Monday, January 02, 2017

















"துரோணரின்

மரணம் .....!!! "

மத்திய இந்தியாவின் மிகசிறந்த ஓவியர் ,சிற்பிகள்ஆகியவர்களில் ஒருவர் அவர்.எனக்கு பரிசையா மாணவரும் கூட .அவர் தன்னுடைய படைப்புகளை கண்காட்ச்சியாகவைத்தார்.

"குண்டலினி "என்ற தலைப்பில் சில ஓவியங்களை வைத்திருந்தார். மகாபாரதத்தில் படைக்கப்பட்டுள்ள மாவீரர்கள் பற்றிய ஓவியங்கள்.

அவர்களுடைய வீர தீரத்தை பற்றி சொல்லாமல் அ வர்களின் மரணத்தைப்பற்றிய புதிய புரிதல் சொல்லும் ஓவியங்கள்.

குருக்ஷேத்திர போரில் துரோணர் இறந்ததாக நாம் நினைக்கிறோம்.

ஏகைலைவனின் கட்டை விரலை காணிக்கையாக என்று கேட்டாரோ அன்றே துரோணர் இறந்துவிட்டார் என்பதை அவருடைய ஓவியம் சித்தரிக்கிறது .

மாவீரன் பீமன்.அவன் மனைவி திரௌபதி. அவள் ஓராடை தன்னில் இருக்கிறாள்.அவளை சபைக்கு இழுத்து வந்து பீஷ்மரும், துரோணரும் , ஏன் இந்த உலகமே பார்க்க அவள் ஆடையை களைகிறான் துசசாதனன் .நெட்டை மரமாய் நின்று புலம்பும் அந்தக்கணத்திலேயே பீமன் இறந்துவிட்டான் என்று ஒரு ஓவியம் சித்தரிக்கிறது. 

அவர் குழைந்தை களுக்கான ஓவியரும் கூடதான் .

ஒரு சிறுவனை அழைத்து உன் தாயாரின் படத்தை வரை என்கிறார் .பையன் . ஒரு பெண்ணின் படத்தை வரைந்து முகத்தில் இரண்டு காது கள், தலையில் இர ண்டு காதுகள் , காலில் காதுகள் ,முழங்கைகளில் இரண்டு காதுகள் வரைந்து இருந்தான்.ஏன் என்று கேட்டதற்கு "என் அம்மா ! நான் பள்ளியில் பேசுவதையும் கேட்கிறாள் .விளையாடும்போது பேசுவதையும் கேட்கிறாள். வீட்டில் பேசுவதையும் கேட்கிறாள் .எத்தனை காது என் அம்மாவுக்கு ? "என்று வாதிடுகிறான் .

மற்றோரு பையன் ராவணனின் படத்தை வரைந்தான். படுக்கை வசத்தில் தலைகளை வரையாமல் ஒரு தலயின் மேல் ஒன்றாக பத்து தலையை வரைந்தான் . "தாத்தா ! ராவணன் திரும்பி பாக்க இது சவுகரியமா இருக்கும் . படுக்கை வசத்துல இருந்தா திரும்ப முடியாதுல்ல ?"அவனுடைய logic அவனுக்கு ."

வெறும் கோடுகளும் வண்ணங்களும் மட்டுமல்ல ஓவியம் என்பது புரிந்தது !!!



0 comments: