Sunday, March 20, 2016

"6-3-1967அன்று "




1967ம் ஆண்டு.மார்ச்மாதமஆறாம்  தேதியை தமிழக மக்களால் மறக்க முடியாது.
"இந்து" அலுவலக கட்டிடத்திற்கு முன்பு மவுண்ட் சாலையில் மக்கள் ஆயிரக்கணக்கில் பத்தாயிரக்கணக்கில் கூடி இருந்தார்கள். 
தேர்தலில் காங்கிரசை தோற்கடித்து திமுக வெற்றி பெற்ற நேரம். 
முதலமைச்சராக c .n அண்ணாத்துரை அவர்கள் பதவி ஏற்கப்போகிறார்.

"பதவி ஏற்பு விழா கவர்னர் மாளிகையில்   வேண்டாம் .மக்கள் மத்தியில் நடை பெறவேண்டும் " என்று அண்ணாத்துரை அவர்கள் அறிவித்து விட்டார்கள்.

ராஜாஜி ஹாலில் ஏற்பாடுகள் நடந்தன. கவர்னர் உஜ்ஜால் சிங் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழ்நாட்டின் நகரங்கள்,நகராட்சிகள்,சிற்றூர் பேருர், என்று மக்கள் கொண்டாட்டம்.
ரிக்ஷா இழுப்பவன்,அத்தக் கூலி, களைபிடுங்கும் பெண், உழுபவன், கதிர் அறுப்பவன்,அரசு உழியன் ,வங்கி அதிகாரி என்று அத்துணை பெரும் அண்ணாதுரை முதலமைச்சர் பதவி ஏற்றதாக நினக்கவில்லை .

தாங்களே முதலமைச்சராக் ஆன மாதிரி சொல்லி சொல்லி மகிழ்ந்தார்கள்.

மக்களின் முழு ஆதரவையும் பெற்ற தி .மு.க  ஆட்சி அரங்கேறியது .

அத்தகைய ஆதரவை இன்று இழந்து அனாதையாக நிற்கிறதே ஏன் ?

 அண்ணாதுரை அவர்கள்  நோய்வாய்பட்டு 1969ல்  மறைந்தார் 

 கருணாநிதி முதல்வரானார்.

அன்று ஆரம்பித்தது   தமிழகத்தின் வேதனை !

அந்த வேதனையை துடைக்க வந்தவர்கள் தான் 

"மக்கள் நல கூட்டணி "



0 comments: