Friday, January 13, 2017







Irony    

and 

History 




அண்ணா அவர்கள் மறைந்ததும் கருணாநிதி முதல்வரானார்.  இந்திராகாந்தி அம்மையாரோடு கூட்டணி வைத்துக் கொண்டு 1971ம் ஆண்டு தேர்தலை சந்தித்தார்.

முதன் முதலாக தஞ்சை மாவட்டத்தில் "டிராக்டர் " புழங்க  ஆரம்பித்தன.நிதி அமைசர் நெடுஞ் செழியனுக்கு டாகடர் பட்டம் தஞ்சையில்  கொடுக்கப்பட்டது

லட்சக்கணக்கான விவசாய கூலிகளின் வாழ்க்கை பாதிக்கப்படும். மற்றும் விவசாயிகளின் உயிர்த்துணையான உழவு தொழில்பாதிக்கப்படும் என்று அதனை எதிர்த்தோம்.

மதுரை மாசி விதிகளில் ஊர்வலம் போனோம். 

டாக்டர் வந்தார் ! டாகடர் வந்தார் !
           அண்ணாமலைக்கு -அங்க 
படிச்ச  பயலை காணவில்லை 
          அடுத்த நாளைக்கு !

டாக்டர் வந்தார் ! டாகடர் வந்தார் !
          தஞ்சாவூருக்கு !
டிராக்டர்  வந்தது டிராக்டர் வந்தது 
         அடுத்த நாளைக்கு !

என்று   தணிகை யின் கவிதை வரிகளை கோஷமாக போட்டுக்கொண்டு  போனோம் .

"டிராக்டர்  " தீனி கேட்காது.உழவுக்கு அதிக நேரமாகாது. கூடுதல் நிலத்தில்  சாகுபடி செய்யலாம்  என்று காங்கிரசும் திமுகவும் பிரச்சாரம் செய்தனர் . பெரும்  நிலச்சுவான்தாரரான மூப்பனார் "ஒத்து " ஊதினார்.  

இன்று வாசனும் ,ஸ்டாலினும்  பாரம்பரியமான ஜல்லிக்கட்டை ஆதரித்து போராடுகிறார்கள்.

Irony thy name is History

 

















0 comments: