Friday, September 01, 2017



திரைப்பட இயக்குனர் ,


"ராம் " சாமியாரின் ,


உபதேசங்கள் ....!!!





" நான் அடிமை .  எப்போது அடிமையானேன் தெரியுமா ? முதலாளித்துவத்தின்  மோசமான வடிவமான  ஜனநாயகத்தை இடது சாரிகள் என்று ஆதரிக்க ஆரம்பித்தார்களோ அன்றிலிருந்து  " என்று திரைப்பட இயக்குனர் "ராம் "சாமியார்  உபதேசித்துள்ளார்.


கிட்டத்தட்ட பத்து நாட்களாக யு டியூப் நிகழ்ச்ச்சியை திருப்பினால் ராம் அவர்களின் பேச்சு தான். அவர் எடுத்து சமீபத்தில் வெளிவந்த "தரமணி "என்ற படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வடநாட்டில் இருக்கும் நான் அந்தப்படத்தை பார்க்கவில்லை>யு  டியூபில் அது பற்றி மிகசிறப்பாகச்சொல்கிறார்கள்.


உண்மையில் அவர்கள் விவரிப்பது போல் இருந்தால் மிகவும் பாராட்டப்பட வேண்டிய படைப்பாகத்தான் இருக்கும்.


ராம் அவர்களின் "தங்க மீன்கள் ", "கற்றது தமிழ் " பார்த்திருக்கிறேன்.மிகவும் வித்தியாசமான படைப்புகள் தான் அவை இரண்டும். தற்போது "தரமணி " பற்றி மிகசிறப்பாக விமர்சிக்கப்படுகிறது> மிகவும் dicriminate பண்ணி பார்க்கும் விமரிசகர்கள் கூட நல்லவிதமாக குறிப்பிடுகிறார்கள்.


ராம் சிறந்த படிப்பாளி. அதனாலேயே சிறந்த படைப்பாளியாகவும்  இருக்கிறார். பொலன்ஸ்கி பற்றி அவருக்கு தெரியும். அந்த நாட்டில் ஒருவர் திரைப்பட இயக்குனராக வேண்டுமானால் குறைந்தது 18 ஆண்டுகள் படிப்பும்பயிற்சியும் வேண்டும். அதன் பிறகு தான் இயக்குனராக முடியும்.


கோலிவுட்டில்   அப்படி இல்லை..


ஊடகங்கள்  ராமின் வெற்றியை தங்களுக்கு காசாக்கப்பார்க்கின்றன.அவரை நேர்காணல் என்ற பெயரில் சலிக்கசெய்கின்றன. பாவம் ! அவரும் பதில் சொல்லி விளக்கம் சொல்லி, அலுத்து விட்டார் இப்பொது  பல்கலை களி ல் மாணவர்களிடையே பேசஆரம்பித்துள்ளார் .மனோன்மணியம் சுந்தரனார் பலகலை  மாணவர்களிடயே    பேசும் பொது தான் இந்தஇடுகையின் முதல் வரியில் சொன்ன  உபதேசத்தை செய்துள்ளார் .


"ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி " என்று ஒரு சொலவடை உண்டு.இடது சரியை யார் வேண்டுமானாலும் ......


கம்யுனிஸம்    செத்து விட்டது  என்று  அந்த ஊசிப்போன  ராசா கத்துவான்.


நீங்களுமா ? ராம் ! வேண்டாமே !!!














0 comments: