Monday, April 30, 2018

அரசியல் தலைமைக்குழுவும் ,

தமிழக அரசு ஊழியர்களும் ...!!!



மார்க்சிஸ்ட் கடசியின் மாநாடு ஹைதிராபாத்தில் நடந்து வெற்றிகரமாக முடிந்தது. மாநாடு பற்றிய விமரிசனங்கள் வந்து கொண்டு இருக்கின்றன..

எள்ளை காயப்போடும் பொது எலிப்புழுக்கையும் குப்பையோடு சேர்ந்து காயத்தானே செய்யும். ?   விமரிசனங்கள் அப்படித்தான் இருக்கின்றன !

அரசியல் தலைமைக்குழுவில் பிராமணர்கள் அதிகம். ஏன் தலித்துகள் ஒருவர் கூட ட இல்லையே ? என்று திரவிட  குஞ்சுகள் ஒப்பாரி வைக்கின்றனர்.!

சாதிவாரியாக பிரித்து இதற்கு பதிலளிக்க வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன்.

எனக்கு வெகு காலமாக ஒரு கேள்வி நி \ரடிக்கொண்டே இருக்கிறது. தொலைபேசி துறையை எடுத்துக்கொண்டால்  அதில் சேரும் தலித் இளைஞனுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு பதவி உயர்வு உண்டு.அநேகமாக அவர் ஒய்வு பெரும் பொது senior supdt ஆக ஒய்வு பெரும் வாய்ப்பு அதிகம். அதேபோலத்தான்,தபால் தந்தி ,ரயில்வே துறை ஆகியவற்றிலும்.

பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி..வாங்கி ஆகியவற்றிலும் சங்கங்கள் போராடி பதவி  உயர்விலும் இட ஒதுக்கீட்டினை பெற்றுத்தந்தன போராடும் பொது இந்த சங்கங்களை கம்யூனிஸ்டுகள் என்று வசைமாரி பொழிவார்கள். இருக்கட்டும். 

கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஆட்சி தானே நடந்தது ? தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட் ஒதுக்கீடு இல்லையே ஏன் ?சோள்ள முத்து தாசில்தாராக கூடாதா? மாரிமுத்து விற்பனை வரி அதிகாரியாகக்கூடாதா ? சங்கர கம்பன்  காவல் துறையில் பகுதி தலைவராக கூடாதா ?

கூடாது ! முதலியார் தாசில்தார் விட்டு வாசலில் நிற்கலாமா? கணபதியா பிள்ளை விற்பனை கணக்கை காட்ட மாரிமுத்துவை  நாடலாமா? வீரபத்திர--- சங்கரகமபன் விட்டு வாசலை மிதிக்கலாமா?

இது பற்றி கவலைப்பட யாருமே இல்லையே ஏன் ? 

வீரமணியின்தி.க வும்,கலைஞரின் திமுகவும் கவலைப்பட வில்லையே ஏன் ?

தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் !



0 comments: