Wednesday, January 30, 2013

ஜெய்பூர் இலக்கிய விழாவில்

" ஆஷிஸ் நந்தி "பேசியது என்ன .....?



மே.வங்கத்தை சேர்ந்த கிறிஸ்தவ குடும்பத்தைச் சேந்தவர் ஆஷிஸ் நந்தி! இவருடைய சகோதரர் தான் பிரிதீஷ் நந்தியும், மனிஷ் நந்தியும் ! 76 வயதான ஆஷிஸ் மிகச் சிறந்த எழுத்தாளர் !  மருத்துவ கல்லூரியில் படித்து கொண்டிருந்தவர் அந்த துறை பிடிக்காமல் வெளியேறினார் . நாகபுரியில் உள்ள "இஸ்லாப்கல்லூரியில் "சேர்ந்து பயின்றார் ! பின்னர் அரசியல்" தலைவர்களின் உளவியல் " என்ற தலைப்பில் ஆராய்சி செய்து முனைவர் பட்டம் வாங்கினார்!

"காலனி ஆதிக்கமும் அறிவு ஜீவிகளின் உளவியலும் " என்ற அவருடைய நூல் உலகப்புகழ் பெற்ற ஒன்றாகும்! மேலை நாட்டு பலகலைக் கழகங்கள் அவரைவேண்டி விரும்பி விரிவுரை ஆற்ற அழைக்கின்றன !

ஜெய்பூர் விழாவில்     தனித்தனி தலைப்புகளில்  தனித்தனி  குழுக்கள்   விவாதிக்கும்! பின்னர் அவை மாநாட்டில் வைக்கப்படும்.! "ஊழல்" கள் பற்றி ஒரு குழு விவாதித்தது! அந்த குழுவில் ஆஷிஸ் பங்கு பெற்றார் ! குழு விவாதத்தில் அவர் " சாமர்த்தியமாக ஊழல் செய்பவர்கள் தப்பி விடுகிறார்கள்! குறிப்பாகபதவியில் அனுபவமுள்ள  மேல்  சாதியினர்   தப்பிவிடுகின்றனர் !  பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட சாதியினர் அனுபவமின்மையால் 
மாட்டிக் கொள்கின்றனர்" என்று குறிப்பிட்டார் !

பிற்படுத்தப்பட்ட லாலு பிரசாத்தும், முலாயம் சிங்கும்  மாட்டிக்  கொண்டார்கள் ! தாழ்த்தப்பட்ட மாயாவதியும், ராஜாவும் மாட்டிக்  கொண்டார்கள்  ! மற்ற அரசியல் தலவர்கள் யோக்கிய சிகாமணிகளா ?  என்று கேட்காமல் கேட்டுவிட்டார் ஆஷிஸ்! 

அவர் பேசியது பிடிக்காதவர்கள் குழு விவாதத்தின் போது பேசியதை
வெளியில் கொண்டு வந்து பழிவாங்குகிறார்கள் !

வேடிக்கை என்ன தெரியுமா ?

மாயாவதி அவர கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் !

ராஜஸ்தான் அரசு sc and st சட்டத்தை பாயவிட்டுள்ளது ! 

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கேலாத் தாழ்த்தப்பட்டு  வகுப்பைச் சேந்தவர் ! 












      





1 comments:

அப்பாதுரை said...

மாட்டிக் கொள்வதில் கூட ஜாதிப் பிரச்சினையா? என்ன சொல்ல வருகிறார் நந்தி?
இந்த மாதிரி எழுத்தாளர்கள்/பேச்சாளர்களை முதலில் திருத்த வேண்டும்.