Wednesday, January 11, 2017







தோழர் சின்னையா காசி அவர்களின் 

கேள்வியை முன்வைத்து ......!!!


மூத்த தோழர் சின்னையா காசி அவர்கள் "உயி ர் என்பது என்ன ? "என்ற கேள்வியை தன முகநூலில் எழுப்பி உள்ளார்.  


இந்த கேள்விக்கு அறிவியல் ,மற்றும் ஆன்மிகவாதிகள் பதில்கள் உண்டு.

இந்த நிலைத்தகவலை நீங்கள் உங்கள் வீட்டில் நாற்காலியில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கலாம். உங்கள் நாற்காலியின் கைகள் மேல் உங்கள் கைகளைவைத்துக்கொண்டு படிக்கலாம் .நாற்காலிக்கு "கை " உண்டு. உங்களுக்கும் "கை "உண்டு .இந்த இரண்டு கைகளுக்கும் வித்தியாசம் உண்டா ?உண்டு . 

நாற்காலியின் "கை " மரம் என்ற meterial  ஆல்  ஆனது . உங்கள் "கை"யும் சில பொருட்களால் ஆனது . வேற்றுமை என்ன வென்றால் உங்கள் "கை"   க்கு உயிர்  உண்டு .நாற்காலியின் கைக்கு உயிர் இல்லை . 


உங்கள் கைக்கு விசேஷமாக  இருக்கிறதோ அதுகான் உயிர். அப்படியானால் உயிர் எங்கே எப்படி எதில் இருக்கிறது.?   அணுக்களால் ஆனதே. செல்களால் ஆனதே. பொருள்களால் ஆனதே. எல்லாம்.

எந்த ஒரு பொருள் தனக்கு வேண்டியதை தனக்கு வெளியிலிருந்து    பெற்றுக்கொள்கிறதோ ,எந்த ஒரு பொருள் தனக்கு வேண்டாததை தன்னிடமிருந்து வெளியேற்றுகிறதோ அது  உயிருள்ளதாகும் .

இதனை katabolism ,metabolism என்று அறிவியல் அழைக்கிறது. இன்றைய நிலையில் இது பிரம்மாண்டமாக வளர்ந்து, ஒரு பரிசோதனை குழாயில் சில ப்ரோட்டின்கள் மாற்று முள்ளவைகளின் சேர்க்கை மூலம் உயிருள்ள தை உருவாக்கும்நிலைக்கு அறிவியல் வளர்ந்துள்ளது. 

நமக்கு வேண்டிய பிராணவாயுவை வெளியிலிருந்து எடுத்துக் கொள்கிறோம் . நமக்கு வேண்டாத கரியமிலவாயுவை வெளியேற்றுகிறோம். நீரைகுடிக்கிறோம்.சிறுநீரைவெளியேற்றகிறோம்.உண்கிறோம் .கழிவை வெளியேற்றுகிறோம் 

இதில் எது தடைபட்டாலும் உயிரிழக்கிறோம். உயிரியல் துறை இன்று மிகப்பெரும் வளர்சசியை அடைந்துள்ளது.

இந்திய தத்துவ ஞானத்தில்  கடவுளை ஏற்றுக்கொண்டவர்கள் உண்டு. கடவுளை ஏற்றுக்கொள்ளாதவர்களும் உண்டு . கபிலர் போன்றவர்கள் கடவுளை ஏற்காமல் வேதத்தை ஏற்றுக்கொண்டவர்கள். வேதம் என்றால் அவர்களை    பொறுத்தவரை முன்னோர்கள் சொன்ன அறிவு பூர்வமான கருத்துக்கள்.

உயிர் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்கள். 


பிராணோவா அன்னம் ! 


உணவு தான் உயிர்.

தத் விரதம் !


உலகத்தில் எதைக்கொடுத்தாலும் இன்னும் வேண்டும் என்பது மனித இயல்பு. பொன்,பொருள் ,பெண் , நிலம் என்று எதுவானாலும் இன்னுமின்னுமென்பது இயல்பு.உணவை மட்டும்தான் மனிதன் போதும்போதும் என்பான் . ஏனென்றால் மிகுதி அவனையே தின்றுவிடும் . உணவு ஒரு அளவுக்கு உட்பட்டது

அன்னம் ந நிந்தையேத்.!


அளவுக்கு உட்பட்டது என்பதால்
  அதனை   வேறுக்காதே . உணவு இல்லை என்றால் நீ இல்லை .

அன்னமேவ பிராணன் !


உணவுதான் உயிர் !


பண்டைய நாத்திகம் அறிவியலை தன போக்கில் கொண்டுதான் இருந்திருக்கிறது 


 

0 comments: