்சியின் பெச்சுவார்த்தை அனந்தனோடு நடக்க வேண்டும்.
ஏம்.ஆர்.வி அவர் வீட்டிற்கு போனால் ஹோட்டல் ரூமில் இருக்கிறார் என்பார்கள். ரூமுக்கு சென்றால் தூங்ககு கிறார் என்பார்கள்." கண்ணாமூச்சி. "ஆடினார்.
அப்பொது நான் மதுரையில் இருந்தேன்.மூத்த தொழர் ஆர்.ராமராஜ் அவர்களை எனக்கு பழக்கமுண்டு. தேர்தல் பற்றி பெசிக்கொண்டிருந்தேன்."என்னப்பாசெய்ய! ஜனதாகாரன் கண்ணாமூச்சி ஆடறான்.ஓண்ணும் இப்ப சொல்லமுடியாது" என்றார்."தோழர்!எது.எப்படியானாலும் சரி. இந்த தனியா நிக்கணும்கிற பரிசோதனையை மட்டும் செய்யாதீர்கள்" என்றேன். நான் கிளம்பினேன்."டேய் கண்ண! எண்டா பேசாம ஏம்.ஜி.ஆர். கூட சேர்ந்தா என்ன? " என்றார்.என் மூளைக்குள் எதோ நெளிவது போல் தோன்றியது.நான் கிளம்பிவிட்டேன்
வீட்டிற்கு போனதும் நான்கு நட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி நினவு தட்டியது. நான் அலுவலகத்திலிலிருந்து என் ஸ்கூட்டரில் வந்து கோண்டிருந்தேன். அப்போது "தீக்கதிர் " பத்திரிகையின் நிருபர் தோழர் நாராயணன் என்னை நிறுத்தினார். மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் அவர்களை சந்திக்க வேண்டும் .என்னை அழைத்துச்செல்லுங்கள்" என்று கெட்டுக்கொண்டார்.நானும் சரி யென்றேன். வழியில் தேநீர் அருந்த நீன்றோம். ."என்னப்பா! திடீர்னு எ.பி யை பாக்கப்போற! "என்று நான் கெட்டேன். "இல்லைஜி! நெடுமாறன் ஏ.பி.ஐ பாக்கணும் அவருக்கு சௌகரியப்படுமா! " என்று பாக்கச்சொன்னார்" என்று நாராயணன் கூறினார். இது எனக்கு முக்கியமான தகவலாகத் தோன்றியது. எங்கள் தொழர் நாராயண சிங் அவர்களிடம் தெரிவிக்க புறப்ப்ட்டேன்.
அவர் வீட்டிற்கு போகும் திருப்பத்தில் மெயின் ரோட்டிலேயே அவரைப் பார்த்துவிட்டேன்." முடிஞ்ச்சுடுத்துப்பா! என்றார்." ஜனதாவுடனா? எத்தனை" என்று கேட்டேன். "இல்லைப்பா! எம்.ஜி.ஆரொடு"
மறு நாள் பத்திரிகையில் செய்தி."ஏம்.ஜி.ஆரோடு மார்க்சிஸ்ட் தொகுதிஉடன்பாடு.. என்றுவந்தது."இடதுசாரி-ஜனநாயக கட்சிகளின் கூட்டுக்குழு தலைவர் நெடுமாறன்", என்றும் வந்திருந்தது.
முதன் முதலாக அ.தி.மு.க.வுடன் மார்க்சிஸ்ட் கட்சி உடன்பாடு கொண்டது.
முதன் முதலாக எம்.ஜி. ஆர். முதலமைச்சரானார்.

Friday, April 01, 2011

ஜோட்டால (செருப்பால) அடியுங்களேன்............

ஜோட்டால (செருப்பால) அடியுங்களேன்............
1967ம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிந்ததுமே இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சியின் பிடி நெகிழ ஆரம்பித்துவிட்டது. 1969ல் கட்சியில் பிளவு எற்பட்டு காங்கிரஸ்(இந்திரா) ,காங்கிரஸ் (ஓ) என்றும் உருவாகிவிட்டது. இந்திரா அம்மையார் தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள,1971ம் ஆண்டு தெர்தலை நடத்தினார். இந்தத் தேர்தலில் உ.பீ யில் அவரை எதிர்த்து ராஜ்நா ராயணன் என்பவர் நின்றார்.இந்திரா அம்மையார் வெற்றி பெற்றார். ராஜ் நாராயணன் வழக்குப் பொட்டார். தெர்தலில் தில்லுமுல்லு செய்ததாக வழக்கு. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வந்தது.
அலகாபாத் நீதிமன்றம் 1975ம் ஆண்டு இந்திரா அம்மையாரின் தேர்தல் செல்லாது என்று தீர்ப்பளித்தது. திகைத்துப் போனார்.என்ன செய்வது என்று தெரியாமல்திக்குமுக்கடினார். தன்னைக்காப்பாற்றிக் கொள்ள பல முயற்சிகளை எடுத்தார். "ராணுவ ஆட்சியைக் கொண்டுவருவதுஎன்று திட்டம் போடப்பட்டது பின்னர் தேர்தல் நடத்தி ஆட்சிக்கு வருவது.ஆனால் அப்பொது தளபதியாக .இருந்தவர் இந்தியா ஒரு ஜனநாயக நாடு. என்று கூறி மறுத்துவிட்டதாக ஒரு செய்தியும் உண்டு. அம்மையர் தளர்ந்து விட வில்லை. அவசர நிலையை அறிவித்து மக்களின்சகல உரிமைகளையும் பறித்தார். தலைவர்கள் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியினர் சித்திரவதை செய்யப்பட்டனர். யாரும் கெள்வி கெட்க முடியாது. "ஒரு அதிகாரி விரும்பினால் துப்பாகியால் ஒருவனை சுட்டுக் கொல்லலாம் யாரும் கெட்க முடியாது" என்று உச்ச நீதிமன்றத்தில் அரசு வக்கீல் கொக்கரிக்கும் அளவுக்கு நிலமை பொய்விட்டாது. கருணாநிதியின் அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அவர் செய்த ஊழலை விசாரிக்க சர்க்காரியா கமிஷன் போடப்பட்டது.
இந்த அக்கிரமம் ,அவசர நிலை 1977ம் ஆண்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு தேர்தல் நடந்தது. இந்திரா அம்மையார் தேர்தலில் நின்றார்.அவரை எதிர்த்து பிரசாரம் செய்தார் ராஜ் நாராயணன்." இந்தியமக்களே! மிகுந்த துயரத்தையும், துன்பத்தையும் அனுபவித்து விட்டீர்கள் இதற்குக் காரணம் நான் தான்.இந்திரா அம்மயாரை எதிர்த்து போட்டியிட்டேன். அவர் வென்றார். நான் விடவில்லை. வழக்குப் போட்டேன். அவர் வென்றது செல்லாது என்று தீர்ப்பு வந்தது. அதனால் தானே அவசர நிலை வந்தது. நீங்கள் சித்திரவதை செய்யப்பட்டீர்கள். உங்கள் துண்பத்திற்குக் காரணம் நாந்தனே! என்னை உங்கள் ஜோட்டால்( செருப்பால்) அடியுங்கள். இல்லையென்றால் உங்கள் வோட்டால் அடியுங்கள் என்றார்.
மக்கள் அவரை வோட்டால் அடித்து வெற்றி பெறசெய்தனர். இந்திரா அம்மையார் தோற்றார்.

1967ம் ஆண்டு தேர்தல்..................

1967ம் ஆண்டு.சுதந்திரம்வாங்கியதிலிருந்து 20 ஆண்டுகளாக கங்கிரசுதான் ஆள்கிறது.இதனை மாற்ற வேண்டும். எப்படி மாற்ற? எதிர்கட்சிகள் ஒன்று பட்டு நின்றால் தான் அதுமுடியும். தலைவர்களிடையே திவிரமாக விவதம் நடந்த்து.காங்கிரஸ் சிறுபான்மை வாக்குகளைப் பெற்று பெரும்பான்மை இடங்களை பெறுகிறது. ஆட்சியையும் அமைக்கிறது. இதனை மாற்ற காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகள் சிதறாமல் செய்ய வேண்டும். பலவிதமான ஏற்பாடுகள் விவாதிக்கப்பட்ட்ன.வடமாநிலங்களில் சம்யுக்த விதாயக் தள் என்றார்கள்.S.V.D என்று உருவானது. காங்கிரசை எதிர்த்து ஒரேஒரு வெட்பாளர் நிற்பார்.அவருக்கு காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆதரவு அளிக்கும். இது 1967மாண்டு மிகப் பெரிய மாற்றததை இந்திய அரசியலில் உருவாக்கியது..
பஞ்சாப்,பீஹார்,உ.பி,மத்தியபிரதேசம்,ஒரிசா,என்று காங்கிரஸ் அல்லாத ஆட்சிகள் வந்தன.இடது ஜனநாயக முன்னணி மே.வங்கத்திலும், ஜனநாயக இடது முன்னணி கேரளத்திலும் வந்தது. தமிழகத்திலும் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன.காலம் சென்ற முதலமைசரும் தி.மு.க.தலைவருமான சி.என். அண்ணாத்துரை அவர்கள் இதில்முழு மூச்சாக இறங்கினார். திமுக வொடு ஆறுகட்சிகள் சேர்ந்து செயல் பட முன் வந்தன.
தமிழகத்தில் அப்போது ராஜாஜி தலைமையில் முழுக்க முழுக்க வலதுசாரி பிற்போக்கு தன்மையோடு " சுதந்திரா" கட்சி செல்வாக்கொடு இருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுதந்திராக்கட்சியை கடுமையாக எதிர்த்து வந்தது. காங்கிரஸ் எதிர்ப்பு முனைமழுங்கும் நிலை கிடத்தட்ட உருவாகியது.அண்ணாதுரை அவர்களும், மார்க்சிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி அவர்களும் இது பற்றி விவாதித்தார்கள்.
"எந்த எந்த தொகுதியில் யார்யாருக்கு செல்வாக்கு இருக்கிறதோ அவர்கள் நிற்கட்டும். மற்றவர்கள் தங்கள் ஆதரவை செல்வாக்குள்ள கட்சிக்கு போடுவோம். நாம் நமக்குள் தொகுதிகளைப் பிரித்துக்கொண்டு உடன்பாடு காண்பொம்" என்று பிராமமூர்தி கூறினார். "சுதந்திராகட்சி எங்கு நின்றாலும் நாங்கள் எதிர்ப்போம். உடன் பாடு என்பது தி.மு.க. மற்று முள்ள கட்சிகளுடன் தான். அவரவர் கொள்கை அவரவருக்கு." என்றும் அவர் கூறினார்.
. சென்னை விருகம் பாக்கத்தில் நடந்த மாநாட்டில் உடன் பாடு பற்றி அறிவித்த அண்ணாத்துரை அவர்கள்"தி.மு.க வொடு மார்க்சிஸ்ட் கட்சி, தி.மு.க வொடு சத்ந்திராகட்சி, திமுகவொடு சொசலிஸ்டு கட்சி ........... என்று தொகுதி உடன்பாடு உருவாகியுள்ளது என்று அறிவித்தார்.
நாகர் கோவில் நாடளுமன்ற தொகுதியில் சுதந்திரா கட்சி வேட்பாளர எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராக எம்.எம்.அலி நின்றர்கள். மதுரையில் பி.ராமமூர்த்தி அவர்கலை எதிர்த்து டாக்டர் சந்தொஷம் சுதந்திராகட்சியின் சார்பில் நின்றார்கள்.அப்போது கிழே விழுந்த காண்கிரஸ் தமிழ்கத்தைப் பொறுத்தவரை இன்னும் எழவில்லை.
என்ன செய்ய? தமிழகத்தின் துரதிர்ஷ்டம்! அண்ணாத்துரை அவர்கள் 1969 ம் ஆன்டு மறந்தார்கள்.கருணாநிதி முதலமைச்சாரானர். ஐந்து ஆண்டுகள் ஆட்சிசெய்யலாம் என்றாலும் நாலாவது ஆண்டே சட்டமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்கு உத்திரவிட்டார்.
. "குஷ்டரொகியின் கையில் இருக்கும் வெண்ணை" என்று காங்கிரசை வர்ணித்தார் அண்ணாத்துரை அவர்கள். முதன் முதலாக தி.மு.க தேர்தலை காங்கிரசோடு கைகோர்த்து சந்தித்தது.அப்போது திமு.க வின் தலைமையை அலங்கரித்தவர் கருணாநிதி. என்ன நிர்ப்பந்தமோ!