Monday, May 29, 2017





ராணுவமும் ,


காஷ்மீர் மக்களும் ... !!!




இந்திய ராணுவ தளபதி ராவத் அவர்கள் பேசி இருக்கிறார் ." என்னுடைய வீரர்கள் மீது மக்கள் கல்லை எறிகிறார்கள்.பெட்ரோல் குண்டுகளை வீசுகிறார்கள் ! நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று வீரர்கள்  என்னை கேட்கும் பொது சாவுங்கள் !உங்களுக்காக மூவர்ணக்கொடிபோர்த்திய சவப்பெட்டியை கொண்டுவருகிறேன்" என்று என்னால்கூறமுடியாது . 

தளபதி பேசியது விவாதத்தை கிளப்பி  உள்ளது. தொலைக்காட்ச்சியில் நடந்த ஒரு விவாதத்தில், மார்க்சிஸ்ட் கடசியை  சேர்ந்த கனகராஜ் அவர்களும், பத்ரி சேஷாத்ரி அவர்களும் இதனை விவாதித்தனர்.

ப.சிதம்பரம்  ஒருமுறை ராணுவத்தை அனுப்புவோம் என்று கூறிய பொது ,ராணுவ தளபதி " நாங்கள் எல்லை யை பாத்து காக்க இருக்கிறோம். எதிரி நாட்டிலிருந்த பாதுகாக்க இருக்கிறோம். அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இடையே உள்ள தாவாவை தீர்க்க இல்லை " என்று  கூ றியதைக்கானகராஜ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.


"ராணுவ தளபதி காஷ்மீரில் நம் நாட்டு மக்களை தான் சந்திக்கிறார்எதிரிகளை அல்ல  ,காவல்துறை,துணை ராணுவம் என்று இருக்கும் பொது அரசு ராணுவத்தை அனுப்புவது சரியல்ல " என்று பத்ரி சேஷாத்திரி கூறினார்.


"தளபதி ராவத்  அவரை விட மூத்தவர்களை மீறி   இந்த பதவியை அடைந்துள்ளார்.இதற்கு முன்பும் மூ த்த அதிகாரிகளை தவிர்த்து இளையவர்களை நியமித்தது உண்டு . என்ன காரணத்தினால் ராவத் நியமிக்கப்பட்டார் ? அவர் தன்னை நியமித்ததை நியாயப்படுத்தும் வகையில் செயல்படுகிறாரோ " என்று கனகராஜ் குறிப்பிட்டார்.

மூன்று ஆண்டுகள்  ஆண்ட பா.ஜெ.க வின் சாதனை என்று சொல்ல ஏதும் இல்லாத போது  மாட்டுக்கறி , காஷ்மீர் என்று மக்கள் கவனத்தை திசை திருப்புகிறார்கள் .


0 comments: