Sunday, September 29, 2013
Sunday, September 22, 2013
"கலவை "
(இந்தியாவந்து இரண்டு நாள் சென்னையில் தங்கி விட்டுப் போன அமெரிக்க நண்பரின் பதிவிலிருந்து )
என்னதான் சொல்லுங்கள், நாத்திகத்தில் இது போன்ற முட்டாள்தனங்கள் நடக்க வாய்ப்பே இல்லை.
2. சமீபத்தில் நடந்து முடிந்த வினாயக சதுர்த்தியின் விளைவாக நிறைய ஆத்திகர்கள் திருடர்களாக மாறியிருக்கிறார்கள். டைம்ஸ் ஆப் இன்டியாவில் வந்திருக்கும் செய்திப்படி நிறைய இடங்களில் ஆத்திகர்கள் எத்தனையோ ஆயிரம் வாட் கணக்கில் பொது மின்சாரம் திருடி வினாயகப் பெம்மானைக் கோலாகலமாக வழிபட்டிருக்கிறார்கள். திருட்டில் வினாயகருக்கும் பங்களித்திருக்கிறாகள் என்பது தெரிந்து செய்திருக்கிறார்களா? இல்லை 'வினாயகர் தானே,, நேரிலா வரப்போகிறார்?' என்ற சமாதானத்துடன் செய்தார்களா? ஆக மொத்தம் நாட்டுக்கு நஷ்டம்.
விடுங்க, அதைப் பற்றி யாருக்கு என்ன கவலை? அதை மோடி பாத்துக்குவாரு. இப்பத்திக்கு வினாயகரை நல்லா லைட் வச்சு கூட்டிக்கிட்டுப் போய் கடல்லே கரைச்சா போதும். என்னா சொல்றீங்க?
என்னதான் சொல்லுங்கள், நாத்திகத்தில்..
கொஞ்சம் இருங்க, யாரோ வேகமா வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்றாப்ல இருக்குதே?
மோடி என்றதும் நினைவுக்கு வந்தது. நரேந்திர மோடி நிச்சயம் வெற்றி பெறுவார் என்கிறார்கள். ந.மோடி வருவதால் இந்தியா "எங்கியோ போவப் போவுது" என்கிறார்கள். "என்ன செய்வார் மோடி?" என்று சிலரிடம் கேட்டேன். எல்லோரும் ஏதோ ஒரு எதிர்பார்ப்பில் (குஜராத்?) அப்படி இப்படி சொல்கிறார்களே தவிர, காங்கிரசை விட மோடி எந்த விதத்தில் மேலான ஆட்சியைக் கொண்டு வருவார் என்று யாராலும் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. ஊழலை ஒழிப்பதிலிருந்து இஸ்லாமியரை விரட்டுவது வரை ஆளாளுக்குத் தோன்றியதைச் சொல்கிறார்கள்.
'இந்துக்களுக்கு நல்லது' என்ற காரணத்துக்காக மோடிக்கு ஓட்டு விழுந்தால் வெட்கக் கேடு.
என்னதான் சொல்லுங்கள், நாத்திகத்தில் இது போன்ற முட்டாள்தனங்கள் நடக்க வாய்ப்பே இல்லை.
2. சமீபத்தில் நடந்து முடிந்த வினாயக சதுர்த்தியின் விளைவாக நிறைய ஆத்திகர்கள் திருடர்களாக மாறியிருக்கிறார்கள். டைம்ஸ் ஆப் இன்டியாவில் வந்திருக்கும் செய்திப்படி நிறைய இடங்களில் ஆத்திகர்கள் எத்தனையோ ஆயிரம் வாட் கணக்கில் பொது மின்சாரம் திருடி வினாயகப் பெம்மானைக் கோலாகலமாக வழிபட்டிருக்கிறார்கள். திருட்டில் வினாயகருக்கும் பங்களித்திருக்கிறாகள் என்பது தெரிந்து செய்திருக்கிறார்களா? இல்லை 'வினாயகர் தானே,, நேரிலா வரப்போகிறார்?' என்ற சமாதானத்துடன் செய்தார்களா? ஆக மொத்தம் நாட்டுக்கு நஷ்டம்.
விடுங்க, அதைப் பற்றி யாருக்கு என்ன கவலை? அதை மோடி பாத்துக்குவாரு. இப்பத்திக்கு வினாயகரை நல்லா லைட் வச்சு கூட்டிக்கிட்டுப் போய் கடல்லே கரைச்சா போதும். என்னா சொல்றீங்க?
என்னதான் சொல்லுங்கள், நாத்திகத்தில்..
கொஞ்சம் இருங்க, யாரோ வேகமா வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்றாப்ல இருக்குதே?
மோடி என்றதும் நினைவுக்கு வந்தது. நரேந்திர மோடி நிச்சயம் வெற்றி பெறுவார் என்கிறார்கள். ந.மோடி வருவதால் இந்தியா "எங்கியோ போவப் போவுது" என்கிறார்கள். "என்ன செய்வார் மோடி?" என்று சிலரிடம் கேட்டேன். எல்லோரும் ஏதோ ஒரு எதிர்பார்ப்பில் (குஜராத்?) அப்படி இப்படி சொல்கிறார்களே தவிர, காங்கிரசை விட மோடி எந்த விதத்தில் மேலான ஆட்சியைக் கொண்டு வருவார் என்று யாராலும் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. ஊழலை ஒழிப்பதிலிருந்து இஸ்லாமியரை விரட்டுவது வரை ஆளாளுக்குத் தோன்றியதைச் சொல்கிறார்கள்.
'இந்துக்களுக்கு நல்லது' என்ற காரணத்துக்காக மோடிக்கு ஓட்டு விழுந்தால் வெட்கக் கேடு.
Saturday, September 21, 2013
திரைப்பட நூற்றாண்டு விழாவும் ,
அந்த மூன்று இளைஞர்களும் .......!!!
திரைப்பட விழா பற்றிய சர்ச்சை தொடங்கி விட்டது ! சுமர் நாற்பது நாற்பத்தி ஐந்து வருடங்களுக்குமுனாபாக தமிழ் திரைப்பட உலகை மூற்றிலும்மாற்றி அமைக்க வேண்டும் என்று கருதி திரைப்பட உலகிற்குள் நுழைய முன் வந்தனர் மூன்று இளைஞர்கள் !
கமலா ஹாசன்,பாரதிராஜா, லெனின் ஆகியோர்தான் அந்த மூவரும்!
எல்டாம்ஸ் ரோடின் காம்பவுண்டு சுவர்களின்மேல் உட்கார்ந்து கொண்டு உலக சினிமா பற்றியும், தமிழ் சினிமா பற்றியும் அலசி ஆராய்வார்கள் ! சிலநாட்கள் விடியும்வரை பேசுவார்கள் !
அவர்களுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது ! அன்றிருந்த நிலையில் திரை உலகத்திற்குள் ஆதிக்கம் செலுத்தி வந்த எம்.ஜி.ஆர்,சிவாஜி ஜெமினி ஆகிய star களை மீறி எதுவும் செய்யமுடியாது ! இந்த star system உடைக்கப்படவேண்டும் ! வேறு வழியில்லை என்பதை உணர்ந்தார்கள் !
காலம் மாறியது ! கோடம் பாக்கம் குச்சிலுக்குள் இருந்த தமிழ் திரைப்படம் "பதினாறு வயதினிலே "என்ற படத்தின் மூலம் studio system தனை உடைத்துகொண்டு வெளியே வந்தது !
நடிகனின் பெயரை விட இயக்குனரின் பெயர் ரசிகர்களிடையே முதன் முறையாக பேசப்பட்டது !
இயக்குனருக்கு star அந்தஸ்து வந்தது !
பாரதி ராஜா star இயக்குனரானார் !
அதிலிருந்து கீழெ இறங்க மனமில்லாத அவர் அங்கேயே தங்கி அதோடு ஐக்கியமாகிவிட்டார் !
முன்றில் ஒன்று கழிந்தது!
கமலஹாசன் தொடர்ந்தார் ! திரைப்பட தயாரிப்பின் அன்றய நெளிவு சுளிவு களுக்கு ஏற்ப அவர் தன்னை மாற்றி கொண்டார் ! "சகலகலாவல்லவன் " ஆனார் ! அருகிலேயெ வந்து கொண்டிருந்த ரஜனி கைகோர்த்துக் கொண்டார் ! எம்.ஜி.ஆர்,சிவாஜி க்குபதிலாக கமல்,ரஜனி star system வந்தது ! கமல் அதில் முங்கி முழுகிப்போனார் !
மூன்றில் இரண்டாவதும் கழிந்தது !
80 ஆண்டுகளில் தா.மு.எ.ச கலைஇரவுகளை நடத்தும்! குறிப்பாக திருப்பரம்குன்றம் கலை இரவு விசேஷ் மாக இருக்கும் ! ஒரு முறை
லெனின் வந்திருந்தார் ! அவரோடு அருகில் அமர்ந்து பேச வாய்ப்பு கிடைத்து! தமிழ் திரைப்படம் பற்றியும் அதனை கேரளம், மே.வங்கம் , மற்றும் சர்வதேச தரத்திற்கு கொண்டுசெல்வது பற்றியும் அவரிடம் விவாதித்தேன்! அப்போது தான் எலடாம்ஸ் ரோடு இளைஞர்கள் பற்றி குறிப்பிட்டார் !
"தன்னந்தனியாக நான் நிற்கிறேன் ! உங்களைப் போன்ற முற்பாக்கு எழுத்தாளர்கள் தான் கைகொடுக்க வேண்டும் " என்றார் !
த.மு.எ.க.சாவின் விருது நகர் மாநாட்டில் "முற்போக்கு எழுத்தாளர்கள் " கைகொடுத்து வருகிறார்கள் என்பதை பகிரங்கமாக செயற்படுத்தினார் லெனின் !
இன்று வெறும் அரங்கங்களில் அடைபட்டுக் கிடந்த திரைப்படத்தை மக்கள்மத்தியில் த.மு.எ.க.ச கொண்டு சென்று கொண்டிருக்கிறது !
லெனின் அவ்ர்களே நாம் கைகோர்த்து நடை போட வேண்டிய தூரம் இன்னும் அதிகம் !
Miles to go ! comrade !!!
Thursday, September 19, 2013
"நாத்திகம் " எப்போது தோன்றியது ......?
சீத்தாராம் எச்சூரி விளக்கம் !!!
"நாத்திகம் " எப்போது தோன்றியது என்ற கேள்வியை எழுப்பி அதற்கான விளக்கத்தையும் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் சீத்தாரம் எச்சூரி விளக்கம் அளித்துள்ளார் !
"இந்துஸ்தான் டைம்ஸ் " பத்திரிகையில் மூட நம்பிகையை எதிர்த்து போராடிய நரேந்திர தபோல்கர் பற்றி அவர் எழுதியுள்ள காட்டுரையில் நாத்திகம் பற்றி விவரிக்கையில் அதன் தோற்றம் பற்றி விளக்கியுள்ளார் !
"பகுத்தறிவாளர்களையும், மூட நம்பிக்கை எதிப்பாளர்களையும் இவர்கள் கடவுளுக்கு எதிரானவர்கள் என்று பிரச்சாரம் செய்தே மதத்தை தங்கள் ஆளுமையில் வைக்கிறார்கள் ! "நான் மத நம்பிக்கையை எதிர்ப்பவன் அல்ல " என்று தபோலகர் அறிவித்தும் அவரை சுட்டுக் கொன்று விட்டர்கள் ! மக்களிடையே மூட நம்பிக்கையை வளர்த்து அதில்குளிர்காய நினைக்கும்போலி சாமியார்களை எதிர்த்தே நான் போராடுகிறேன் என்று அறிவித்தவர் தபோல்கர் !
பகுத்தறிவு வாதம் என்பது இந்திய தத்துவ மரபில் இருந்தே வந்துள்ளது ! மாயாஜாலங்கள் மூலம் மக்களை ஈர்ப்பது தவறு என்று புத்தர் கூறியுள்ளார் !
பௌத்தர்களின் வாழ்க்கை முறையை நெறிப்படுத்தும் "பால-விநய- தீபிகா என்ற நூலில் இது குறிப்பிடப்பட்டுள்ளது !
புலன் கடந்த அறிவியல் தோன்றிய(Metaphysics ) போதே பகுத்தறிவும் தோன்றியது என்கிறார் " சித்திரம் எச்சூரி ! மேலும்
" மேற்கத்திய தத்துவ ஞானிகள் கி.மு 6 ம் நூற்றாண்டில் துருக்கி நாட்டில் மெலிடஸ் நகரில் வாழ்ந்த " தேம்ஸ் " என்ற அறிஞர்தான் இதன் மூலவர் என்று கருதுகிறார்கள் !
இந்திய வலாற்றாளரான தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா கி.மு 10-7ம்நூற்றாண்டிலேயெ நாத்திகக் கருத்துகள் உருவாகிவிட்டதாக கருதுகிறார்!
இதற்கு சான்றாக "சத் பத பிரம்மனா " என்ற நூலை சுட்டிக்காட்டுகிறார் ! இந்த நூலில் "உட் டலக அருணி " என்ற அறிஞர் பற்றி கூறுகிறார் ! இவர் அறிவுக் கோட்பாட்டை உருவாக்கியவர் ! எந்த ஒன்றையும் "உற்றுநோக்கி " அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான் அறிவியல் கோட்பாடு !
புத்தர் காலத்திற்கு முன்பே நாத்திகக் கருத்துகள் இருந்தன என்றும் அதற்கு சான்றாக "சந்தோக்கிய " உபநிஷத்தை சுட்டிக் காட்டுகிறார் சட்டோபாத்தியாயா! "என்று சீத்தாராம் எச்சூரி கூறியுள்ளார் !!
(முழுமையான கட்டுரையின் தமிழாக்கம் தீக்கதிர் பத்திரிக்கை 19-9-13 ல் வந்துள்ளது )
"பகுத்தறிவாளர்களையும், மூட நம்பிக்கை எதிப்பாளர்களையும் இவர்கள் கடவுளுக்கு எதிரானவர்கள் என்று பிரச்சாரம் செய்தே மதத்தை தங்கள் ஆளுமையில் வைக்கிறார்கள் ! "நான் மத நம்பிக்கையை எதிர்ப்பவன் அல்ல " என்று தபோலகர் அறிவித்தும் அவரை சுட்டுக் கொன்று விட்டர்கள் ! மக்களிடையே மூட நம்பிக்கையை வளர்த்து அதில்குளிர்காய நினைக்கும்போலி சாமியார்களை எதிர்த்தே நான் போராடுகிறேன் என்று அறிவித்தவர் தபோல்கர் !
பகுத்தறிவு வாதம் என்பது இந்திய தத்துவ மரபில் இருந்தே வந்துள்ளது ! மாயாஜாலங்கள் மூலம் மக்களை ஈர்ப்பது தவறு என்று புத்தர் கூறியுள்ளார் !
பௌத்தர்களின் வாழ்க்கை முறையை நெறிப்படுத்தும் "பால-விநய- தீபிகா என்ற நூலில் இது குறிப்பிடப்பட்டுள்ளது !
புலன் கடந்த அறிவியல் தோன்றிய(Metaphysics ) போதே பகுத்தறிவும் தோன்றியது என்கிறார் " சித்திரம் எச்சூரி ! மேலும்
" மேற்கத்திய தத்துவ ஞானிகள் கி.மு 6 ம் நூற்றாண்டில் துருக்கி நாட்டில் மெலிடஸ் நகரில் வாழ்ந்த " தேம்ஸ் " என்ற அறிஞர்தான் இதன் மூலவர் என்று கருதுகிறார்கள் !
இந்திய வலாற்றாளரான தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா கி.மு 10-7ம்நூற்றாண்டிலேயெ நாத்திகக் கருத்துகள் உருவாகிவிட்டதாக கருதுகிறார்!
இதற்கு சான்றாக "சத் பத பிரம்மனா " என்ற நூலை சுட்டிக்காட்டுகிறார் ! இந்த நூலில் "உட் டலக அருணி " என்ற அறிஞர் பற்றி கூறுகிறார் ! இவர் அறிவுக் கோட்பாட்டை உருவாக்கியவர் ! எந்த ஒன்றையும் "உற்றுநோக்கி " அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான் அறிவியல் கோட்பாடு !
புத்தர் காலத்திற்கு முன்பே நாத்திகக் கருத்துகள் இருந்தன என்றும் அதற்கு சான்றாக "சந்தோக்கிய " உபநிஷத்தை சுட்டிக் காட்டுகிறார் சட்டோபாத்தியாயா! "என்று சீத்தாராம் எச்சூரி கூறியுள்ளார் !!
(முழுமையான கட்டுரையின் தமிழாக்கம் தீக்கதிர் பத்திரிக்கை 19-9-13 ல் வந்துள்ளது )
Friday, September 13, 2013
மோகன் பகவத் என்ற கால்நடை மருத்துவர்....!!!
ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கத்தின் தற்போதைய தலைவர் மோகன் பகவத் !
இவர் ஆரம்ப காலத்தில் அகோலாவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்தார் ! நிறுத்திவிட்டு மக்கள் சேவை செய்ய .ஆர் .எஸ். எஸ் இயக்கத்தில் சேர்ந்தார் !
இன்று இந்தியாவின் சகல பிணிகளையும் போக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் ! அடுத்து மிகவும் உத்தமமான ஒருவரை இந்தியாவின் பிரதமராக்குவது என்று தீர்மானமாகச் செயல்பட்டு வருகிறார் !
அவர் சொல்லும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்பவர் யாரானாலும் அவர்களை பிரதமராக்குவேன் என்று அறிவித்துள்ளார் ! அவருடைய நான்கு நிபந்தனைகள் என்ன?
1. பிரதமரானதும் பிரும்மாண்டமான அளவில் அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட வேண்டும் !
2.முஸ்லிம்,கிறிஸ்துவன், இந்து என்று பாரபட்சமில்லாமல் சட்ட திருத்தமாக பொது சிவில் சட்டம்கொண்டுவரவேண்டும் .
3. மத்திய பிரதேசத்து தேஷ்முக் கேரளத்தில் வியாபாரம் செய்யலாம் ! அங்கு சம்பாதித்து கேரளத்தில் வீடு கட்டிக் கொள்ளலாம் ! அதே தேஷ்முக் காஷ் மிர் சென்றால் அங்கு சொந்தமாக வீடு வாங்க முடியாது ! இதற்கு காரணம் காஷ்மீர் மக்களூக்கு 1947ல் கொடுத்த வாக்குறுதி ! அரசு சட்டத்தில் உள்ள அந்த 370 சரத்தை நீக்கி விட !வேண்டும்
4. பகத் கால்நடை மருத்துவர் என்று சொன்னேன் ! அவருக்கு பசுக்கள் என்றால் கொள்ளைப் பிரியம் !ஆகவே பசு வதை தடை சட்டத்தை கொண்டு வரவேண்டும் !
இதனை எற்றுக் கொள்பவர்களை பிரதமராக்குவேன் என்றார் !
நரேந்திர மூதி சரி என்கிறார் ! இன்று மாலை அவரை பிரதமர் வேட்பா:ளராக அறிவிப்பார் என்று சொல்கிறார்கள் !
பா.ஜ.க வில் பெரிய வக்கீல்கள்,டாக்டர்கள், பேராசிரியர்கள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் ஆகியோர் இருக்கிறார்கள் !
"நீ யாருய்யா ? நீ ஏன் வர ! முதல்ல ஒங்க ஆர்.எஸ் .எஸ் ஆபிஸ்ல ஒரு ராமர் படத்தை மாட்டு ! பொறவு கோவிலுக்கு வா ? நு சொல்ல அவங்களுக்கு தைரியமில்ல !
அத்வானி கோயில் கட்ட தயார் ! எல்லா நிபந்தனையும் ஏற்க தயார் ! நரேந்திர மூதி வந்தா பா .ஜ.க வையும் அழிச்சுடுவரு!.
இந்தியாவையும் அழிச்சுடுவாரூ !" நு நினைக்கிறார் !
அத்வானிக்கு தவறான வழி காட்டப்படுகிறது ! அவரை சுத்தி பலர் இருக்காங்க ! அவங்க சொல்றத கேக்காரு ங்காங்க !
அதுலயும் குல்கர்னி நு ஒத்தரு இருக்காறாம் ! அவரு மத்திய பிரதேசத்துக்காரர்! ஆனாலும் முப்பது வருசத்துக்கு முன்னால மார்க்சிஸ்கட்சில இருந்தாராம் !