Thursday, September 07, 2017







லிங்காயத்துகள் ,


"இந்துக்கள் அல்ல "

கௌரி லங்கேஷ் அறிவித்தார் .





பத்திரிகையாளரும்,சமூக செயல் பாட்டாளருமான கௌரி லங்கேஷ் அடையாளம்  தெரியாதவர்களால் ( ! ) சுட்டு கொல்லப்பட்டார் .

எந்த சமரசமுமில்லாமல் கம்பிரமான வாழ்க்கையை  வாழ்ந்தவர்  கௌரி.


பெருமாள் முருகன் எழுதிய "மாதொரு பாகன்" நாவலை ஆதரித்ததால் கர்நாடக பிராமண சங்கத்தினரால் வசைபாடப்பட்டார். 


எழுத்தாளர் பைரப்பா "பர்வா" என்ற நாவலை எழுகினார்  அந்த நாவல் மாகாபாரதத்தின் மறு  வாசிப்பாகும் . கணவனால் சந்ததி பெற  முடியாத பெண்கள் வேறொரு ஆணோடு கூடி  வாரிசு பெற்றுக்கொள்ளலாம்.இதனை  இந்து சாஸ்திரம் அனுமதிக்கிறது. இதனை  "நியோகி தர்மம் " என்று வர்ணிக்கிறார்கள். தன்னுடைய நாவலில் பைரப்பா  இதனை எழுதியுள்ளார்.


அவரை கண்டிக்காத பிராமணர்களும் இந்துத்வா வாதிகளும் பெருமாள் முருகனை எதிர்ப்பது என் ? என்று கேள்வியாய் எழுப்பினார் . பைரப்பாபிராமணன்.பெருமாள் முருகன் பிராமணன் அல்ல .அப்படித்தானே என்கிறார்.    


லிங்காயத்துகள் இந்து மதத்தை சார்ந்தவர்கள் அல்ல .அவர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பியுள்ளார். 

கர்நாடகமாநிலத்தில் "நக்சலைட்" கள் மறுவாழ்வுக்கான குழு வில் பணியாற்றிவந்தார்.  


சமரசமற்ற அந்த போராளியை  கொன்றுவிட்டார்கள் !


0 comments: