Monday, April 07, 2014


கண்கள் பனிக்க கையெடுத்து கும்பிடுகிறென்  "தோழர்களே  !!!


"முதன் முறையாக என் கட்சி தோழருக்கு நான் வாக்களிக்கப் பொகிறேன் !" என்று புளகாங்கிதமடைகிறார் விருது நகர் தோழர் !


வட சென்னையில் வாசுகி சென்ற பகுதியில் மக்களின் உற்சாகம் மெய் சிலிர்க்க வைக்கிறது !


தலித் மக்கள் கோவில் நுழைவுப் பொராட்டத்தில் முன் நின்ற ஆனந்தனை கையெடுத்து கும்பிடுகின்றனர் தாழ்த்தப்பட்ட மக்கள் !


வயது முதிர்ந்த அம்மையார் அவர் !  மூன்று மாதமாக முதியொர் உதவித்   தொகை வரவில்லை !  

இருந்தாலும் முன் எச்சரிக்கையாக நல்லது போல்லாதது  சிலவுக்காக சிறுக சிறுக சேர்த்து வைத்திருக்கிறார் ! 


தீண்டாமை ஒழிப்பு முன்னணிதலைவர் சாமுவேல் ராஜ் வாக்குக் கெட்டு வருகிறார் ! "என் வாக்கு உனக்குத்தன் ! இந்தா ! செலவுக்கு வச்சுக்கோ ! " என்று அந்த அம்மையர் சாமுவெல் ராஜிடம் கொடுக்கிறார் ! கண்ணிர் மலக ,நா தழுதழுக்க தோழர்கள் அதன பெற்றுக் கொள்கின்றனர்!


புது வெள்ளம் பாய்கிறது !


எத்தனை நாள் ...! எத்தனை நாள் காத்திருந்தாய் ! 


இந்த வேள்விக்காக ! 


எத்தனை பொறுமை உனக்கு !


உனக்கு பிடிக்காதவர்களொடு உறவாட உத்திரவு வந்த பொதும் கலங்காமல் கடமையாற்றினாயே ! 


கண்கள் பனிக்க கையெடுத்து கும்பிடுகிறென் தோழா

0 comments: