Friday, October 07, 2016








"சொல்லுங்கண்ணே 

சொல்லுங்க ".......!!!




அந்த பையன் மதுரை மாவட்டம்  கமபம்  நகரை சேர்ந்தவன் .பள்ளிப்பருவ காலத்திலேயே மாணவர் இயக்கம் னு அலைந்தவன். படிப்புமுடிந்ததம் ,கடசி கம்பு னு போக ஆரம்பமானான் .

நல்ல வசதியான குடும்பம். டீ எஸ்டேட் உண்டுதோட்டமதுரவு னு ஏகப்பட்ட வசதி.வீட்ல கட்டுப்பாடு அதிகமாசுசு .பையன் திமிறினான். வீடு கேக்கல .ஒருநா பையன் கம்பியை நீட்டிட்டான். தேட  ஆரம்பிசாங்க . 

இரெண்டாம்  உலகயுத்தம் நடந்து கிட்டு  இருக்கிற நேரம் . royal air force க்கு பிரிட்டிஷ் காரன் ஆள் செத்துக்கிட்டு இருந்தான். பங்களூருவுல இருந்தது முகாம்.பையன் அங்க போய் சேந்துட்டான்.

அப்பம் எல்லாம் ஒருமாதம் சொல்லி கொடுப்பாங்க .மாசக் கடைசில பரிதிசை வைப்பாங்க.பாசாகிட்ட இன்னு ஆறுமாத "கவாத்து "சொல்லி கொடுத்து "War " க்கு அனுப்புவாங்க . பரிட்சையில  பெயில் ஆயிட்டா அடுத்தமாதம் எழுதி பாஸாகலாம். பிரிட்டிஷ் காரனுக்கு ஆள் வேணுமில்லா !

நம்ம பையனும் பரிசசை  எழுதினான்  . பெயிலாகிட்டான்.திருப்பியும் எழுதினான திரும்பவும் பெயில் . ஆறுமாதமா பெயிலாகிட்டு இருக்கான்.பிரிட்டிஷ் அதிகாரி யோசிசான் . விசாரிக்கும் பொது  இவன் வேலை தெரிஞ்துசு . royal air force க்கு உள்ள கடசி கிளையை உருவாக்கிட்டு இருக்கான் னு .

ஒரே அமுக்கா அமுக்கிட்டான் .' "எப்பா ! நான் யுத்தம் பண்ண வரல ! கடசிய வளக்க வந்தேன்கான் " பையன் . வீட்டுக்கு தெரிஞ்சு எப்படியோ வெளில  வந்தான்.

மார்க்சிஸ்க்காட்ச்சியின்,செயற்குழு  உறுப்பினரும் , "தீக்கதிர் " தலைமை நிர்வாகியும், நாங்கள் "அத்தா " என்று அழைத்து காலடியில் அமர்ந்து பாடம் கற்ற அப்துல் வஹாப் அவர்கள் தான் அந்த பையன் .

95 வயதான "அத்தா' கம்பம் நகரில் ஒய்வு எடுத்துக்கொண்டு இருக்கிறார். முப்பது வருடத்திற்கு முன்னாள் அவருடைய நேர்முக பேசசை வண்ணக்கதிரில் எழுதி இருந்தேன் . இப்ப எதுக்கு திருப்பி எழுதி வக்கிய ? கேக்கலாம்.  

தூத்துக்குடில புத்தகம் வாங்கப்போன இடத்துல "ராணுவ அதிகாரி ச.தமிழ் செல்வன் "னு நாறும்பூநாதன் எழுதி இருந்தார்  ல. தமிழ் செல்வன் ராணுவத்துல இருந்தாரு உண்மை.

டார்ஜிலிங் ல இருந்தாரு. சிக்கிம்ல இருந்தாரு இந்திய சின எல்லைல இருந்தாரு.பருப்பாரில  இருந்தாரு. நக்சிலபாரில இருந்தாரு .

அங்கெல்லாம் இருந்த பொது பெரிய தலவர்கள்  கூட பழகி  இருக்காரு. அவர்பெயர் ....ஆத்தாடி நான் சொல்ல மாட்டேன் ....அதெல்லாத்தையும் எழுத  சொல்லுங்க னு பின்னுட்டம்  போட்டிருந்தேன் மணியும் நாதனும்   அதுக்கு "like "  போட்டிருந்தாங்க .!

 உங்க "like " யாருக்கு வேணும் .!

எழுத சொல்லுங்க அண்ணே !

சொல்லுங்க !




 

0 comments: