Thursday, September 21, 2017





உலக யுத்தம் வந்தால் ,

அடுத்து கற்காலம் தான் ...!!!






"அடுத்த உலக யுத்தம் என்பது அணுயுத்தமாக தான் இருக்கும்.    அதன் பிறகு கற்காலம் தான் மிஞ்சும்  " என்று  விஞ்ஞனி ஒருவர் கூறினார் .


ராணுவப்பலத்தில் இன்று உலகத்தில் முதல் இடத்தில் இருப்பது அமேரிக்கா . அணு ஆயுதம்,அதனை  செலுத்தும் ஏவுகணைகள் அணுசக்தி நீர்முழ்கி,  என்று  ஏராளமான ஆயுத பலம் கொண்டுள்ளது.அடுத்து இருப்பது ரஷ்யா ! இரண்டாவது இடத்திற்கு போட்டி போடும் நிலையில்   சீன  தேசம்  வளர்ந்துள்ளது.

சீனாவிடமும் அணுகுண்டு, ஏவுகணை என்று உள்ளது. சீனாவை எதிர்த்து இன்று இந்தியா நிற்கிறது .அணு ஆயுதம்,அதனை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இந்தியாவிடம் உள்ளன .இன்று ஒரு ஏவுகணை மூலம் 104  சட்டலைட்களை ஏவும் சக்தி இந்தியாவிற்கு உள்ளது என்பதைக் கண்டு உலகம் வியந்து நிற்கிறது . எந்த நாட்டின் எந்த பகுதியிலும் என்ன நடக்கிறது என்பதை செயற்கை கோல்கள் மூலம்  அறிந்து . கொள்ள  முடியும். இறுதி போரின் பொது புலிகளின் நடமாட்டத்தைஇலங்கை ராணுவத்திற்கு புகைப்படமாக கொடுத்ததே இந்தியாதான் என்று பேச்சு  அடிபட்டது நினைவிருக்கலாம் .

இந்திய சீன  எல்லைத்தகராறு  அடிக்கடி சீறி எழும் பொது  இந்துத்வா காரர்கள் வெறி கொண்டு கத்துவது வழக்கம். 

இப்போது வடமேற்கே லே பகுதியில் இந்திய சீனா ராணுவம் முட்டிக்கொண்டு நிற்கிறது .நேருக்கு நேர் ,(eye to eye ) நிற்கிறது. தவறான சிறு நடவடிக்கையும் படு  பயங்கரமான யுத்தத்தில் கொண்டு நிறுத்தி விடலாம் . துப்பாக்கி.  என்றால் துப்பாக்கி  ! பீரங்கி என்றால் பீரங்கி  ! அணுகுண்டு என்றால் அணுகுண்டு !

இரண்டு ராணுவமும் மாற்று ஆயுதத்தை உபயோகிக்க ஆரம்பித்துள்ளன . இருவருக்கும் அழிவு எப்படி  என்பது தெரிந்தே  உள்ளது

சீன  ராணுவம் இந்திய  வீரர்களை நோக்கி  2" 3" சரளைக்கற்களை வீசுகிறார்கள்.பதிலுக்கு இந்திய வீரர்கள் சீன  வீரர்களை நோக்கி 4" சரளைக்கற்களை வீசுகிறார்கள். 

"காயம்" தான் ஏற்படுகிறது.உயிர் சேதமோ,அழிவோ இல்லை.

"அணுகுண்டு வைத்திருப்பதால் ஒருவன் பலசாலியாக முடியாது. அவன்   வெறும் காகிதப்புலி " என்றார் மாவோ !

சரிதானே !!!