Saturday, March 12, 2016



"ஜோதிஷ்ன மாதவராஜ் "

கதை- திரைக்கதை எழுதுகிறார்.






சாத்தூரிலிருந்து மாதவராஜ் டெல்லி போவதாக தகவல் வந்தது .ரயிலடியில் சந்திக்கலாம் என்றிருந்தேன். அவருடைய மகள் குழந்தை ஜோதிஷ்ணாவுக்கு dress metrial வாங்கி இருந்தேன். திடீரென்று அவர் பயணம் ரத்தாகி சிறுகதை எழுத்தாளரும்,வங்கி அதிகாரியுமான காமராஜ் வருவதாக தகவல்வந்தது.

ரயிலடியில் (நாகபுரி ) காமராஜை சந்தித்தேன். குத்தாலத்தில் த.மு.எ.ச நடத்திய சிறுகதை முகாமையும் அதில் நான் வகுப்பு எடுத்ததையும் நினவு கூர்ந்தார் கிளம்பும் போது அவருக்குகொஞசம் பழங்களை வாங்கி கொடுத்தேன். dress meterial மாதவராஜ் அவர்களிடம்கொடுத்து விடும்படிகேட்டுக்கொண்டேன்.

வருடங்களோடிவிட்டன. அந்தக்குழந்தை +2 படித்து லயோலா கால்லூரியில் viscom முடித்து விகடன் விச்டாசில்பணியாற்றுகிறார்.

சண் டிவியில் புதிய தொடர் ஆரம்பித்துள்ளார்கள். "Emi தவணைமுறை வாழ்க்கை "என்று பெயர். விகடன் குழுமம் தயாரிப்பு. இனியன் தினேஷ் இயக்குகிறார். முதல் நாள் முதல் episode வித்தியாசமான அனுபவத்தை தந்தது 

IT கம்பெனிகளில் பணியாற்றும் இளைஞர்களின் பாடுகளை சித்தரிப்பதாக இருந்தது. நிரந்தரமற்ற வேலை சூழல் . கைநிறைய சம்பளம். அதேசமயம் குடும்ப சுமை இதில் மெலிதான காதல் - வேலை இழப்பு என்று நிமிர்ந்து நிற்கச் செய்தது நிகழ்வுகள்.

Title song ஐ மிண்டும் போட்டேன். கதை,திரைக்கதை ஜோஷ்ணுவா மா. என்றிருந்தது.மாதவராசுக்கு போன் சய்து உறுதி செய்து கொண்டேன்.

செம்மலர் சிறுகதை போட்டியில் முதல்பரிசு பெற்றவர் மாதவராஜ். அவருடைய மகள் .கேட்கவா வேண்டும். 

அது மட்டுமல்ல . ஜோஷ்னுவா வின் தாத்தா யார் தெரியுமா? 

50லிருந்து 80வரை  தமிழ் நவீன எழுத்துலகி புரட்டிபோட்ட அந்த எழுத்துலக  "ராட்சசன்" ஜெயகாந்தன் அவர்கள் தான். 

ஜெயகாந்தன் அவர்களின்" உன்னைப்போல் ஓருவன் " படத்தை வெளியிட முடியாமல் திரை உலகம் தடுத்துக் கொண்டிருந்த போது மதுரை எல்.ஐ சி உழியர்கள் நகரத்து சென்ட்ரல் திரை  அரங்கில் வெளியிட்டார்கள். அவர்களோடு சேர்ந்து நின்றவன் நான்.

பின்னர் மத்திய அரசு விருது அளித்து அவரை கௌரவித்தது.

" ஜோஷ்னா ! எனக்கு வயதாகி வருகிறது.நீயும் படம் எடுக்க வேண்டும். தத்தா மாதிரி விருது வாங்க வேண்டும்.நான் அதனை கன்டு மகிழ வேண்டும் .
சீக்கிரம் ---சீக்கிரம் !!!

1 comments:

'பரிவை' சே.குமார் said...

ஜோஷ்னாவை வாழ்த்துவோம்.