Wednesday, September 04, 2013

2013 பால்ராஜ்  சஹானியின் நூற்றாண்டு .....!!!



1913ம் ஆண்டு மே மாதம் முதல் தேதியில் பிறந்த  பால் ராஜ் சஹானியின் நூற்றாண்டு இது ! கேன்ஸ் விழாவில் சிற்ந்த நடிகருக்கான விருது பெற்ற அவரைப்பற்றி ஓசைப்படாமல் இருந்து விட்டது இந்திய திரைப்பட உலகம் !

ராவல் பிண்டியில் பிறந்த  பால்ராஜ் ஆங்கில இலக்கியத்தில் எம்.எ படித்தவர் ! காந்தியின் ஆலோசனையின் பேரில் பி.பி.சி யில் பணியில்செர்ந்தார் ! பிரிவினக்குப்பின் இந்தியா வந்தார் ! கம்யுனிஸ்ட் கட்சியோடு நெருங்கியிருந்தார் ! அகில இந்திய வாலிபர் சம்மேளனத்தை கட்டி அமைத்தார் ! அதன் முதல் தலைவரும் அவரானார் !

மும்பை திரைத்துறை அவரை வரவேற்றது ! அன்றய இடது சாரி கலைஞர்களான கே.ஏ .அப்பாஸ், குருதத், திலிப் குமார் ,தேவானந்த் ,ஆகியோரோடு இணந்து இந்தி  துறைக்கு அடையாளமாக திகழ்ந்தார் !

இந்திய மக்கள் நாடக மன்றம்  உருவான போதும் பின்னர் அதன வழி நடத்திய கலைஞர்களில் அவரும் ஒருவர் !திரைப்படத்துறையில் இடது சாரிகளின் பிடியை சகிக்காதவர்கள் இவர்களைஓரம்கட்ட ஆரம்பித்தார்கள் ! ஆட்சியாளர்களும் இதற்கு தாளம் போட்டனர் ! பால்ராஜ் சஹானி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் !

கம்யூனிஸ் கட்சியிலிருந்து விலகி விடுமாறு அவருக்கு ஆலோசனை என்ற பெயரில் மிரட்டல்விடுக்கப்பட்டது ! பாலராஜ் மசியவில்லை !

நீதிமன்றத்தை  நாடி அவர் நடிக்கும் படங்களின் முதலீடுகருதி அவரை நடிக்க அனுமதிக்க வேண்டும் என்று முதலாளிமார்கள் கேட்டுக் கொண்டனர் !

சிறையிலிருந்து படப்பிடிப்பு தளத்திற்கு போலிஸ் வாகனத்தில் காலை  8 மணிக்கு வரலாம் ! படப்பிடிப்பு முடிந்து மாலை 5 மணிக்கு மீண்டும்போலீஸ்
 வாகனத்தில் சிறையில் அடைக்கப்படவேண்டும் என்று நீதி மன்றம்
உத்திரவிட்டது !

சிறையிலிருந்து கொண்டே  நடித்துக் கொடுத்த அந்த கலைஞன் பிறந்த நூற்றாண்டு   இது !

நமக்கென்ன !

 ரசனி இருக்காரு !
கமல் இருக்காரு !!
அசித் இருக்காரு !!!
விசய் இருக்காரு

அப்புறம் வேறென்ன வேணும் !




































































































































































 !!!!











0 comments: