Wednesday, October 10, 2018





"Me too" 

and

"திரை உலக பிரபலங்கள் "...!!!




இந்தி தொலைக்காட்ச்சி ஒன்றில் பின்னணி பாடகர் திருமதி சின்மயி அவர்கள் பேட்டி கொடுத்திருந்தார் .தான் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டதாக  குறிப்பிட்டது பற்றி அந்த பேட்டியிருந்தது.

களப்பிரர் காலம்பற்றி ஆராய்ந்து எழுதிய தமிழ் அறிஞர் மு.ராகவஅய்யங்கார் குடும்பத்தை சேர்ந்தவர் சின்மயி. பலசரக்குக் கடையில் பெருச்சாளியை அடித்து தூக்கி எறிவது போல  "அந்த பாப்பாத்தி " சொன்னதை தூக்கி எறிந்துவிடலாம் தான் .ஆனால் சில உண்மைகளை சுடத்தான் செய்கின்றன.

sex என்பது ஒரு taboo என்ற மனநிலையில் உள்ள சமூகத்தில் நம் விட்டு குழந்தைகள் அது பற்றி அறிந்து கொள்ளும் ஒரே வழி இப்படித்தான் என்று இருக்கும் பொது இது சகஜமான ஒன்றாக கருதப்படுகிறது.

தன தங்கையின் பாவாடையை தூக்கி பார்க்காத அண்ணன் ,அண்ணி குளிக்கும்போது எட்டிப்பார்க்காத தம்பி, கூட்டமும் நெ ரிச்சலும் மிகுந்த "பஸ் " சில்  பெண்ணின் மார்பகத்தை இடிக்காத ஆண்மகன் இந்த பூலோகத்தில் இருக்க முடியாது . இடிவாங்கியதை உலகம் முழுக்க சொன்ன பெண்ணும் இங்கு இல்லை. 

ஆனாலும் இவை நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

"Me too "   ஆண்கள் எழததயாரா ? ஒவ்வொருத்தனம் பக்கம் பக்கமாக எழுதவேண்டியதிருக்கும்.

தான் மிகவும் மதிக்கும் குடும்பத்து பெரியவர் நடந்து கொண்டதை பார்த்து நடுங்கி அடங்கிய சிறுமிகள் எத்தனை எத்தனை ?

விழிப்புணர்வு பெரும் சமூகம் தன்னை தகவமைத்துக்கொள்ளும்போது இத்தகைய சர்சசைகள் எழத்தானே செய்யும். 

அமைதியாக இதனை கடந்து  போவது தான் உத்தமம் !

0 comments: