Saturday, August 17, 2019

(நாடக விழாவை முன் நிறுத்தி )



காஸ்யபனின் ,

"வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் "

நாடகம் ...!!!




தமிழக- கேரள எல்லையோரத்தில் உள்ள களியக்காவிளை தான நாடகம் நடக்கும் இடம் .தென்னை மரத்தோட்டங்கள் அதிகம் உள்ள பகுதி.இந்து ,முஸ்லீம்,கிறிஸ்துவ மரமேறிகள் வாழும் அமைதியான இடம் . 

வாரணாசியிலிருந்து திவ்யானநத மடத்திசிசேர்ந்த காவி சட்டைக்காரன் அந்த ஊருக்கு வறுகிறான். அந்த கிராமத்து சிறுவர்களை நல்வழிப்படுத்துகிறான் . அவர்களை தினமும் குளிப்பாட்டி.நல்ல ஆடை களைஉடுத்தி திருநீறு பூசி காலையில் தேவாரம் ,திருவாசகம் என்று கற்றுக்கொடுக்கிறான். கல்வி கற்றுக்கொடுக்கிறான். 

ஊர் பெரியவர்கள் மகிழ்ச்ச்சி அடைக்கிரறார்கள்.அவர்களும் காலை கூட்டங்களில் பங்கு கொள்கிறார்கள் .மூத்தவர் பலவேசம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். அப்பாவியான அவர் அநாதையான  கபூர் என்கிற சிறுவனை வளர்த்தார். இன்று கபூர் பெரியவனாகி மனைவியோடு வாழ்கிறான். 

இஸ்மாயில் காக்கா ஒரு மரமேறி. அந்த கிராமத்தில் உள்ள ஓடைக்கு பெயர் சிக்கந்தர் ஓடை.   அதன் கரையில் ஓலைகுடிசை  போட்டு இஸ்லாமியர்கள் "துவா"நடத்துவார்கள்.

மதுரையிலிருந்து சம்மந்தர் மடத்து சாமியார் வருகிறார்.. அவரும் காவிக்கரனோடு சேர்ந்து பிராத்தனை செய்கிறார்.தேவாரம் திருவாசகம் என்று சொல்லியவர் புதியதாக ஒரு பாட்ட சொல்லிக்கொடுக்கிறர்ர்.

"இந்து என்றே சொல்லிவிடு '
இந்து இன்றே சொல்லிவிடு"
இந்து என்றும் என்றுவிடு " 
என்று பாடுகிறார்கள்.

ஓடைக்கு பெயர் சிக்கந்தர் ஓடை இல்லை எனும் அது கந்தர் ஓடை ஏறும் அதன்கரையில் முருகன் கோவில்கட்டி வாரியார் சுவாமிகளை வைத்து குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்கிறார். பலவேசம் இதில் உற்சாகமாக பங்கேற்கிறார். கபூர் எச்சரிக்கிறான். இஸ்மாயில் காக்க கொதித்து எழுகிறார்.. 

மரமேறிகள் மத்தியில் குரோதம் உருவாகிறது. இந்த சமயத்தல் தான் கபூர் மரத்திலிருந்து கீழே விழுந்து படுத்துவிடுகிறான் .பிழை க்க வழியிலாதவனுக்கு தோட்ட முதலாளியும் நட்ட இது கேட்கிறார்கள்.தோட்டமுதலாளி பாய் மறுக்கிறார். பலவேசம் ஸ்டிரைக் அடிக்க சொல்லுகிறார். இஸ்மாயில் காக்க எதிரக்கிறார். 

"நான் வாங்கிட்தாரெண்டா.விழுந்தவன் முஸ்லீம்.கேக்கபோறவன் முஸ்லீம். தோட்ட முதலாளி முஸ்லீம். கேக்கிற முறைல கேட்ட முதலாளி கொடுப்பர் "என்கிறார்.

"வே !இஸ்மாயில் பாய் ! இந்தாப்பாரும் ! மார்க்கம் மயிறுன்னு எங்கிட்ட வாராதிரும். நன் பிலிப்பு நாட்டாரு,சம்முக அண்ணாசி னு தோட்டமுதலாளிய சங்கத்தத்துல நட்ட ஈடு  கொடுக்கக்கூடாது னு தீர்மானம் போட்டிருக்கோம"ன்ரு மறுத்து விடுகிறார் முதலாளி.  

சோகமாக வந்த இஸ்மாயில் காக்கா மரமெறிகள் ட இத சொல்லுதா ரு..

அப்பம்  கதி?'

ஸ்டிரைக் அடிக்க வேண்டியதுதான்'

ஆனா பலவேசம் சம்மதிக்க மாட்டான்ல"

நீறு ம்தான் அவர் சொன்ன கேக்கமாட்டேறு "

அது தப்பு தாம்ல "

இதைகேட்டுக்கொண்டிருந்த பலவேசம் 

"வே ! இஸ்மாயில் பாய் ! போதும் வே நாம புத்திகெட்டு அலைஞ்ச்சது. கபூருக்கு நல்லது நடக்கணும் இல்லைனா ஒருபாய மரத்துல ஏறப்படாது"


முஷ்டியை உயர்த்துகிறார்.

இஸ்மாயில் பாய் "எவனாவது மீறி ஏறினா .காண்ட .காலை வெட்டுப்புடுவேன் என்று கைகளை மடக்கி முஷ்டியை  உயர்த்துகிறார். 

நாடகம் முடிகிறது.  

இந்தநாடகத்தின் முக்கிய பாத்திரங்கள் இஸ்மாயில் பாயின் 8வயது மகள் பாத்திமா,பலவேசத்தின் 7வயது மகன் பழனி. கள்ளம் கபடமற்ற அந்த குழந்தைகளின் பார்வையில் காஸ்யபன் நாடகத்தை கொண்டு சென்றிருப்பார். 

அக்கா இந்து முஸ்லிம்னா என்னக்கா ?
ஒண்ணுமில்லைல ! இந்து தாடிய எடுத்துட்டு மீசையை வைப்பான். முஸ்லீம் மீசையை எடுத்துப்புட்டு தாடியை வப்பான்.
அம்புட்டுதானா என்று சொல்லிவிழுந்து விழுந்து பழனி சிரிக்கிறான். 
எம்ல சிரிக்கே 
இல்லக்கா ஆறுமாசம் அமைப்பட்டான் வரலைனா 
வரலைனா 
ரெண்டு பேருக்கும் தாடியும் வளந்துடும்,மீசையும் வளந்துடும், யாரு இந்து,யாருமுஸ்லீம்னு தெரியாது.

அரங்கமே கைதட்டி சிரிக்கும் .

ஆம்பளை ய்ங்க அடிசுசு க்கிட்டு சாகும்  பொது கபூரின் மனைவியும், பலவேசத்தின்மனைவியும் அன்பு செலுத்தும் காட்ச்சிகளில் கண்ணீர் சிந்தாதவர்கள் கிடையாது.

இந்தநாடகத்தில இரண்டு பாடல்கள் உண்டு. 

"முக்கா  முழம் நெல்லு பயிறு என்ற பச் சை  மால் அவர்களின் பாடலும், "நாங்க  மனுசங்கடா "என்ற இன்குலாப் பாடலும் சரியாக அமைந்தது. இந்தப்பாலகளுக்காகவே  கூட்டம் கட்டி ஏறும். குறிப்பாக ரத யாத்திரையை சித்ததரிக்கும் மறைமுககாடசியாகும் இது.தமிழகம் முழுவதும் சுற்றிவந்தநாடகம்.இது.


இன்று உள்ள இளைஞ்ர்களுக்கு இப்படி ஒரு நாடகத்தை த.மு.எ ச  கலை ஞர்கள் நடத்தினார்கள் அதுவும் ஐம் \பதுக்கும்மேற்பட்ட ஊர்களில் என்பது       ஆச்சரியமாகவே இருக்கும். 

எல்லாப்புகழும் த மு எ ச வுக்கே !!!











0 comments: