Tuesday, April 17, 2018




"மார்க்சிஸ்ட் கடசியின் 

அகிலஇந்திய மாநாடு " 



(ஆயுதமேந்தி நிஜாமை எதிர்த்து போராடி நிலத்தை விவசாயிகளுக்கு  கொடுத்தார். விரட்டியடிக்கப்பட்ட நிஜாமும் அவனுடைய ஜாகீர்தார்களும் ஹைதிராபாத்தில் பதுங்க தெலுங்கானாவில் மூன்று ஆண்டுகள் கம்யூனிஸ்ட் கடசி ஆட்சி நடத்தியது . குதிரையின் கடிவாள கயிறை வாயில் கவ்விக்கொண்டு இரண்டு கைகளாலும் சௌதி அரேபிய நிஜாம் ஆதரவு கூலி படையை சுட்டு வீழ்த்திக்கொண்டே சென்ற அந்த வீராங்கனை சுயராஜ்யம் கொடியேற்ற மாநாடு இன்று ஹைதிராபாத் நகரத்தில் துவங்குகிறது  . மாகன் லால் சதுர்வேதி அவர்கள் எழுதிய கவிதையை இங்கே தருகிறேன் )


தோட்டக்காரா !   தோட்டக்காரா !!

என்னை பறித்து மாலை தொடுக்கிறாயா ?

அந்த சிவன் கழுத்தில் போடப்போகிறாயா ?

அதுதான் எனக்கு பெருமை என்று நினைக்கிறாயோ ?

அதோ அங்கே 

முதிர்ந்த வயதிலும் 

கொடியேற்ற 

வீரநடை போட்டு வருகிறாள் !

அவள் காலடியில் போடு !

சரளைக்கற்கள் அவள் 

காலை குத்தும் !

பூக்களின் மெத்தையாகி

தடுக்கிறேன் !

தோட்டக்காரா  ! தோட்டக்காரா !!

அதுதான் எனக்கு பெருமை !!

அதுமட்டுமே !!!


0 comments: