Monday, May 01, 2017








நீதி அரசர் கர்ணனும் ,


ஆஷிஷ் நந்தியும் .....!!!




 2013 ஆண்டு என்று நினைவு . ஜெய்ப்பூரில் இலக்கிய விழா நடந்தது.அதில் இந்தியாவின் பிரபலமான எழுத்தாளர் ஆஷிஷ் நந்தி கலந்து கொண்டார்  . பிரித்திஷ் நந்தி ,மனிஷ் நந்தி  ஆகியோரின் முத்த சகோதரர் அவர் மே .வங்கத்தை சேர்ந்த கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவர். 


"அறிவு ஜீவிகளும் ஊழலும்" என்ற தலைப்பில் அவர் பேசினார்." ஊழல் செய்யாத அரசியல் தலைவர்கள் கிடையாது. மேல்சாதி காரர்கள் தங்களின் அனுபவத்தால் ஊழலில் மாட்டிக்கொள்ளாமல் செய்து விடுகிறார்கள். பாவம்-பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட வர்கள் அனுபவமின்மையால் செய்யத்தெரியாமல்செய்து மாட்டிக்கொண்டு விடுகிறார்கள் " என்று பேசினார்.


அப்போது தான் லாலு,முலாயம் சிங் ,மாயாவதி ,என்று ஊழல் தண்டோரா போடப்பட்டு வந்தது.


அஷிஸ் நந்தி மீது எல்லாரும் பாய்ந்தார்கள்.. "இதிலுமா இட ஒதுக்கீடு "என்று ஏகாடி யம் பேசினார்கள்.


அது பெரியவிஷயமில்லை.மாயாவதி ஆஷிஷ் மீது "தீண்டாமை சட்டத்தை "பாயவிட்டார் ராஜஸ்தான் மாநில முதல்வர் கெலாட்  பாய்ந்தார். இருவருமே தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள்.


நீதிஅரசர் கர்ணன் அவர்களை நான் ஆதரிக்க வில்லை. நடந்த விஷயங்கள் பற்றி முழுவதும் தெரியாது. ஆனால் அவரை ridicule பண்ணும் அளவுக்கு அறிவார்ந்த நீதி அரசர்கள் போக வேண்டுமா ?


"அடுத்த மாதம் அவர் ஒய்வு பெறுகிறார். விட்டு விடுங்கள் .ஒன்றும் குடிமுழுகி விடாது  " என்று முத்த வழக்கறிஞர் வேணுகோபால் ஆலோசனை கூறியுள்ளார்.


பள்ளிக்கு போய் படிக்கக்கூடமுடியாத சமூகம். படித்து,பாஸ் பண்ணி, வக்கீலாக பிராக்டிஸ் பண்ணி நீதிபதி ஆன  ஒருவர். என்னனென்ன கஷ்டங்கள்,அவமானங்கள் பட்டாரோ . 


ஆனாலும் இவ்வளவு வன்மம் நீதித்துறைக்கு கூடாது.!!!


It is persecution !!! 


0 comments: