Monday, August 21, 2017






"துர் சொப்ன நகரே "


(     city of nightmare         )    





வங்கதேசம் உருவானது 1971 ம் ஆண்டு. அதன் வெற்றி மேற்கு வங்கத்தில் சித்தார்த்த சங்கர் ரே தலைமையில் ஒரு அரை பாசிச ஆடிசியை கொண்டு வந்தது.அப்போது நடந்த தேர்தலில் மார்க்சிஸ்டுகள் கொல்லப்பட்டனர். வாக்கு சாவடிகள் சூறையாடப்பட்டன . ஜோதி பாசு அவர்கள் தொகுதியில் வாக்காளர்கள் வாக்கு சாவடிக்குள் போகவிடவில்லை .அவர்களே வாக்குகளை போட்டுக்கொண்டார்கள். காங்கிரஸ் கடசியின் மாணவர் இயக்கமான சத்ரபரிஷத்  குண்டர்கள் இதனை அரசின்பாதுகாப்போடு  செய்தனர்.

அப்போதுமாணவர் அமைப்பின் தலைவர்களாக இருந்தவர்கள், மம்தா பானர்ஜி,சுபத்ரோ முகர்ஜி,பிரியறஞ்சன் தாஸ் முன்ஷி  ஆவார்கள்.


தேர்தலமோசடியை கண்டித்த ஜோதி பாசு, அரசு அவர்தோறறார்  என்று அறிவிக்கும் முன்பே conceded defeat . 280 தொகுதியில் 14 தொகுதியில் மார்க்சிஸ்டுகள்  வென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலைமையை சட்ட பூர்வமாக சமாளித்து மார்க்சிஸ்க்கட்சி. 

சட்டமன்றம்  an assembly of fraud என்று ஜோதிபாசு அறிவித்தார். ஐந்து ஆண்டுகள் சட்டமன்றத்தை மார்க்சிஸ்ட் கடசி புறக்கணித்தது. 


14 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படும் வரை காத்திருந்த 14 பெரும் தேர்தல் அதிகாரியிடமிருந்த அந்த அறிவிப்பை வாங்க மறுத்தனர் .இதன் காரணமாக தேர்தல் முறைமை முடிவானதாக கொள்ள முடியாதுசட்டமன்றத்திற்கு வராத உறுப்பினர்கள் பெயரை நீக்கவும் முடியாது> சித்தார்த்த சங்கர் ரே மறு  தேர்தலும் நடத்தமுடியாது .


தெருவில்,விதிகளில்,வீடுகளில், சாலைகளில் ,அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதனை எதிர்த்து எழுத்தாளர்களும் கலைஞர்களும் விஸ்வரூபமாக  எழுந்தனர் .


70ம் ஆண்டுகளிலிருந்தே சிறையில் இருந்த நாடக கலைஞர் உத்பல்  தத் விறு கொண்டு எழுந்தார். baricade ,city of nightmare , now the kings turn ,என்ற மூன்று நாடகங்களை எழுதினர் . மூன்று நாடகங்களும் தடை செயப்பட்டன.


தடையை மீறி நாடகங்கள் நடந்தன .பார்க்க வரும் பார்வை யாளர்களை சத்ரபரிஷத் குண்டர்கள் தாக்கினர் .  ஒரு கையால்   தடிஅடியை  தங்கி கொண்டு மறுகையால் டிக்கட்டை வாங்கிக்கொண்டு  மக்கள் கூட்டம் கூட்டமாக நாடகத்தை பார்த்தனர் .

city of nightma


அரங்கத்தின்  பின் பகுதியி ஒரு சாலை. சாலையின் மையத்தில் போக்குவரத்து மேடை அதன் அருகில் ஒருகுப்பைத்தொட்டி. முன் மேடையின் இடது புறம் "டீ " கடை . வலது முன்மேடையில் முதலாளிமார் அமர்ந்து விவாதிக்கும் அறை .


டீக்கடையில்  கவலையோடு  தொழிலாளர்கள் விவாதித்து கொண்டிருக்கிறார்கள்  முதலாளிகளின் வன்முறை, டதொழிற்சங்க ஊழியர்கள் கொலை செய்யப்படுவதுஎன்றுபேசிக்கொண்டிருக்கிறார்கள்.


முதலாளி மார்கள் வலது மேடையில் எப்படி  தொழிலாளர்களை அடக்குவது என்பது பற்றி ஆலோசித்து கொண்டிருக்கிறார்கள்.. அவர்களளோடு டீக்கடையில் இருந்த ஒருவன்   இருக்கிறான் . அவன் அவர்களின் கையாள் . பல கொலைகளை செய்தவன்.குப்பி  சாராயத்திற்காகவும் கோழிக்கறிக்காகவும் எதையும்செய்பவன்  .

ஒருகட்டத்தில் அவன் ஒரு கொலையை செய்ய மறுக்கிறான். 


முதலாளிகள் உஷாராகிறார்கள்.இவனை விட்டு வைத்தால் தங்கள் சதிவேலைகள் அமபலமாகிவிடும்  என்று  அஞ்சுகிறார்கள்.அடியாள்  வைத்து கொலை செய்ய திட்டமிடுகிறார்கள் . 


அவன்  ஓடுகிறார்ன். ஒருபக்கம் அடியாட்கள். பின் மேடையிலிருக்கும் சாலையில் ஓடுகிறான்> எதிரே துப்பாக்கயுடன் போலீசார் . வேறு வழியின்றி அவன் மேடையில் ஏறி தான் செய்த கொலைகளை கூறுகிறான், உண்மையில் நடந்த கொலைகளையும் யார் தூண்டுதலில் நடந்தது என்பதையும் அவன் அறிவிக்கிறான்  போலீசார் சுடுகிறார்கள் அவன் பிணமாகி . 

குப்பை தொட்டியில் வீழ்கிறான்.


அரங்கம்  முழுவதும் செய்தித்தாள் பிரம்மாண்டமாக விரிகிறது .

IN AN ENCOUNTER A TERRIST    WAS KILLED


 

நாடகம் முடிகிறது .


மார்க்சிஸ்ட் கடசியின் உறுப்பினரான உத்பல் தத் ,மும்மை கப்பல் படை எழுச் சியை தன துரோகத்தால் வீழ்த்திய காங்கிரஸ் பற்றி எழுதிய நாடகம் தான் :"கல்லோல் " (துரோகம் ) என்ற நாடகம்., அதற்காகத்தான் அவர் சிறையில் அடைக்கப்பட்டார் .அது பற்றி தனியாக எழுத வேண்டும்.


உத்பல்தத்  நாடகக் குழுவின்  பெயர் Liitle Peoples Theatre  



1972ம் ஆண்டு மதுரையில்மார்க்சிஸ்ட் கடசியின் காங்கிரஸ் நடந்தது . அதில் தமிழ் நாடகம் போட கடசி பணித்தது. எல்.ஐ சி,வ ங்கி ஊழியர்கள்,மில் தொழிலாளர்கள் ,பொது தொழிலாளர்கள் கொண்ட நாடக குழு  உருவாக்கியது .


அந்தக்குழு தான் peoples theatre !



அதன் முதல் நாடகத்தை கடசி காங்கிரசில் மேடை ஏற்றியது .


மதுரை முதுபெரும் எழுத்தாளர் ப.ரத்தனம் நெஞ்ச்சுக்குள்  ஒரு கனல்"என்ற நாடகத்தை எழுதினார் .



அதனை இயக்கம் பணியினை அடியேனுக்கு கடசி அளித்தது.




2 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அனுபவப் பகிர்வு அருமை.

kashyapan said...

நன்றி !டாகடர் ஜமபுலிங்கம் அவர்களே! வாழ்த்துக்கள் !