Thursday, April 13, 2017









காக்கி சட்டை போடாத 


பாண்டியராஜன்.....!!!





"தமிழக கவர்னரை மும்பையில் பார்த்தோம். ஆட்சியை கலைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம் " என்று  துறை முருகன் கூறியதாக செய்தி வந்துள்ளது .


122 பேர் ஆதரவில் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. "சரிதான் அண்ணே!"  ஆறுபேர் ஓடினாலும் -" ஆறு என்ன ? பதினாறு பேருக்கு 5கோடி விதம் ரெடியா இருக்கு "  என்றும் செய்திகள் வருகின்றன.


பிரசினை அதுவல்ல . "யார் முதலவர் ? யார் துணை ?"  என்பதில்  தான் சிக்கல்.  எதற்கும் ரெடி என்கிறாராம் எடப்படி. 


பணப்பட்டுவாடா  நடந்தது உண்மை. செய்தவர்களை கைது செய்யவேண்டும் . அந்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்கிறார் எதிர்க்கட்சி  தலைவர். 


அவருடைய கட்ச்சியும் கொடுத்ததாக செய்திகள் உண்டு. அரவக்குரிசசி நினைவுக்கு வருகிறது.


சிவகங்கை நினைவு தட்டுகிறது . ராஜ கண்ணப்பன் வெற்றி என்று அறிவித்தபின், சிதம்பரம் வெற்றிபெறுகிறார்.


அடேயப்பா ! பழ .கருப்பையா    அப்பம் குதிச்ச  குதி ! தொலைக்காடசி  பார்த்தவர்களுக்கு தெரியும் . 


தேர்தல் கமிஷன் மேலையும் கீழையும்பொத்திக்கிட்டு நின்னது.             


கருப்பையா ஒரு ரவுண்டு போயிட்டு இப்பம்  திருப்பி திமுகவுக்கு வந்துள்ளார்.                                 


இந்த கொள்ளைல சோழவந்தான் சுப்பிரமணி  தினகரனை கவர்னர் முதல்வரா நியமனம் செய்யணும்காரு.  


ஒரு வேளை மடத்து உத்திராவோ என்னவோ ?


பணப்பட்டுவாடா  செய்த வேட்பாளர்கள் மூன்று(?) பேரையும் தகுதி நீக்கம் செய்ய வென்டும் . 


தேர்தல்கமிஷன் என்பது காக்கி சட்டை போடாத பாண்டியராஜன்.


ஒரு ம --ம் நடக்கப் போறதில்லை .

0 comments: