Saturday, November 18, 2017




"அறம் " என்ற 


திரைப்படத்தை 

முன்வைத்து ....!!!




"அறம் " திரைப்படத்தை முன்வைத்து சில படங்களை பற்றி எழுதலாம் என்று நினைத்தேன். திருநெல்வேலி டவுனில் பாப்புலர் டாக்கீஸ் இருந்தது .அதில் தான் "பராசக்தி படம் வந்தது .அப்போது நான் v து form படித்துக்கொண்டு இருந்தேன். 

"கோட்டையிலே இருவண்ணக்கொடி பறக்க வேண்டாமா ? வி.சி கணேசனை பாருங்கள். காட்ச்சியை காணுமுன் கழகத்திற்கு காணிக்கை தாருங்கள் "என்று தோளிலே இருவண்ணக்கொடியோடு உண்டியல் குலுக்கியவன் நான் . தமிழ் ஆசிரியர் தாஸ் என்ன மட்டும் லேட்டாக வந்தால் கண்டு கொள்ளமாட்டார். அப்போது நான் இயக்கத்தில் இரு ந்தவன் .அதாவது dravidan progressive front என்ற இயக்கம் அது .


இந்த படத்திற்கு எதிராக தினமணி வார எட்டில் அட்டைப்பட விமரிசனம் வந்தது ."பரப்பிரம்மம் " என்ற படம் போட்டு விமரிசனம் எழுதி இருந்தார்கள். "கல்யாணியின் கற்பை கடவுள் தான் அந்த மணியடிக்கும்பையன் மூலம் பூசாரியிடம் இருந்து காப்பாற்றினார் " என்றெல்லாம் எழுதி இருந்தார்கள் .

இதற்கு அடுத்து வந்த மற்றோரு அரசியல் படம் " ரத்தக்கண்ணீர் " !  பராசக்தி அளவுக்கு எடுபடவில்லை .காரணம் அந்த படத்தின் கதை உண்மையில் திருவாரூர் தங்கராசு அவர்களால் எழுதப்பட்டது என்பதும் திக காரர்கள் கருணாநிதியை அதற்காக விமரிசித்தம் ஆகும்.

1975 ம் ஆண்டு சர்வதேச திரைப்பட விழா பெங்களுருவில் நடந்தது . அப்போது அந்தவிழாவில் மிகசிறந்த அரசியல் படம் என்று கூறி தெலுங்கு  படமான  "மா பூமி " என்ற படத்திற்கு விருது கொடுத்தார்கள்.

"மா பூமி "


நிஜாமின் கொடுங்கோல் ஆடசியில் கிராமப்புறத்து விவசாயிகள் சித்திரவதை அனுபவித்து வந்தார்கள். ராமுவும் அவன் தந்தையும் அந்த கிராமத்தில் வாழாமல் வாழ்ந்து  வந்தார்கள். ஜமீன்களின் அராஜகம் தாங்கமுடியாது பெண்கள் ஜமீனுக்கு தான் முதல் சொந்தம் .இந்த வாழ்க்கை  பிடிக்காமல் ராமு ஹைதிராபாத் செல்கிறான் அங்கு மண்பானை செய்யு  ஆலையில்பணியாற்றுகிறான். அந்த ஆ லையிலிருக்கும் தொழிற்சங்கத்தோடு அறிமுகமாகிறான், எழுத்தபடிக்க  தெரியாதவனுக்கு தொழிங்க  தோழர்கள் கற்பிக்கிறார்கள் . முதன் முதலாக மார்க்ஸ்  படத்தை பார்க்கிறான்.கொஞ்சம் கொஞ்ச்மாக   கம்யூனிஸ்ட் ஆகிறான். கம்யூனிச கடசியின் தலைமையில் கிராமப்புற விவசாயிகள் ஜமீன்களை எதிர்த்து ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். ராமு ஒரு கட்டத்தில் நகரத்து தலைவர்களுக்கும்,கிராமத்து போராளிகளுக்கும் இடையே கூரியர் ஆக பணியாற்று கிறான். போராளியாக மாறுகிறான் .அந்த விவசாயிகளின் புரட்ச்சியில் ஆயுதபாணியாக கலக்கிறான்.

தெலுங்கானா விவசாயிகள் தங்கள் நிலத்தை மீட் க்க நடந்த இந்த ஆயுதம் தாங்கிய புர ட்சசியைத்தான்  "மா பூமி " (என் நிலம் ) என்ற படம் சித்தரித்தது.

எத்தனை முறை பார்த்திருப்பேன் . கணக்கு என்னிடம் இல்லை !!!



கவுதம் கோஷ் என்ற வாங்க இயக்குனர் இயக்கிய தெலுங்கு படமிது.



0 comments: