Monday, July 13, 2015

அன்புதோழர் வெண்புறா சரவணன் அவர்களுக்கு .....!




"கடல் காவல் படையின் டொர்னியர் விமானம் ஒரு கி.மி ஆழத்தில் சிதறியதை கண்டுபிடித்தவர்கள்

கோகுல்ராஜை கொலை செய்தவனை கண்டு பிடிக்க வீல்லையே" என்றுதன் கோபம் கலந்த ஆதங்கத்தை நிலைத்தகவலாக வெண்புறா அவர்கள் இடுகை இட்டிருந்தார்கள். நாற்பத்தி மூன்றூ ஆண்டுகளுக்கு முன் நடந அந்த அரசியல் சம்பவம் பற்றி நினவு வந்தது ! அதனை தகவலாக எழுது கிறென்:


1972ம் ஆண்டாக இருக்கலாம் ! இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு தி.மு.க வை அசைக்க முடியாது என்று அறிவித்து 170சொச்சம் இடங்களைப் பெற்று ஆட்சியைப் பிடித்து ஓராண்டு ஆகி இருந்தது !


திண்டுக்கல்லில் நாடாளுமனர இடைத்தேர்தல் அறிவித்திருந்தார்கள் ! மார்க்சிஸ்டு கட்சி சார்பில் அருமைத்தோழர் சங்கரய்யா அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்கள் .திமுக பிரிந்து எம்ஜியார் அண்ணா திமு.க ஆரம்பித்திருந்தார் ! அதிமுக சார்பில்தீண்டுக்கல்லில் மாயத்தேவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அதிமுக முதன் முதலாக தேர்தலை சந்திக்கிறது ! எம்ஜியார் அவர்களூக்கு தேர்தலில் ஜெயித்தே ஆக வேண்டியகட்டாயம் ! ஆளும் திமுக வுக்கோ கௌரவப்பிரச்சினை ! அதிமுகவை தோற்கடிப்பதின் மூலம் எம் ஜி ஆரின் அரசியல் வாழ்க்கையை அஸ்தமிக்க வைக்கவேண்டிய கட்டாயம் ! மார்க்சிஸ்கட்சியின் உதவியாய் எம்ஜி ஆர் நாடினார். தோழர் சங்கரய்யாவை  வாபஸ் பெறவைத்து மாயதேவரை ஆதரிப்பதாக மார்க்சிஸ்டு கட்சி அறிவித்தது !


முதல்வர் கருணாநிதி அதிகார பலம்,பணபலம் ஆகியவற்றொடு வன்முறையையும்கையாண்டு வெற்றி பெற முடியுமென்று கருதினார் !


பொதுக் கூட்டங்களில் எம் ஜி ஆர் பெசமுடியாத நிலை தோற்றுவிக்கப்பட்டது ! செந்தோண்டர்கள் முன்னும் பின்னும்வர மார்க்சிஸ்ட் தலைவர் ஏ.பாலசுப்பிரமானியம் எம் ஜி ஆரை கிராமம் கிராமமக அழைத்து சென்று பிரச்சாரம் செய்ய வைத்தார் 

 

இருந்தாலும் பூலாவாரி சுகுமாறன் என்ற அதிமுக தொண்டர் படுகோலை செய்யப்பட்டார் ! எதிர்க்கட்சிகள் கொலை காரனை கைது செய்ய குரலேழுப்பின ! முதல்வர் கருணானிதி அசையவில்லை  !  ஏ.பி அவர்கள் வேண்டு கோள் விடுத்தார் ! முதல்வர் மசியவில்ல ! கெஞ்சினார் ! எதுவும் நடக்க வில்லை !" நான் கொலைகாரனைஅடையாளம் காட்டுகிறேன் ! கைது செய்யுங்கள் என்று அறிவித்தார் "  ஏ.பி அவர்கள் ! கலிஞர் உதாசீனப்படுத்தினார் !


ஏ.பி வெகுண்டு எழுந்தார் ! "நாளை காலைக்குள்  கைது செய்யுங்கள் ! இல்லைஎன்றால் செந்தொண்டர்களோடு கொலைகாரன் வீட்டு வாயிலில் நான்" தர்ணா" இருப்பேன்" என்று அறிவித்தார் !


அரசுபணிந்தது ! 


     

2 comments:

'பரிவை' சே.குமார் said...

கருணாநிதி அன்று முதல் இன்று வரை அப்படியே...
ஏ.பி. சாதிச்சிருக்கார்...

கரந்தை ஜெயக்குமார் said...

அறியாத தகவல் ஐயா
நன்றி