(அவர் நினைவில் )
Tuesday, October 15, 2019
Monday, October 14, 2019
என் முன்னோடி
ப.ரத்தினம்
மறைந்தார் ...!
அஞ்சலிகள் !!!
1962ம் ஆண்டு வாக்கில் "தாமரை " இதழில் என் முதல்சிறுகதை வெளிவந்ததிலிருந்து ரத்தினம் அவர்கள் பரிச்சியம். கட்சி ஒன்றாயிருந்த காலம்.
நவபாரதி ,முப்பால் மணி , காஸ்யபன், ப.இரத்தினம் என்று ஒரு ஜமா சேர்ந்திருப்போம். கலை ,இலக்கிய பெறு மன்றம் தான் எங்கள் புகலிடம்.
காலம் மாறியது. 1969ம் ஆண்டு செம்மலர் பத்திரிகையை கு.சின்னப்ப பாரதி ஆசிரியராக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. அவருக்கு உதவியாக உள்ள ஆசிரியர் குழுவில் என்னை சேர்த்துவிட்டார் தோழர் ப.ரத்தினம்.
நெருக்கம் அதிகமானது. மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை மாநாட்டிற்காக அவர் எழுதிய நாடகம் "நெஞ்சில் ஒரு கனல் "பீப்பிள்ஸ் தியேட்டரின் சார்பாக அரங்கேற்றப்பட்டது. வையை செழியன் என்ற பெயரில் எழுதி இருந்தார். இயக்கியவர் காஸ்யபன்,
செம்மலரில் ப.ரத்தினம் என்ற பெயரில் எழுதிவந்தார். சில சமயங்களில் மதிச்சியம் கணேசன் என்ற பெயரிலும் எழுதி உள்ளார்.
1974ம் ஆண்டு செம்மலரில் எழுதிவந்த எழுத்தாளர்கள் மதுரை பெரியார் நிலையம் அருகில் உள்ள போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தில் சந்தித்தோம்.தமிழகம் பூராவிலும் இருந்து வந்திருந்தவர்கள் 16 பேர்.
நமக்கு என்று ஒரு எழுத்தாளர்சங்கம் ஆரம்பிக்க முடிவாகியது. 1975ம் ஆண்டு சங்கம் உதயமாகியது. மதுர மாவட்ட செயலாளராக ரத்தினம் அவர்கள்பணியாற்றினார்கள். என்னையும்மாவட்ட செயலாளராக ஆக் கி அழகு பார்த்தார்கள்.
அப்போது மார்க்சிஸ்க்காட்ச்சியின் மாநிலக்குழு மதுரையில்செயல்பட்டு வந்தது. கடசியின் முது கெலும்பாக பணியாற்றினார். தன்னை எப்போதுமே முன் நிறுத்திக்கொள்ளாத மனம் கொண்டவர்.இளைஞர்களை ஆதரித்தது செயல்படுவார்.
அற்புதமான அந்த தோழரின் மறைவு கட்சிக்கும் தனிப்பட்டமுறையில் எனக்கும் பெரும் இழப்பாகும்.
அவருக்கு என் அஞ்சலிகள்!!!
Sunday, September 22, 2019
கோமல் சுவாமிநாதனும் ,
அருங்காட்ச்சி அரங்கமும் .....!!!
அப்போது நான் மதுரையில் இருந்தேன் .கோமல் அவர்களிடமிதுனது தந்தி வரும். " நாளை பாண்டியனில் வருகை. மாலை நாலுமணிக்கு "சந்தானம் " வாருங்கள். ரங்கராஜா புரம் போகிறோம் "என்று இருக்கும்.
மறுநாள் மாலை ரங்கராஜா புறம் சென்று அங்கு ஆசிரியர் பணிசெய்யும் நீலமணி வாத்தியாரை பார்ப்போம்.
"மதுரை வீரன் அம்மானை " என்ற கிராமியப்பாடலை பதிவு செய்து வருவோம். இப்படி நிறைய அவர் சேர்த்து வைத்துள்ளார். "இவை அழிந்து விடக்கூடாது ஐயா !பாதுகாக்கப்படவேண்டும் என்பார்.இப்படி பல அனுபவங்கள் உண்டு.
இரண்டு பெரும் பலநாடக விழாக்களுக்கு செல்வோம். அவர் அருகில் அமர்ந்து கொண்டு நாடகம் ப்பார்ப்பதே ஒரு சுகம்.
மதுரை யில் ஒரு நாடக விழா ! அதில் "பரிக்கிறமா " என்ற நாடகம்கோவாவில் இருந்து ஒரு குழு போட்டது. மலை யாள நா டகமிருந்தது.
ஒரு விழாவில் "பனி வாள் " என்ற நாடகம் .டாக்டர் வேலு சரவணன் ஆரம்ப காலத்தில் போட்ட நாடகம். வித்தியாசமான அரங்க அமைப்பு .உடல் மொழி . வசன உச்சரிப்பு. மற்றோரூ நாடகம் - பாண்டிசெறி பேராசிரியர்......ஆறுமுகம் என்று நினைவு - ரயிலடியின் ஒரு பகுதி தான் அரங்கம்.இருப்புப்பாதை முன் மேடை வழியாக பார்வையாளர்கள் வரை வரும் .இரண்டு பேர் இருப்புப்பாதையில் பேசிக்கொண்டு வருவார்கள் வருவார்கள். ரயில் வருவது ஒளியின் முலமும் ஒலியின் மூலமும் உணர்த்தப்படும்.
எனக்கு இது புது அனுபவம். "என்னய்யா இது? "என்று கேட்டேன்.
"பிறகு இரவு பேசிக்கொள்ளலாம் .இப்போது பாரும் " என்றார்.
மதுரைபலக்லைக்கழக பேராசிரியர் டாகடர் ராம மூர்த்தி பேசினார்.
இரவு நாங்கள் இருவரும் விவாதித்தோம்.
"சாமா ! திருவனந்தபுரம் போயிருக்கேறா ?
"போயிருக்கேன் "
'அங்க நகைக்கடைல தங்க நாகை மட்டும் இருக்காது . தந்த சிலை களும் வச்சிருப்பாங்க "
"ஆமா ! அழகான யானை கூட்டம், மான்கள் னு இருக்கும்"
"அதுமட்டுமில்ல வே ! ஊஞ்சலில் ஆடும் ராதையும் கிருஷ்ன்ணனும் ராதையும் இருக்கும்" ..ராதைக்கு 25 வயது .கிருஷ்ணருக்கு 15 வயது.காதலிச் சாங்க .ராதை யின் சேலை காற்றில்பறக்க கண்ணன் மீது நளினமாக சாய்ந்திருப்பாள் .அவள் கழுத்தை வளைத்தது கண்ணன் வேணுகானம் இசைப்பான்.அவன் உடல் 15 வயதை காட்டும் முகம் குழந்தை முகமாக ருக்கும் ".
"பார்த்திருக்கிறேன்,மணிக்கணக்கில் சோறுதண்ணி இல்லாமல் பார்க்கலாம்"
"அது சரி ! அதுக்காக தினம் பூ செய்யும் விக்கிரகம் மாதிரி சந்தனம் குங்குமம் புஷ்பம் சாத்த முடியாது.. அந்த அற்புதமான கலைஞனை கவுரவிக்க பாராட்ட அந்த பதுமையை அருங்காட்ச்சி அரங்கத்தில் தா வைக்க வேண்டும்."
"புரியுதா வே "
"புரிஞ்சுட்டு"
Tuesday, August 27, 2019
"அஞ்சல் அட்டை "
காஷ்மீரோடு தொடர்பு கொள்ள அஞ்சல்அட்டை ஒன்றுதான் வழி . ஆகா ஷாஹித் அலி என்ற கவிஞர் இதனை ஒரு கவிதையாக எழுதி உள்ளார்.
கர்நாடக இசை கலைஞர் T . M . கிருஷ்ணா இதனை பாடி காணொளியாக ஏற்றியிருக்கிறார். காணொளியில் பின்னணியாக செயல்படாத காஷ்மீர த்துத்தொலைபேசி நிலையங்களின் "பீப் -பீப் " ஓசை கேட்டுக்கொண்டே இருக்கும்.
tmkrishna -reciting agha shahid ali's poetry என்று google சென்றால் கேட்டு சோகத்தைஅனுபவிக்கலாம்.
இதோ அந்த கவிதை:
காஷ்மீர் என்னுடைய மின்னஞ்சல் பெட்டிக்குள் அடங்கிவிட்டது !
என்வீடு 4"X 6"தான் !
எனக்கு சுத்தம் பிடிக்கும் !
இப்போது நான் அரைஅங்குல இமாலயத்தை என் கையில்பிடித்திருக்கிறேன் !
இது தான் என்வீடு !
என்று சொல்லிக்கொள்ளலாம் !
நான் வீட்டிற்கு போக முடியாது!
நான் திரும்பும் பொது வண்ணங்கள் ஒளிராது !
ஜீலம் நதியின் தண்ணீர் சுத்தமாக இருக்காது !
என் அன்பு மிக அதிகமாக வெளிப்படுத்தப்பட்டுவிட்டது !
என் நினைவுகள் த ன் கூர்மையை இழந்துவிட்டன .!
அதற்குப்பதிலாக
ஓரு புகைப்படத்தின் கழுவப்படாத பிலிம்
போல கருப்பு வெள்ளையாகவும்,
வெள்ளை கருப்பாகவும் ராட்சத்தனமாக தெரிகிறது !!!
நன்றி :svv