Monday, June 16, 2014

అవన్

(தோழர் சரோஜின் நினைவாக மீள் பதிவு )





HOME
ABOUT
POSTS RSS
CONTACT
LOG IN
Friday, May 07, 2010

A.I.I.E.A Long Live.
திவாலாகிப்போன,திவாலாகிக்கொண்டிருக்கும் அமெரிக்க இன்சூரன்சு கம்பெனிகள் இந்தியாவை


இராயாக்கிக்கொள்ள விரும்பின. அப்போதய அதிபர் கிளிண்டனை அணுகின.

"வாஜ்பாயும், மன்மோகனும் சரிங்கராங்கய்யா!.அங்கவுள்ள தொழிற்சங்கம் எதுக்கிது.அவங்களாலையும்சரி,நம்மளாலையும் சரி ஒண்ணும் செய்ய முடியவில்லை"என்றார் கிளிண்டன்.அகில இந்திய இன்சூரன்சு ஊழியர் சங்கம் தான் அது.இந்திய மத்தியதர மக்களின் துருவ

நட்சத்திரம் தானந்த சங்கம்.அந்த சங்கத்தின் அணுக்கத்தோண்டனாக செயல்படும் வாய்ப்பு எனக்குக்

கிடைத்த வரமாகக்கருதுகிறேன்.

சுனில் மைத்திரா,சரோஜ் சவுத்திரி,என்,எம்.சுந்தரம்,போஸ்,முகுல் முஸ்தவி,பிரத்யோக் நாக், எப்பேரற்பட்ட தலைவர்கள்!....அவர்களோடு பழக,பேச,உண்ண, வாய்ப்பு கிடைப்பது என்பது.லேசான தல்ல. சரோஜ் பல முறை மதுரை வந்திருக்கிறார்.ஒருமுறை அவர் வந்துள்ளபோது அவரைக் கவனித்துக்கொள்ளும்பொறுப்பு சங்கத்தால் எனக்கு அளிக்கப்பட்டது.மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் தான்விடுதி.மதிய உண்விற்காக வெளியில் வந்தோம்.பிச்சைக்காரர்கள் நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.அவர்களிடமிருந்து மீண்டு டவுண் ஹால் ரோடு திரும்பினொம்.ஒரு கிழவி எங்களை விரட்ட்க்கொண்டே வந்தார்.நாங்கள் தாஜ் உணவு விடுதிக்குள் நுழைந்தோம்.உணவு அருந்தி வேளியே வந்தபொதும் அவர் நின்று கொண்டிருந்தார்.சரோ நஜை நெருங்கினார்.எனக்கு கோபம் வந்து விட்டது."ஏ!கிழவி!சனியனே"என்று கையை ஓஙகினேன்.தெருவில் எல்லாரும் திரும்பினார்கள்,சரோஜும் திரும்பினார்.

அமைதியாக ஜிப்பாவிர்க்குள் கையைவிட்டுத்துழாவினார்.ஒரு ரூபாய் நாணயத்தை

எடுத்து கிழவியிடம் கொடுத்தார்.மெதுவாக என் தோள்மீது கைபோட்டு"it is not her mistake,comrade" என்றார்







ஆம்! அவரைப் பிச்சை எடுக்கவைத்த நானும்,நீங்களும்,அவனும், அவர்களும்தான் தவறிழைத்த

ஆக்வர்கள் என்பதை இதைவிட மென்மையாக மேன்மையாக எவரால் சொல்லமுடியும்.............
   
















தோழர் 

0 comments: