Saturday, October 29, 2016

"நெருப்புக்கு தெரியுமா "



நேற்று முன் இரவு 8.45 மணிக்கு மதுரையிலிருந்து தொலைபேசி வந்தது.

"ஹலோ ! டாக்டர் செல்வராஜ் பேசறேன்!" பரஸ்ப்பரம் விசாரித்தபிறகு "உங்கள் கதையை படித்தேன்." செம்மலரில் " இப்பதான் வந்தது ,"

"என்கதையா ?"

"ஆமாம் ! "நெருப்புக்கு தெரியுமா " தலைப்பு "

2010 ஆண்டு எழுதியது. நாகபுரியில் நடந்த உண்மை சம்பவம்,இங்குள்ள பத்திரிக்கையில் வந்ததை அப்படியே எழுதி இருந்தேன், கடைசி இரண்டு பத்தி மட்டும் கொஞ்ச்ம கற்பனையோயோடும்முடித்திருந்தேன்..என்னுடைய "பிளாக் " ல் இடுகையாக எழுதி இருந்தேன். பல நண்பர்கள் இதனை பெயர் குறிப்பிட்டு பிரபலமான பத்திரிகைக்கு அனுப்பும்படி கேட்டிருந்தனர் .செம்மலர் ஆசிரியர் குழுவில் இருந்து கொண்டு வேறுபத்திர்கைக்கு அனுப்பாமல் இருப்பதுதான் சரி என்று நினைத்திருந்தால் வேறு பத்திரிகைக்கு இது வரை அனுப்பியதில்லை. ஒய்வு பெற்று விட்டாலும்  என்னவோ மனம் ஒப்பவில்லை.பேசாமல் பெட்டிக்குள்போட்டு விட்டேன் .சமீபத்தில் எதோ தேடும் பொது  கிடைத்தது. செம்மலருக்கு அனுப்பலாம் என்று தோன்றியது .அனுப்பினேன். ஆசிரியர் sap அவர்கள் நவம்பர் இதழ் முடிந்து விட்டது. டிசம்பரில் பார்க்கலாம் என்று கூறினார்.

ஒருவாரம் கழித்து தோழரசோழ  நாகராஜன் நவம்பர் இதழில் வருவதாகவும் என்  முகவரியை தரும் படியும் கூறினார் .

செல்வராஜ் பாராட்டியது மனதுக்கு இதமாக இருந்தது.

மதுரை பசசரிக்கார சந்தில் த.மு,  எ. ச 80 களில் கவி அரங்கம் நடத்தியது. குண்டாக ,குழந்தை  முகத்தோடு அந்த சிறுவன் கவிதை வாசித்த்தான். 

அவர்தான் டாக்டர் செல்வராஜாக  மதுரையில் மிளிர்கிறார். அவருடைய காதல் திருமணம் அண்ணா நகரில் நடந்தது .இன்று அவர் மகள் isro வில் ஆராய்சசி  மாணவியாக இருக்கிறார். விரைவில் லண்டன் சென்று முனைவர் பட்டம் பெற திட்டமிட்டு இருக்கிறார்.

காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது . 

செம்மலர் தபாலில் வரும் . கிட்டத்தட்ட 20 நாளாவது  ஆகும்.

முடிந்தால் நண்பர்கள் ஒரு பிரதியை சென்னையிலிருந்து அனுப்பினால் மகிழ்வேன் .

(kashyapan ,201,Nirman Envclave , 86-A ,Gajanan Nagar ,Nagpur 440015.)









 

  







0 comments: