Tuesday, September 22, 2015

மொகலாய பேரரசர்களும் 

சமஸ்கிருதமும் .........!!!





பலவீனமடைந்த் சமடஸ்கிருத மொழி மொகலாய பேரரசர்கள் காலத்தில் தான்  மீண்டும் உயர்நிலைய அடைந்தது .

இதனை நான் சொல்லவில்லை. அமெரிக்காவைச் சார்ந்த பேராசிரியை ஆட்ரே ட்ராஸ்கெ கூருகிறார்.

அவர் எழுதி வரவிருக்கும் புத்தகம் "மொகலாயர்  தர்பாரில் சமஸ்கிருதம்" பற்றி பேட்டி அளிக்கும் போது இவ்வாறு கூறினார் .

பாவம் எழுத்தாளர் குருஸ் சமகிருதம் பற்றி எதொ சொல்லப்போக அவர் வாங்கி கட்டிக்கொண்டது நினைவு தட்டுகிறது .சாதி ,சமய,முற்போக்கு, பிற்போக்கு என்று எந்த விதமான வேறுபாடுமின்றி அவரைத் திட்டி தீர்த்தனர். 

ஆட்ரே அம்மையார் அக்பர் காலத்தில் தான் இது ஆரம்பமாகியது என்கிறார்.அக்பர் தன தர்பாரில் அறிஞர்களை வைத்துக் கொண்டார் . அவர்களில் சமன பௌத்த ,இந்து,மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் இருந்தனர். அவர்களுக்குஅவர் பொட்ட ஒரே நிபந்தனை "கடவுள் ஒருவன்" என் பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். சமணர்களும்.பௌத்தர்களும் கூட இதனை ஏற்று கொண்டனர்.

புத்தர்  தன்னுடைய உபதே.சங்களை சம்ஸ்கிருத மொழியில் எழுதக்கூடதுஎன்று கூறி இருந்தார்.ஆனால் மக்களைடையே செல்வாக்காக இருத்த மொழியில் அவருடைய சீடர்கள் சம்ஸ்கிருதத்தை பயன்படுத்தினர்.

சமணர்களும் தங்கள் நுல்களை சமஸ்கிருத மொழியிலேயே கொண்டுவந்தனர்.

தத்துவார்த்த அறிவியல் கோட்பாடுகளை - மற்ற மொழியிலிருந்து பாரசிக மொழிக்கு மொழிமாற்றம் செய்ய அக்பர் சமண , பௌத்த அறிஞர்களை நாடினார்

அகபர்,ஜஹாங்கீர், ஷாஜஹான் ஆகியோரும் இந்த மரபை தொடர்ந்தனர் ..

வியாபார தலங்களில் சஸ்கிருதம், பாரசீகம், அவதி ,பிரஜ் பாஷா , ஆகியவை மணிப்பிரவாளமாக பயன் படுத்தப்பட்டன.
இதனை உருது மொழி ( உருது என்றால் பஜார் ) என்று அழைத்தார்கள்.


மொகலாயர்களின்  அரசியல் பிடி தளர தளர இது சம்ஸகிருத மயமாககப்பட்டு    அந்த புது வடிவம் இந்தி என்று அழைகலாயிற்று

கிட்டத்தட்ட அவுரங்கசீப்  காலத்தில் சம்ஸ்கிருத ஆதரவு அரசால் விலக்கிக் கொள்ளப்பட்டது .

ஷாஜஹானுக்கு பிறகு  அரசனான "மூரா " சமஸ்கிருத ஆதரவாளனாகவே இருந்தான். அவனை வீழ்த்தி அரசனான அவுரங்க சீப்  மௌல்விகளின் ஆதரவு தேவை என்ற அரசியல் நிர்ப்பந்தத்தின் காரணமாக சம்கிருத ஆதரவை விலக்கிக்கொண்டார்.

( மேலே  கூற ப்பட்டவை  ஆட்ரே அம்மையாரின் பேட்டியில் இருந்து எழுத்தாளப்பட்டவை..மொழியியல் வல்லுனர்கள்   மேலும் ஆராய்ந்து  
மெய்பிக்க வேண்டும் )

1 comments:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

அன்புத் தோழர்க்கு வணக்கம்.
இந்தப் பாருங்கள்.
தங்கள் பதிவு விவரங்களை “வலைப்பதிவர் கையேடு-2015”க்கு தாருங்கள் http://valarumkavithai.blogspot.com/2015/09/blog-post_18.html

http://bloggersmeet2015.blogspot.com/p/blog-page_5.html

நன்றி