கெல்வின் பீட்டர்சனும் இட ஒதுக்கீடும் .....
இங்கிலாந்துக்குப் போய் இந்தியா கிரிக்கெட் விளாயாடுகிறது.பத்திரிகைகள் ,தொலைக்காட்சிகள் இரவும் பகலும் அதுபற்றிய செய்திகளை கொட்டி வருகின்றன.
கெல்வின் பீட்டர்சன் என்ற வீரர் இரட்டைசதம் அடித்தார் என்று . குதித்துக் கொண்டு இருக்கிறார்கள். இங்கிலந்து வீரரான கே.பி என்ற பீட்டர்சன் தென் ஆப்பிரிகாவின் வீரர். அங்கிருந்து கிளம்பி இங்கிலாந்து அங்கே குடியுரீமை பெற்று விளையாடி வருகிறார். தென் ஆப்பிரிக்கா ஆரம்ப காலத்தில் வெள்ளைக்காரர்களின் நிற வேற்றுமை காரணமாக கருப்பர்களை அனுமதிப்பதில்லை .முற்காலத்தில் வெள்ளையர்கள் மட்டுமே ஆடுவார்கள். ஒருகட்டத்தில் நிறவேற்றுமை காரணமாகபுதிதாக விடுதலை பெற்ற நாடுகள் வெள்ளை ஆப்பிரிகாவுடன் விளையாடமறுத்தன .இதற்கு தலைமை தங்கிய நாடுகளில் முக்கியமான நாடு இந்தியாவாகும்.
பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்ற பிறகு தென் ஆப்பிரிகாவில் நிலமை மாறியது.கருப்பின மக்கள் விளையாட்டுத்துறையில் முன்னுக்கு வந்தனர். சிறுபான்மையினரான வெள்ளையரையும் ஆதரிக்கும் வகையில் தென்னாப்பிரிக்க அரசு வெள்ளையர்களுக்கு என்று சில சலுகை களை அளித்தது. அவர்களுக்கு என்று சில இடங்களை ஒதுக்கீடு செய்தது. கிரிகெட்விலையாட்டில் குறைந்தபட்சம் நான்கு பேராவது வெள்ளையர்களிருக்க வேண்டும் என்றுஒரு விதியைக்கொண்டு வந்தது.
பீட்டர்சனின் தந்தை கருப்பர். தாயார்வெள்ளைக்காரி. மிகச்சிறந்த விலையாட்டு வீரரக இருந்தாலும் ஒதுக்கீடு முறையில் பீட்டர்சனுக்கு தென் ஆப்பிரிக்க அணியில் இடம் கிடக்கவில்லை. அதனால் அவர் இட ஒடுக்கீடு முறையை கடுமையாக எதிர்த்தார். அவருடைய தாயார் வெள்ளைகாரி என்பதால் அவருக்கு இங்கிலாந்தில் குடியுரிமை கிடத்தது. இப்போது இங்கிலாந்து அணியில் பீட்டர்சன் அணியில் விளையாடி வர்கிறார். அவரிட ஓதுக்கீட்டை கடுமையாக எதிர்ப்பவர்.
அறுபது ஆண்டுகளுக்கும்மேலாக இந்தியாவில் இட ஒதுக்கிடு இருக்கிறது. 130 கோடிப்பேரில் அரசு,மற்றும் வேலை வாய்ப்பில் தலித்துகள் எத்துணை சதம் வந்திருப்பார்கள். இன்று சுமார் 34 கோடி தலித்துகள் இருப்பதாக சொல்கிறார்கள் ஒரு கோடி பேருக்கு கூட வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதா என்றால் இல்லை. இங்கும் இட ஒதுக்கீடை எதிர்க்கும் சக்திகள் கத்துகின்றAன. அவர்களுக்கு தலைமை இங்கும் அரசியல் சக்திகளிருக்கின்றன்.
பீட்டர்சனை அழைத்து அவர் தலமையில் இட ஒதுக்கீடு எதிர்ப்பு மாநாடு நடத்தினாலும் நடத்துவார்கள். நம்ம ஊர் கிரிக்கெட் ரசிகர்களும் கூட்டமாய்ச்செல்வார்கள்.
Sunday, July 24, 2011
Sunday, July 17, 2011
சிறு கதை ------பேராசிரியர்
சிறு கதை.
பேராசிரியர்
திப்புசாமி "மும்பை-கன்னியாகுமரி "எக்ஸ்பிரசில் ஏறினார்.'ஏ.சி"கோச்சானதால் தன் இருக்கையைத் தேடி அமர்ந்து கொண்டார்.அனுப்ப யாரும் வரவில்லை .அணுசக்திநகரில் வீட்டைப்பூட்டினோமா என்று அடிமனதில் உளைச்சல் ஏற்பட்டது.பக்கத்து ஃப்ளாட் பார்த்தசாரதி சின்கா பார்த்துக்கொள்வான். அவனிடம் தான் சாவி இருக்கிறது.மனது சமாதானமடைந்தது.
மதுரைசென்று பேராசிரியர் டாக்டர்.எம்.எஸை பார்க்கவேண்டும்.ரயில் கிளம்பிவிட்டது.மிதமான "ஏ.சி"யின் குளிர்ச்சி இமை கனத்தை அதிகமாக்கி மூடச்செய்தது.
திப்புவுக்கு கண்களைத் திறக்க முடியாத அளவுக்கு இமைகள்கனத்தன.அப்பா மெதுவாககூப்பிடுவது கிணற்றிர்க்குள் இருந்து கூப்பிடுவதுபோல் கேட்டது. திப்புவுக்கு ஆறு வயது முடியவில்லை. கல்யாண வீடுகளில் அப்பாவும் அம்மாவும் "லைட்" தூக்குவார்கள். ஆளுக்குஒரு ரூ கிடைக்கும்."கலக்கு முட்டியை" குடித்துவிட்டு இருவரும் சண்டை போடுவார்கள்.சிலசமயம் ஊர்வலத்தின்போதே தலையில் லைட்டுடன் கைகளை ஆட்டி ஆட்டி கெட்டவார்த்தை சொல்லி இருவரும் சண்டைபோடுவார்கள் .
திப்பு இருவருக்கும் நடுவில் மவுனமாக வருவான்.சாமிகள் அதட்டியதும் இருவரும்கொஞ்ச நேரம் நிறுத்துவார்கள்.இந்த "லைட்"தூக்குவதில் ஒரு வசதி உண்டு.இரவு கல்யாண விருந்துமுடிந்ததும் எச்சிலையில் உள்ள மிச்சத்தை பொறுக்கிக் கொள்ளாலாம்.. அதற்காகஒரு ஒலைப்பெட்டியை திப்புவின் தலையில் ஏற்றி வைத்திருப்பார்கள்..சாமிமார் சாப்பிட்டு எச்சிலிலையை போடும் போது "ஏ!சாமி!ஏ!சாமி!" இரண்டு முன்று குடும்பங்கள் அலை பாயும்.
இலைகள் யார் முன்னால் விழுகிறதோ அவர்கள் முதலில் பொறுக்கிக் கொள்ள வேண்டும்.லட்டு,வடை,உருளைக்கிழங்கு கறி,அவியல் ,அப்பளம் என்று திப்பு, அவனுடைய அம்மா, அப்பா ஆகியோர் தனித்தனி எச்சில் இலைகளில் பிரித்து பெட்டியில்வைத்துக் கொள்வார்கள்.
அன்று ஊர்வலம் கொஞ்சம் நேரமாகிவிட்டது.திப்புவுக்கு கால் வலித்தது.நடுரோட்டில் குப்பைமேட்டில் உட்கார்ந்து கொண்டான் தூக்கக் கலக்கத்தில் மண்டபத்திற்கு . வரும்போது பசி வயிறை கிள்ளியது.பந்தலுக்கு வெளியில் படுத்துக் கொண்டான்.அப்பவும். அம்மாவும் "லைட்"டை இறக்கிவிட்டு அவன் அருகில்வந்தூட்கார்ந்து கொண்டது அவனுக்கு நினைவிருக்கிறது.
"திப்பு!ராசா! எச்சல வந்திட்டுதில!எந்தில!ராசா!" என்று அப்ப கூப்பிட்டது கிணற்றுக்குள் இருந்து கேட்டது. "நாயி! எந்தி நாயி!" என்று அம்மா முதுகில் அடித்தாள்.
ரயில்குலுங்கியதா.இல்லை உமைச்சலா தெரியவில்லை திப்புசாமி திடுக்கிட்டு விழித்தார்.மனி இரவு ஒன்பதாகி விட்டது.கையைக்கழுவிக்கோண்டு ஹோட்டல் மெரிடியனிலிருந்து ஸ்டாஃப் கொண்டு வந்து வைத்த டின்னர் கவரைத் திறந்தார்.
பொன் வறுவலில் உருளைக்கிழங்கு, உயர்ந்த வகை கோதுமையில் தயாரிகபட்ட இரண்டு பரோட்ட.நன்கு வறுத்து ஒரேமாதிர்யாக நறுக்கி மிதமான காரத்தோடு உள்ள ஆட்டிறைச்சி.மடியில் டவலை விரித்து அலுமினிய ஃபாயில் தட்டை வைத்துக்கொண்டார்.மினரல் வாட்டர் பாட்டிலைத் திறந்து வைத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தார். உருளைக்கிழங்கை விட்டுவிட்டு ஆட்டிறைச்சியில் பரோட்டவை தோய்த்து வாயில் பொட முன்வரும்போது "குபுக் என்று நெஞ்சக்குழியில் இருந்து சத்தம் வந்தது.கண்கள் குளமாகியது.எதிர் சீட்டுக்காரன் பார்க்கவில்லை ஒவ்வொரு சீட்டுக்கும் திரை போட்டு மறைத்திருந்ததால்.அவர் வாய் முணுமுணுத்தது"எம்.எஸ்!எம்.எஸ்! என்று.
திப்பு மூன்றாவது படிக்கிறான் அன்று பள்ளிக்கூடம்போகவில்லை.ரங்கசாமிக் கோனார் வீட்டில் மாடு செத்துவிட்டது.அப்பாவொடுஅங்கு போய்விட்டான்.மாடு செத்தால்மாட்டுக்கறி திங்கலாம்.பள்ளிகூடம்போனால்திங்கமுடியுமா? திப்பு இந்த மாதிரி சமயங்களில் அப்பவோடு ஒடிக் கொள்வான்.மாடு செத்தால் இரண்டு மூனேஉ நாள் பள்ளீக்கூடம் போகமாட்டன்.வத்தியார் அடிப்பாரு!அடிச்சா என்ன? அப்பதான வலிக்கும்! என்று திப்பு சமாதனம்செய்து கொள்வான்.
திப்புசாமியால் முழுவதும் சாப்பிட முடியவில்லை."டின்னர்' கவருக்குள் வைத்து வெளியில் எறிய எழுந்து ...அதிர்ச்சியில்திப்புசாமி மீண்டும் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.கவரை சேதமில்லாமல் மூடி வைத்திருந்து காலையில் பிளாட்பாரதில் வரும்பிச்சைகார ..."ஏம்.ஏஸ்.!எம் எஸ்" வாய் முணுமுணுத்தது.
திப்பு இப்போது ஐந்தாவது படிக்கிறான்.குழி வெட்ட அப்பவுக்கு உதவுவான். நாடாக்கமாறு இடுகடு இவங்க பராமரிப்புல தான் இருக்கு.எரிக்கவுமிவனுக்குத் தெரியும்.என்ன என்ன வேணும்,எந்த எந்த சாமிமாருக்கு எப்படிச் செய்யணும்.. எல்லாம் தெரியும். பள்ளிகூடம்போனாலும் எழவு,கேதம்னு வந்தாசைகிளை எடுத்துக்கொண்டு எழவு சொல்லப்பொயிடுவான்.அப்படிப் போன இடத்துல தான் "ஏம்.ஏஸ்"சாரை பார்த்தான்.
அருப்புக்கோட்டைக்கு பக்கத்துலைருக்கிற கிராமத்துல தான் "எம்.எஸ்"சாரை பார்த்தான்.அவரு இவனை விசாரிச்சாரு.வீட்டுக்குள கூப்பிட்டாரு.போகாம பிடிவாதமா தெருவில நீன்னான்.சாரு வெளில வந்து அவன் தொளை அணைச்சு கூட்டிட்டு போனாரு.காப்பி குடுத்தாரு.நாற்காலியில் உட்கார்ந்து குடிக்கச்சொன்னாரு.திப்புவுக்கு பயமா இருந்தது.வெளில போனா அடிப்பாங்களோ! ...சாருஇருக்காரு.. என்று சமாதனம் செய்துகொண்டான்.
அடுத்த ஞாயிற்றுக் கிழமை வரச்சொன்னாரு."மேல படி. குழிவெட்டப் போகாத.எழவு சொல்ல நீ போகவேண்டாம்..உங்கப்பாவ வரச்சொல்லு"ந்னு சார் சொன்னார் அப்பா ஐஞ்சாப்போட .நிறுத்த சொன்ன போது தான் சார் அவன் வீட்டுக்கு முத முத வந்தாரு திப்புவ கூட்டிக்கிட்டுபோய்பாளையங்கோட்டை.ஆஸ்டல்ல சேத்தாரு.
ஆறாப்பும் ஏழாப்பும் படிக்கும் போது திப்புவுக்கு மாட்டுக்கறியும், எச்சில் இலை லட்டு வடை நினைவு வரும்.கழுத்தை திருப்பி, உடம்பை ஒரு உலுக்கு உலுக்கி ..ஏன்? தெரியாத் ஒரு ஒக்களிப்பு வரும்.திப்பு பாத்தாவது ப்படிக்கும் போது அவன் அம்மாவும் அப்பாவும் விஷச்சா சாராயம் குடிச்சு செத்துட்டாங்க. அப்ப அவனுக்கு ஆறுதலாயிருந்தது "எம்.ஏஸ்."சாருதான்.
பிளஸ்-2 முடிச்சதும் பி.எஸ் சி ல சேத்தாரு.நுக்ளியர் பிஸிக்ஸ் சிறப்பு பாடம்.திப்பு எம்.எஸ்.சி ரிசல்ட் வந்த அன்னக்கி சாரை பார்க்கப்போனான். சார் திப்புவைக் கட்டிக் கொண்டு விம்மினார்...சார் மகன் பாசு அவனுக்குகைகுலுக்கி பாராட்டினான். சார்விட்டு அம்மா அவனுக்கு இனிப்பு ஊட்டினார்....சாரப் பார்த்தான்...காண் கலங்கியிருந்தது.
" பேராசிரியர் திப்புசாமி--நுக்ளியர் பிஸிசிஸ்ட் " அட்டையொடு டிரைவர் நிறக திப்புசாமியைவரவேற்க எம்.கே யுனிவெர்சிட்டியின் பி.ஆர்.ஓ அருகில் நின்றார்.அவ்ர்கள் டி.வி.எஸ் கம்பெனியின் கெஸ்ட் ஹவுஸை அடையும் போது மணி எழாகியது .பி.ஆர்.ஓ. அவருடைய நிகழ்ச்சியைப் பற்றி பெசினார்.காலை எட்டு முப்பதிலிருந்து ஒன்பது முப்பது வரை தனக்கு வேலையிருக்கிறது கூறிய திப்புசாமி குளித்து உடை மாற்றிகொண்டு காரில் ஏறினார்
"சார்! எந்தப்பக்கம்"
"டி.வி. எஸ் நகர் பக்கம்"
"சரி சார்"
காரிலிருந்து இறங்கிய திப்புசாமி எதிரில்வந்தவரிடம்கேட்டார்.
"ஐயா! எம்.எஸ் வீடு எது?"
"எஸ்! என்னகேட்டீங்க?
"எம்.எஸ்.வீட்டு எது?"
"யூ மீன் புரபசர் ... "
"யெஸ் "
"அதோ "
ஐந்தாறு வீடுகள் தாண்டி காட்டினார்
தூரத்தில் வேப்பமர நிழலில் காம்பவுண்டிற்குள் எம்.எஸ சார் ... திப்பு என்ற திப்புசாமியின் இதயம் தொண்டைக்குள் சென்று அடைக்க ...தூரத்தில் பேராசிரியர் எம்.எஸ் ... ...அந்த உருவம் மிக மெலிதாக மறைந்துவர...பனித்த கண்களை திப்புசாமி துடைத்துக் கொண்டார்...அது யார்...எம்.எஸ் தானா...நடக்க ஆரம்பித்தார்.
.
பேராசிரியர்
திப்புசாமி "மும்பை-கன்னியாகுமரி "எக்ஸ்பிரசில் ஏறினார்.'ஏ.சி"கோச்சானதால் தன் இருக்கையைத் தேடி அமர்ந்து கொண்டார்.அனுப்ப யாரும் வரவில்லை .அணுசக்திநகரில் வீட்டைப்பூட்டினோமா என்று அடிமனதில் உளைச்சல் ஏற்பட்டது.பக்கத்து ஃப்ளாட் பார்த்தசாரதி சின்கா பார்த்துக்கொள்வான். அவனிடம் தான் சாவி இருக்கிறது.மனது சமாதானமடைந்தது.
மதுரைசென்று பேராசிரியர் டாக்டர்.எம்.எஸை பார்க்கவேண்டும்.ரயில் கிளம்பிவிட்டது.மிதமான "ஏ.சி"யின் குளிர்ச்சி இமை கனத்தை அதிகமாக்கி மூடச்செய்தது.
திப்புவுக்கு கண்களைத் திறக்க முடியாத அளவுக்கு இமைகள்கனத்தன.அப்பா மெதுவாககூப்பிடுவது கிணற்றிர்க்குள் இருந்து கூப்பிடுவதுபோல் கேட்டது. திப்புவுக்கு ஆறு வயது முடியவில்லை. கல்யாண வீடுகளில் அப்பாவும் அம்மாவும் "லைட்" தூக்குவார்கள். ஆளுக்குஒரு ரூ கிடைக்கும்."கலக்கு முட்டியை" குடித்துவிட்டு இருவரும் சண்டை போடுவார்கள்.சிலசமயம் ஊர்வலத்தின்போதே தலையில் லைட்டுடன் கைகளை ஆட்டி ஆட்டி கெட்டவார்த்தை சொல்லி இருவரும் சண்டைபோடுவார்கள் .
திப்பு இருவருக்கும் நடுவில் மவுனமாக வருவான்.சாமிகள் அதட்டியதும் இருவரும்கொஞ்ச நேரம் நிறுத்துவார்கள்.இந்த "லைட்"தூக்குவதில் ஒரு வசதி உண்டு.இரவு கல்யாண விருந்துமுடிந்ததும் எச்சிலையில் உள்ள மிச்சத்தை பொறுக்கிக் கொள்ளாலாம்.. அதற்காகஒரு ஒலைப்பெட்டியை திப்புவின் தலையில் ஏற்றி வைத்திருப்பார்கள்..சாமிமார் சாப்பிட்டு எச்சிலிலையை போடும் போது "ஏ!சாமி!ஏ!சாமி!" இரண்டு முன்று குடும்பங்கள் அலை பாயும்.
இலைகள் யார் முன்னால் விழுகிறதோ அவர்கள் முதலில் பொறுக்கிக் கொள்ள வேண்டும்.லட்டு,வடை,உருளைக்கிழங்கு கறி,அவியல் ,அப்பளம் என்று திப்பு, அவனுடைய அம்மா, அப்பா ஆகியோர் தனித்தனி எச்சில் இலைகளில் பிரித்து பெட்டியில்வைத்துக் கொள்வார்கள்.
அன்று ஊர்வலம் கொஞ்சம் நேரமாகிவிட்டது.திப்புவுக்கு கால் வலித்தது.நடுரோட்டில் குப்பைமேட்டில் உட்கார்ந்து கொண்டான் தூக்கக் கலக்கத்தில் மண்டபத்திற்கு . வரும்போது பசி வயிறை கிள்ளியது.பந்தலுக்கு வெளியில் படுத்துக் கொண்டான்.அப்பவும். அம்மாவும் "லைட்"டை இறக்கிவிட்டு அவன் அருகில்வந்தூட்கார்ந்து கொண்டது அவனுக்கு நினைவிருக்கிறது.
"திப்பு!ராசா! எச்சல வந்திட்டுதில!எந்தில!ராசா!" என்று அப்ப கூப்பிட்டது கிணற்றுக்குள் இருந்து கேட்டது. "நாயி! எந்தி நாயி!" என்று அம்மா முதுகில் அடித்தாள்.
ரயில்குலுங்கியதா.இல்லை உமைச்சலா தெரியவில்லை திப்புசாமி திடுக்கிட்டு விழித்தார்.மனி இரவு ஒன்பதாகி விட்டது.கையைக்கழுவிக்கோண்டு ஹோட்டல் மெரிடியனிலிருந்து ஸ்டாஃப் கொண்டு வந்து வைத்த டின்னர் கவரைத் திறந்தார்.
பொன் வறுவலில் உருளைக்கிழங்கு, உயர்ந்த வகை கோதுமையில் தயாரிகபட்ட இரண்டு பரோட்ட.நன்கு வறுத்து ஒரேமாதிர்யாக நறுக்கி மிதமான காரத்தோடு உள்ள ஆட்டிறைச்சி.மடியில் டவலை விரித்து அலுமினிய ஃபாயில் தட்டை வைத்துக்கொண்டார்.மினரல் வாட்டர் பாட்டிலைத் திறந்து வைத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தார். உருளைக்கிழங்கை விட்டுவிட்டு ஆட்டிறைச்சியில் பரோட்டவை தோய்த்து வாயில் பொட முன்வரும்போது "குபுக் என்று நெஞ்சக்குழியில் இருந்து சத்தம் வந்தது.கண்கள் குளமாகியது.எதிர் சீட்டுக்காரன் பார்க்கவில்லை ஒவ்வொரு சீட்டுக்கும் திரை போட்டு மறைத்திருந்ததால்.அவர் வாய் முணுமுணுத்தது"எம்.எஸ்!எம்.எஸ்! என்று.
திப்பு மூன்றாவது படிக்கிறான் அன்று பள்ளிக்கூடம்போகவில்லை.ரங்கசாமிக் கோனார் வீட்டில் மாடு செத்துவிட்டது.அப்பாவொடுஅங்கு போய்விட்டான்.மாடு செத்தால்மாட்டுக்கறி திங்கலாம்.பள்ளிகூடம்போனால்திங்கமுடியுமா? திப்பு இந்த மாதிரி சமயங்களில் அப்பவோடு ஒடிக் கொள்வான்.மாடு செத்தால் இரண்டு மூனேஉ நாள் பள்ளீக்கூடம் போகமாட்டன்.வத்தியார் அடிப்பாரு!அடிச்சா என்ன? அப்பதான வலிக்கும்! என்று திப்பு சமாதனம்செய்து கொள்வான்.
திப்புசாமியால் முழுவதும் சாப்பிட முடியவில்லை."டின்னர்' கவருக்குள் வைத்து வெளியில் எறிய எழுந்து ...அதிர்ச்சியில்திப்புசாமி மீண்டும் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.கவரை சேதமில்லாமல் மூடி வைத்திருந்து காலையில் பிளாட்பாரதில் வரும்பிச்சைகார ..."ஏம்.ஏஸ்.!எம் எஸ்" வாய் முணுமுணுத்தது.
திப்பு இப்போது ஐந்தாவது படிக்கிறான்.குழி வெட்ட அப்பவுக்கு உதவுவான். நாடாக்கமாறு இடுகடு இவங்க பராமரிப்புல தான் இருக்கு.எரிக்கவுமிவனுக்குத் தெரியும்.என்ன என்ன வேணும்,எந்த எந்த சாமிமாருக்கு எப்படிச் செய்யணும்.. எல்லாம் தெரியும். பள்ளிகூடம்போனாலும் எழவு,கேதம்னு வந்தாசைகிளை எடுத்துக்கொண்டு எழவு சொல்லப்பொயிடுவான்.அப்படிப் போன இடத்துல தான் "ஏம்.ஏஸ்"சாரை பார்த்தான்.
அருப்புக்கோட்டைக்கு பக்கத்துலைருக்கிற கிராமத்துல தான் "எம்.எஸ்"சாரை பார்த்தான்.அவரு இவனை விசாரிச்சாரு.வீட்டுக்குள கூப்பிட்டாரு.போகாம பிடிவாதமா தெருவில நீன்னான்.சாரு வெளில வந்து அவன் தொளை அணைச்சு கூட்டிட்டு போனாரு.காப்பி குடுத்தாரு.நாற்காலியில் உட்கார்ந்து குடிக்கச்சொன்னாரு.திப்புவுக்கு பயமா இருந்தது.வெளில போனா அடிப்பாங்களோ! ...சாருஇருக்காரு.. என்று சமாதனம் செய்துகொண்டான்.
அடுத்த ஞாயிற்றுக் கிழமை வரச்சொன்னாரு."மேல படி. குழிவெட்டப் போகாத.எழவு சொல்ல நீ போகவேண்டாம்..உங்கப்பாவ வரச்சொல்லு"ந்னு சார் சொன்னார் அப்பா ஐஞ்சாப்போட .நிறுத்த சொன்ன போது தான் சார் அவன் வீட்டுக்கு முத முத வந்தாரு திப்புவ கூட்டிக்கிட்டுபோய்பாளையங்கோட்டை.ஆஸ்டல்ல சேத்தாரு.
ஆறாப்பும் ஏழாப்பும் படிக்கும் போது திப்புவுக்கு மாட்டுக்கறியும், எச்சில் இலை லட்டு வடை நினைவு வரும்.கழுத்தை திருப்பி, உடம்பை ஒரு உலுக்கு உலுக்கி ..ஏன்? தெரியாத் ஒரு ஒக்களிப்பு வரும்.திப்பு பாத்தாவது ப்படிக்கும் போது அவன் அம்மாவும் அப்பாவும் விஷச்சா சாராயம் குடிச்சு செத்துட்டாங்க. அப்ப அவனுக்கு ஆறுதலாயிருந்தது "எம்.ஏஸ்."சாருதான்.
பிளஸ்-2 முடிச்சதும் பி.எஸ் சி ல சேத்தாரு.நுக்ளியர் பிஸிக்ஸ் சிறப்பு பாடம்.திப்பு எம்.எஸ்.சி ரிசல்ட் வந்த அன்னக்கி சாரை பார்க்கப்போனான். சார் திப்புவைக் கட்டிக் கொண்டு விம்மினார்...சார் மகன் பாசு அவனுக்குகைகுலுக்கி பாராட்டினான். சார்விட்டு அம்மா அவனுக்கு இனிப்பு ஊட்டினார்....சாரப் பார்த்தான்...காண் கலங்கியிருந்தது.
" பேராசிரியர் திப்புசாமி--நுக்ளியர் பிஸிசிஸ்ட் " அட்டையொடு டிரைவர் நிறக திப்புசாமியைவரவேற்க எம்.கே யுனிவெர்சிட்டியின் பி.ஆர்.ஓ அருகில் நின்றார்.அவ்ர்கள் டி.வி.எஸ் கம்பெனியின் கெஸ்ட் ஹவுஸை அடையும் போது மணி எழாகியது .பி.ஆர்.ஓ. அவருடைய நிகழ்ச்சியைப் பற்றி பெசினார்.காலை எட்டு முப்பதிலிருந்து ஒன்பது முப்பது வரை தனக்கு வேலையிருக்கிறது கூறிய திப்புசாமி குளித்து உடை மாற்றிகொண்டு காரில் ஏறினார்
"சார்! எந்தப்பக்கம்"
"டி.வி. எஸ் நகர் பக்கம்"
"சரி சார்"
காரிலிருந்து இறங்கிய திப்புசாமி எதிரில்வந்தவரிடம்கேட்டார்.
"ஐயா! எம்.எஸ் வீடு எது?"
"எஸ்! என்னகேட்டீங்க?
"எம்.எஸ்.வீட்டு எது?"
"யூ மீன் புரபசர் ... "
"யெஸ் "
"அதோ "
ஐந்தாறு வீடுகள் தாண்டி காட்டினார்
தூரத்தில் வேப்பமர நிழலில் காம்பவுண்டிற்குள் எம்.எஸ சார் ... திப்பு என்ற திப்புசாமியின் இதயம் தொண்டைக்குள் சென்று அடைக்க ...தூரத்தில் பேராசிரியர் எம்.எஸ் ... ...அந்த உருவம் மிக மெலிதாக மறைந்துவர...பனித்த கண்களை திப்புசாமி துடைத்துக் கொண்டார்...அது யார்...எம்.எஸ் தானா...நடக்க ஆரம்பித்தார்.
.
Wednesday, July 13, 2011
தென் இந்திய ரயில்வேயும் செட்டிநாட்டு முதலாளிகளும் ......
தென் இந்திய ரயிலும் செட்டிநாட்டு முதலாளிகளும்.......
இந்தியா சுதந்திர மடையும் முன்னால் தென் இந்திய ரயில்வே (S.I.R.),பெங்கால் நாக்பூர் ரயில்வே (B.N.R),மெட்றாஸ் ரயில்வே (M.S.M) என்று தனியார் வசம் இருந்தது.
சென்னை எக்மோரிலிருந்து ஒரு ரயில் புறப்படும்.அது விழுப்புரம்,மாயவரம், கும்பகோணம், காரைக்குடி,தனுஷ்கோடி செல்லும். அங்கு ரயில் கப்பலுக்குள் செல்லும். கப்பல் கொழும்பு செல்லும். கொழும்பில் ரயில் கப்பலிலிருந்து தரைக்குச்செல்லும். அங்கிருந்து காங்கெசன் துறை செல்லும்.சென்னை எக்மோரில் ஏறிய பயணி காங்கெசன் துறை வரை இறங்காமலேயே பயணிக்க முடியும். இந்த ரயிலுக்கு "போட் மெயில்"
என்று பெயர்.
இந்த ரயிலில் தான் செட்டிநாட்டு முதலாளிகள் சென்னையிலிருந்து காரைக்குடி வருவார்கள். கரைக்குடிக்கு முன்னாலெயே அவர்கள் கிராமம் வரும். ரயில் நிலையம் கிடையாது. நட்டநடுவில் ரயி ல் நிற்கும் . அவர்களுடைய கணக்குப்பிள்ளை, மற்றும் பணியாட்கள் நிற்பார்கள் .முதலாளி இருக்கும் பெட்டி அருகில் சென்று அவரிறங்குவதற்கு வசதியாக, படிகளை வைப்பார்கள். முதலாளி இறங்குவார். கணக்குப் பிள்ளை ஒடிப்போய் இஞ்சின் ஒட்டுபவரிடம் 20 ரூ கொடுப்பார். கரி போடுபவரிடம் 10ரூ கொடுப்பார். ரயில் புறப்படும்.
இன்று நிலமை மாறிவிட்டதுஎன்று எழுத ஆசைப்ப்பட்ட லும் முடியவில்லை.உத்திரப்பிரதெசம்,பிகார் மாநிலங்ளில் நிலமை வேறு.கிராமத்து மக்கள், நகரங்களுக்கு செல் வார்கள். வரும் பொது ரயிலில் ஏறுவார்கள்.அவர்கள்கிராமத்துக்கு அருகில்ரயில் வரும்போது சங்கிலியைப்பிடித்து நிறுத்துவார்கள்.இறங்கி வீட்டுக்குச்செல்வார்கள் அது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் செல்லும் ராஜதானி எக்ஸ்பிரசானாலும் கவலையில்லை.இதனால் சக்கிரமும் தண்டவாளமும் உரசிக்கோள்ளும். இரண்டுமே இது அடிக்கடி நடப்பதால் பலவீனமடைகிறது. ரயில் பெட்டிகள்தண்டவாளத்திலிருந்து விலக உயிச்சேதமுள்ள விபத்துகள் நடக்கின்றன .மமதாபனர்ஜிதான்நேற்றுவரை ரயில்வே அமைச்சர்.
தண்டவாளங்களின் கனத்துக்கு எற்றவாரு சரக்கு ரயில்களில் சரக்கு எற்றவேண்டும். ஆனால் முதலாளிமார்களுக்கு அவசரம் .கணக்கு வழக்கு இல்லாமல் சரக்கு எற்றப்படுகிறது. இதன் காரணமாக தண்டவாளங்கள் பலவீன மடைவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
தண்டவாளங்களி பூமியோடு பிணக்க ஸ்லீப்பர் கட்டைகள் இருக்கும் இப்போது மரத்திற்குப்பதிலாக கங்கிரீட் ஸ்லீப்பர்களைப் போடுகிறார்கள். நமது தலைப்பாகை கட்டிய பிரதமரின் திட்டப்படி இவை தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளன . கோடிக்கணக்கில் இதில் ஊழல் . தரக்குறைவான ஸ்லீப்பர்கள், பலவீனமான தண்டவாளங்கள் விபத்து நிகழத்தானே செய்யும்.
எல்லாவற்றுக்கும் மேலாக சிக்கன நடவடிக்கை என்று கூறி 3லட்சம் ஊழியர்கள் தேவை என்பதை மூடிமறைத்து புதிய நியமனங்களை செய்யமலிருக்கிறார்கள்.
திருணாமுல் காங்கிரசைச்சர்ந்தவர் திருவெதி. அவர்தான் ரயில்வே அமைசராக வெண்டும் என்று மமதா நிர்ப்பந்தப்படுத்தினார். விபத்து நடந்தபோது நிருபர்கள் திரிவேதியிடம் நீங்கள் விபத்து நடந்த இடத்திற்கு பொகவில்லையா என்று கேட்டார்கள். " நான் ஏன் பொக வேண்டும்.தற்போதுபிரதமர் தான் ரயிலுக்கு பொறுப்பு" என்றுகூறிவிட்டார்.
. அவர் கன்னத்தில் அறைந்து "விபத்து நடந்த இடத்துக்கு போடா " என்று சொல்ல ஆளில்லையே ! என்ன செய்ய?
இந்தியா சுதந்திர மடையும் முன்னால் தென் இந்திய ரயில்வே (S.I.R.),பெங்கால் நாக்பூர் ரயில்வே (B.N.R),மெட்றாஸ் ரயில்வே (M.S.M) என்று தனியார் வசம் இருந்தது.
சென்னை எக்மோரிலிருந்து ஒரு ரயில் புறப்படும்.அது விழுப்புரம்,மாயவரம், கும்பகோணம், காரைக்குடி,தனுஷ்கோடி செல்லும். அங்கு ரயில் கப்பலுக்குள் செல்லும். கப்பல் கொழும்பு செல்லும். கொழும்பில் ரயில் கப்பலிலிருந்து தரைக்குச்செல்லும். அங்கிருந்து காங்கெசன் துறை செல்லும்.சென்னை எக்மோரில் ஏறிய பயணி காங்கெசன் துறை வரை இறங்காமலேயே பயணிக்க முடியும். இந்த ரயிலுக்கு "போட் மெயில்"
என்று பெயர்.
இந்த ரயிலில் தான் செட்டிநாட்டு முதலாளிகள் சென்னையிலிருந்து காரைக்குடி வருவார்கள். கரைக்குடிக்கு முன்னாலெயே அவர்கள் கிராமம் வரும். ரயில் நிலையம் கிடையாது. நட்டநடுவில் ரயி ல் நிற்கும் . அவர்களுடைய கணக்குப்பிள்ளை, மற்றும் பணியாட்கள் நிற்பார்கள் .முதலாளி இருக்கும் பெட்டி அருகில் சென்று அவரிறங்குவதற்கு வசதியாக, படிகளை வைப்பார்கள். முதலாளி இறங்குவார். கணக்குப் பிள்ளை ஒடிப்போய் இஞ்சின் ஒட்டுபவரிடம் 20 ரூ கொடுப்பார். கரி போடுபவரிடம் 10ரூ கொடுப்பார். ரயில் புறப்படும்.
இன்று நிலமை மாறிவிட்டதுஎன்று எழுத ஆசைப்ப்பட்ட லும் முடியவில்லை.உத்திரப்பிரதெசம்,பிகார் மாநிலங்ளில் நிலமை வேறு.கிராமத்து மக்கள், நகரங்களுக்கு செல் வார்கள். வரும் பொது ரயிலில் ஏறுவார்கள்.அவர்கள்கிராமத்துக்கு அருகில்ரயில் வரும்போது சங்கிலியைப்பிடித்து நிறுத்துவார்கள்.இறங்கி வீட்டுக்குச்செல்வார்கள் அது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் செல்லும் ராஜதானி எக்ஸ்பிரசானாலும் கவலையில்லை.இதனால் சக்கிரமும் தண்டவாளமும் உரசிக்கோள்ளும். இரண்டுமே இது அடிக்கடி நடப்பதால் பலவீனமடைகிறது. ரயில் பெட்டிகள்தண்டவாளத்திலிருந்து விலக உயிச்சேதமுள்ள விபத்துகள் நடக்கின்றன .மமதாபனர்ஜிதான்நேற்றுவரை ரயில்வே அமைச்சர்.
தண்டவாளங்களின் கனத்துக்கு எற்றவாரு சரக்கு ரயில்களில் சரக்கு எற்றவேண்டும். ஆனால் முதலாளிமார்களுக்கு அவசரம் .கணக்கு வழக்கு இல்லாமல் சரக்கு எற்றப்படுகிறது. இதன் காரணமாக தண்டவாளங்கள் பலவீன மடைவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
தண்டவாளங்களி பூமியோடு பிணக்க ஸ்லீப்பர் கட்டைகள் இருக்கும் இப்போது மரத்திற்குப்பதிலாக கங்கிரீட் ஸ்லீப்பர்களைப் போடுகிறார்கள். நமது தலைப்பாகை கட்டிய பிரதமரின் திட்டப்படி இவை தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளன . கோடிக்கணக்கில் இதில் ஊழல் . தரக்குறைவான ஸ்லீப்பர்கள், பலவீனமான தண்டவாளங்கள் விபத்து நிகழத்தானே செய்யும்.
எல்லாவற்றுக்கும் மேலாக சிக்கன நடவடிக்கை என்று கூறி 3லட்சம் ஊழியர்கள் தேவை என்பதை மூடிமறைத்து புதிய நியமனங்களை செய்யமலிருக்கிறார்கள்.
திருணாமுல் காங்கிரசைச்சர்ந்தவர் திருவெதி. அவர்தான் ரயில்வே அமைசராக வெண்டும் என்று மமதா நிர்ப்பந்தப்படுத்தினார். விபத்து நடந்தபோது நிருபர்கள் திரிவேதியிடம் நீங்கள் விபத்து நடந்த இடத்திற்கு பொகவில்லையா என்று கேட்டார்கள். " நான் ஏன் பொக வேண்டும்.தற்போதுபிரதமர் தான் ரயிலுக்கு பொறுப்பு" என்றுகூறிவிட்டார்.
. அவர் கன்னத்தில் அறைந்து "விபத்து நடந்த இடத்துக்கு போடா " என்று சொல்ல ஆளில்லையே ! என்ன செய்ய?
Wednesday, July 06, 2011
வர்ணாஸ்ரம அதர்மம் .
வர்ணாஸ்ரம அதர்மம் ......
நண்பர் ஒருவரின் இடுகையில் பின்னூட்டமிடும் பதிவர் வர்ணாஸ்ரம தர்மம் என்பதுதர்மமா? அதர்மமா? என்று கேட்டிருந்தார்.
வர்ணாஸ்ரம தர்மம் என்பதே misnomer என்பது என கருத்து. பிறப்பை அடிப்படையாகக் கொண்டு ஒரு மனிதன் கண்டுகொள்ளப்பட விதி இருக்குமனால் அந்த விதி அதர்மமானது.வெள்ளையர்கள் கருப்பின மக்களை கொடுமைப்படுத்தியது நியாயப்படுத்தப்பட்டது சரி என்றாகிவிடும்.இந்தியர்களை brown dog என்றது நியாயமாகி விடும்.காந்தி அடிகள் தென் ஆப்பிரிக்காவில் நடத்திய யுத்தம் தர்ம யுத்தமாக இருந்திருக்காது.
வர்ணாஸ்ரமத்தின் மிக அசிங்கமான அம்சம்" தீண்டாமை."அது இந்துமததிற்கு மட்டும்சொந்தமானதில்லை.யூதமதத்திலிலுமிருந்தது. யூதமதம் உச்சத்தில் இருந்த காலமிருந்தது. கிரேக்கர்கள்,மத்திய தரைக்கடல் பகுதியில் வாழும் மக்களை மனிதர்களாகவே கருதியதில்லை.அவர்களை சுமெரியர்கள் என்று அழைப்பார்கள். சுமெரியர்கள் தீண்டத்தகாதவர்கள். பொது இடங்களுக்கு அவர்கள் வரக்கூடாது. அவர்கள்கைபட்ட நீரைக்கூட அருந்தக் கூடாது.ஏன்? எசுபிரான் கூட இதனை அனுசரித்து வர வேண்டியதாயிற்று. "தீண்டாமையை" ஒழிக்க அவருக்கு உணர்த்தியது ஒரு சுமெரியப் பெண்.
.பலைவனத்தில் ஏசு சீடர்களொடு சென்றுகொண்டிருந்தார்.பிணியால் பாதிக்கப்பட்ட ஏழைஎளிய மக்களுக்கு மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்துவார். ஒருசமயம் அவர் சுமெரியர்களின் குடியிருப்பு வழியாகச்சென்று கொண்டிருந்தார். அந்தக்குடியிருப்பில் ஒருகுடிசையிலிருந்த சிறுமிக்கு உடல் நலமில்லை. அவளுடைய தாயார் தன் குழந்தையின் மேலுள்ள பாசத்தால் ஏசுவிடம் வந்தாள் அவளுக்குத்தெரியும் ." தான் தீண்டத்தகாதவள் தண்டிக்கப்படலாம்.தன்மகள் குணமடையவேண்டும் அதற்காக எந்ததண்டனையையும் தாங்க தயாரனாள்." ஏசு புரிந்து கொண்டார். சீடர்கள் பயந்தனர். மருந்து கோடுத்து அந்த சிறுமியை குணப்படுதினார். மனிதப்பிறவியில் தீண்டத்தகாதவர்கள் என்று எவருமில்லை"என்று அறிவித்தார். யூதர்களுக்கு ஏசுவின் மீதான கோபம் அதிகமாகியது.
தாழ்த்தப்பட்டவர்கள் கிறிஸ்தவ மதத்தை இந்தியாவில் நாடினர்கள் தென் மாவட்டங்களில் இன்றும் P.C,N.C, கொடுபோட்டு சர்ச்சுகளில் இட்ம் ஒதுக்குவது நின்றபாடில்லை .
தீண்டாமையை ஒழிப்பதற்காக தமிழகத்தில் ஒரு இயக்கம்நடந்து வருகிறது. தீண்டமைச்சுவர் உண்டாகி அதனை இடிக்க ஒரு போராட்டம். கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து போராடிய சட்டமன்ற உறுப்பினரை அடித்துஅடி வயிற்றில் மிதித்ததில் அவருடைய கர்பப்பை சிதைந்து ஆறுமாதம் மருத்துவ மனையில் இருந்த்தார்.
இன்றும் தீண்டாமை தொடர்கிறது. என் தந்தை காலத்திலும் இருந்தது.என் பாட்டனார் காலத்திலும் இருந்தது. பிரிடிஷ் ஆண்டபொதும் இருந்தது.நாயக்கர் காலத்தில்,சேர சோழபாண்டியர் காலத்தில், இருந்தது.அக்பர் காலத்தில், அசொகன் காலத்தில், புத்தன் காலத்தில்,அலக்சாண்டர் காலத்தில் இருந்தது. ஒவ்வொரு ஆட்சியிலும் மாறும் மாறும் என்று நமபி ஏமாந்தோமே!
அதனால் தான்பாரதி பாடினான். விடுதலை பற்றி பாடினான். விடுதலை யாருக்கு.? பிராமணணுக்கா? பிள்ளைக்கா ? முதலிக்கா ? இல்லை! இல்லை!
விடுதலை! விடுதலை! விடுதலை! என்றான். யருக்கு?
பறையருக்கும் விடுதலை என்றான் .
புலையருக்கும் விடுதலை என்றான்.
பறையரரோடு சேர்ந்து மறவருக்கும்விடுதலை என்றான்.
மறவர்கள் பறையரோடு சேர்ந்தால் தான் விடுதலை .
விடுதலைக்காக தவிக்கும் மக்களுக்கு என்ன சொல்லப்போகிறோம் !
நண்பர் ஒருவரின் இடுகையில் பின்னூட்டமிடும் பதிவர் வர்ணாஸ்ரம தர்மம் என்பதுதர்மமா? அதர்மமா? என்று கேட்டிருந்தார்.
வர்ணாஸ்ரம தர்மம் என்பதே misnomer என்பது என கருத்து. பிறப்பை அடிப்படையாகக் கொண்டு ஒரு மனிதன் கண்டுகொள்ளப்பட விதி இருக்குமனால் அந்த விதி அதர்மமானது.வெள்ளையர்கள் கருப்பின மக்களை கொடுமைப்படுத்தியது நியாயப்படுத்தப்பட்டது சரி என்றாகிவிடும்.இந்தியர்களை brown dog என்றது நியாயமாகி விடும்.காந்தி அடிகள் தென் ஆப்பிரிக்காவில் நடத்திய யுத்தம் தர்ம யுத்தமாக இருந்திருக்காது.
வர்ணாஸ்ரமத்தின் மிக அசிங்கமான அம்சம்" தீண்டாமை."அது இந்துமததிற்கு மட்டும்சொந்தமானதில்லை.யூதமதத்திலிலுமிருந்தது. யூதமதம் உச்சத்தில் இருந்த காலமிருந்தது. கிரேக்கர்கள்,மத்திய தரைக்கடல் பகுதியில் வாழும் மக்களை மனிதர்களாகவே கருதியதில்லை.அவர்களை சுமெரியர்கள் என்று அழைப்பார்கள். சுமெரியர்கள் தீண்டத்தகாதவர்கள். பொது இடங்களுக்கு அவர்கள் வரக்கூடாது. அவர்கள்கைபட்ட நீரைக்கூட அருந்தக் கூடாது.ஏன்? எசுபிரான் கூட இதனை அனுசரித்து வர வேண்டியதாயிற்று. "தீண்டாமையை" ஒழிக்க அவருக்கு உணர்த்தியது ஒரு சுமெரியப் பெண்.
.பலைவனத்தில் ஏசு சீடர்களொடு சென்றுகொண்டிருந்தார்.பிணியால் பாதிக்கப்பட்ட ஏழைஎளிய மக்களுக்கு மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்துவார். ஒருசமயம் அவர் சுமெரியர்களின் குடியிருப்பு வழியாகச்சென்று கொண்டிருந்தார். அந்தக்குடியிருப்பில் ஒருகுடிசையிலிருந்த சிறுமிக்கு உடல் நலமில்லை. அவளுடைய தாயார் தன் குழந்தையின் மேலுள்ள பாசத்தால் ஏசுவிடம் வந்தாள் அவளுக்குத்தெரியும் ." தான் தீண்டத்தகாதவள் தண்டிக்கப்படலாம்.தன்மகள் குணமடையவேண்டும் அதற்காக எந்ததண்டனையையும் தாங்க தயாரனாள்." ஏசு புரிந்து கொண்டார். சீடர்கள் பயந்தனர். மருந்து கோடுத்து அந்த சிறுமியை குணப்படுதினார். மனிதப்பிறவியில் தீண்டத்தகாதவர்கள் என்று எவருமில்லை"என்று அறிவித்தார். யூதர்களுக்கு ஏசுவின் மீதான கோபம் அதிகமாகியது.
தாழ்த்தப்பட்டவர்கள் கிறிஸ்தவ மதத்தை இந்தியாவில் நாடினர்கள் தென் மாவட்டங்களில் இன்றும் P.C,N.C, கொடுபோட்டு சர்ச்சுகளில் இட்ம் ஒதுக்குவது நின்றபாடில்லை .
தீண்டாமையை ஒழிப்பதற்காக தமிழகத்தில் ஒரு இயக்கம்நடந்து வருகிறது. தீண்டமைச்சுவர் உண்டாகி அதனை இடிக்க ஒரு போராட்டம். கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து போராடிய சட்டமன்ற உறுப்பினரை அடித்துஅடி வயிற்றில் மிதித்ததில் அவருடைய கர்பப்பை சிதைந்து ஆறுமாதம் மருத்துவ மனையில் இருந்த்தார்.
இன்றும் தீண்டாமை தொடர்கிறது. என் தந்தை காலத்திலும் இருந்தது.என் பாட்டனார் காலத்திலும் இருந்தது. பிரிடிஷ் ஆண்டபொதும் இருந்தது.நாயக்கர் காலத்தில்,சேர சோழபாண்டியர் காலத்தில், இருந்தது.அக்பர் காலத்தில், அசொகன் காலத்தில், புத்தன் காலத்தில்,அலக்சாண்டர் காலத்தில் இருந்தது. ஒவ்வொரு ஆட்சியிலும் மாறும் மாறும் என்று நமபி ஏமாந்தோமே!
அதனால் தான்பாரதி பாடினான். விடுதலை பற்றி பாடினான். விடுதலை யாருக்கு.? பிராமணணுக்கா? பிள்ளைக்கா ? முதலிக்கா ? இல்லை! இல்லை!
விடுதலை! விடுதலை! விடுதலை! என்றான். யருக்கு?
பறையருக்கும் விடுதலை என்றான் .
புலையருக்கும் விடுதலை என்றான்.
பறையரரோடு சேர்ந்து மறவருக்கும்விடுதலை என்றான்.
மறவர்கள் பறையரோடு சேர்ந்தால் தான் விடுதலை .
விடுதலைக்காக தவிக்கும் மக்களுக்கு என்ன சொல்லப்போகிறோம் !
Saturday, July 02, 2011
எலிகளைப் பிடித்து பெருச்சாளிகளை விட்ட கதை........
__அலைக்கற்றை ஊழல்---
எலிகளைப்பிடித்து பெருச்ச்சாளிகளைவிட்டகதை !
அலைக்கற்றை ஊழல் உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் விசாரிக்கப்பட்டு வருகிறது. எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் சட்டம் அதன் கடமையை செய்யுமாம். முன்னாள் முதல்வரின்மகள் சிறையில் .முன்னாள் மத்திய அமைச்சர் சிறையில் .மற்றுமொரு அமைச்சர் கம்பி எண்ண காத்திருக்கிறார் என்று கூறப்படுகிற்து
ஊழலில் அரசுக்கு இரண்டு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி நட்டமாம்.சி.பி.ஐ.புலிகள் இப்பொது போட்டிருக்கும் வழக்குகள் மூலம் முப்பத்தைந்தாயிரம் கோடி தேறலாம். பாக்கி நாமம் தான்.
கலைஞர் தொலைக்காட்சிக்கு 210 கொடி ரூ ஒரு பாய் கடன் கொடுத்திருக்கிறார். நாம் 50 ரூ கேட்டால் அரைவேட்டியையும் அரணாக்கயிரையும் பிடுங்கி வைத்துக் கொண்டு கொடுப்பார்கள்.இவர்களுக்கு வார்த்தையிலேயே எல்லாம் முடிந்துவிட்டது.பவம் !இதற்காகத்தான் கனிமொழியம்மையார் சிறையிலிருக்கிறார்.தப்பு தப்புதான் யார் செய்தாலும் !
சென்னையில் அயனான இடம். மவுண்ட் ரொடு பக்கமாம்.வோல்டாஸ் கம்பெனிக்கு சொந்தமானது. அதனை ரெவதியம்மள் என்பவருக்கு விற்றிருக்கிறார்கள். விலை 600 கோடி . வொல்டஸ் கம்பெனி டாடாவுக்குச் சொந்தமானது. அந்த இடம் சந்தைவிலைக்கு 6000கொடி பெருமாம். டொகொமோ டொகொமோ என்று தொலைக்காட்சியில்வருகிறதே அது யார் கம்பெனி?
எங்களிடம் யாரும்தப்பமுடியாது என்று சி.பி.ஐ சவால் விடுகிறது..ADAG கம்பெனியின் உயர் அதிகாரிகளை பிடித்து சிறையில் பொட்டிருக்கிறொம் என்கிறார்கள். Anil Dhirubai Ambani Group தான் ADAG என்பது . அம்பானியை இவர்களால் தொட முடியாது.நிதிபதி பாரிஹோக் பெரியவர்கள் புகுந்து விளையாடுகிறார்கள் என்று தோன்றுவதாகச்சொல்கிறார். அனில் அம்பானியை ஏன் பிடிக்கவில்லை?. அலைகற்றை உரிமம்பெற கட்டணம் காசோலையாக கொடுக்கப்ப்ட்டுள்ளது. அம்பானியும் அவர் மனைவியும் 100கோடிக்குமெல்தான் கையெழுத்துப்பொடுவார்கள். ஆகவே அவர்களை சம்மந்தப்படுத்தமுடியாது என்கிறார்கள்.50கொடியாக பத்துகாசோலையில் கையெழுத்துப்போட்ட அதிகாரிகள் கம்பி எண்ணுகிறார்கள். அலைக்கற்றையின் பலன் அம்பானிக்கு போகும்.
விடியோகொன் கம்பெனி தெரியும். முதன் முதலாக தொலைகாட்சி பெட்டி செய்ய உரிமம்பெற்ற கம்பெனி .இன்று இந்தியாவின் பணக்காரர்களில் 11 இடத்தில் அதன் முதலாளி வேணுகொபால் தூத் இருக்கிறார். இவ்ருடைய தம்பி ரஜ் குமார் தூத். ஏம்.பி .அலைக்கற்றை உரிமம் வாங்க ராஜ்குமார் தான் ஏற்பாடு.
ESSR கம்பெனியின் முதலாளி ரூயா.அலைகற்றை உரிமம் பெற்றவர். இவர்களை ஒன்றும் செய்யவில்லை.செய்யமுடியாது.சிதம்பரம் நமக்கு உள் துறை அமைச்சர். அவர்களுக்கு காசு கொடுத்தால் கோர்ட்படி எறி வாய்தா வங்கும் வக்கீல்.
தினம் கனிமொழி பற்றி செய்திகள்வரும் . கழிப்பறைக்கு திரைபோட்டிருக்கிறார்ர்கள் . அவர் மிழுகு வர்த்தி தயாரிக்கிறார்..வெப்பம் தாங்க முடியாமல் உடலில் கொப்புளங்கள் வருகிறது. என்று பத்திரிகையில்படித்துவிட்டு தூங்கி விடுவோம் .
அன்ன ஹசாரெயும் ராமதேவும் சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடிப்பார்கள் .செய்திகளை வாசிப்போம் .
ரூயா,டாடா, அம்பானி, தூத் போன்ற பெருச்சாளிகள் புகுந்துவிளையாடும்
எலிகளைப்பிடித்து பெருச்ச்சாளிகளைவிட்டகதை !
அலைக்கற்றை ஊழல் உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் விசாரிக்கப்பட்டு வருகிறது. எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் சட்டம் அதன் கடமையை செய்யுமாம். முன்னாள் முதல்வரின்மகள் சிறையில் .முன்னாள் மத்திய அமைச்சர் சிறையில் .மற்றுமொரு அமைச்சர் கம்பி எண்ண காத்திருக்கிறார் என்று கூறப்படுகிற்து
ஊழலில் அரசுக்கு இரண்டு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி நட்டமாம்.சி.பி.ஐ.புலிகள் இப்பொது போட்டிருக்கும் வழக்குகள் மூலம் முப்பத்தைந்தாயிரம் கோடி தேறலாம். பாக்கி நாமம் தான்.
கலைஞர் தொலைக்காட்சிக்கு 210 கொடி ரூ ஒரு பாய் கடன் கொடுத்திருக்கிறார். நாம் 50 ரூ கேட்டால் அரைவேட்டியையும் அரணாக்கயிரையும் பிடுங்கி வைத்துக் கொண்டு கொடுப்பார்கள்.இவர்களுக்கு வார்த்தையிலேயே எல்லாம் முடிந்துவிட்டது.பவம் !இதற்காகத்தான் கனிமொழியம்மையார் சிறையிலிருக்கிறார்.தப்பு தப்புதான் யார் செய்தாலும் !
சென்னையில் அயனான இடம். மவுண்ட் ரொடு பக்கமாம்.வோல்டாஸ் கம்பெனிக்கு சொந்தமானது. அதனை ரெவதியம்மள் என்பவருக்கு விற்றிருக்கிறார்கள். விலை 600 கோடி . வொல்டஸ் கம்பெனி டாடாவுக்குச் சொந்தமானது. அந்த இடம் சந்தைவிலைக்கு 6000கொடி பெருமாம். டொகொமோ டொகொமோ என்று தொலைக்காட்சியில்வருகிறதே அது யார் கம்பெனி?
எங்களிடம் யாரும்தப்பமுடியாது என்று சி.பி.ஐ சவால் விடுகிறது..ADAG கம்பெனியின் உயர் அதிகாரிகளை பிடித்து சிறையில் பொட்டிருக்கிறொம் என்கிறார்கள். Anil Dhirubai Ambani Group தான் ADAG என்பது . அம்பானியை இவர்களால் தொட முடியாது.நிதிபதி பாரிஹோக் பெரியவர்கள் புகுந்து விளையாடுகிறார்கள் என்று தோன்றுவதாகச்சொல்கிறார். அனில் அம்பானியை ஏன் பிடிக்கவில்லை?. அலைகற்றை உரிமம்பெற கட்டணம் காசோலையாக கொடுக்கப்ப்ட்டுள்ளது. அம்பானியும் அவர் மனைவியும் 100கோடிக்குமெல்தான் கையெழுத்துப்பொடுவார்கள். ஆகவே அவர்களை சம்மந்தப்படுத்தமுடியாது என்கிறார்கள்.50கொடியாக பத்துகாசோலையில் கையெழுத்துப்போட்ட அதிகாரிகள் கம்பி எண்ணுகிறார்கள். அலைக்கற்றையின் பலன் அம்பானிக்கு போகும்.
விடியோகொன் கம்பெனி தெரியும். முதன் முதலாக தொலைகாட்சி பெட்டி செய்ய உரிமம்பெற்ற கம்பெனி .இன்று இந்தியாவின் பணக்காரர்களில் 11 இடத்தில் அதன் முதலாளி வேணுகொபால் தூத் இருக்கிறார். இவ்ருடைய தம்பி ரஜ் குமார் தூத். ஏம்.பி .அலைக்கற்றை உரிமம் வாங்க ராஜ்குமார் தான் ஏற்பாடு.
ESSR கம்பெனியின் முதலாளி ரூயா.அலைகற்றை உரிமம் பெற்றவர். இவர்களை ஒன்றும் செய்யவில்லை.செய்யமுடியாது.சிதம்பரம் நமக்கு உள் துறை அமைச்சர். அவர்களுக்கு காசு கொடுத்தால் கோர்ட்படி எறி வாய்தா வங்கும் வக்கீல்.
தினம் கனிமொழி பற்றி செய்திகள்வரும் . கழிப்பறைக்கு திரைபோட்டிருக்கிறார்ர்கள் . அவர் மிழுகு வர்த்தி தயாரிக்கிறார்..வெப்பம் தாங்க முடியாமல் உடலில் கொப்புளங்கள் வருகிறது. என்று பத்திரிகையில்படித்துவிட்டு தூங்கி விடுவோம் .
அன்ன ஹசாரெயும் ராமதேவும் சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடிப்பார்கள் .செய்திகளை வாசிப்போம் .
ரூயா,டாடா, அம்பானி, தூத் போன்ற பெருச்சாளிகள் புகுந்துவிளையாடும்