Sunday, February 03, 2019




மக்கள் துயரம் தீர














"சத்ரபதி சிவாஜியை 

வாளோடு அனுப்பு "



பவானி மாதாவுக்கு  வேண்டுகோள்.!




மீரா நிருத்ய நிகேதன் என்ற அமைப்பு பாரத நாட்டியம் ,கதக் ஆகிய கலைகளை நாகபுரியில்  கற்றுத்தருகிறது. அந்த அமைப்பின் 45 வது ஆண்டுவிழா 3-2-19 அன்று நடந்தது .பெண்குழந்தைகள் இந்த விழாவில் நாட்டிய நாடகங்களை நடத்தினர்.  

இதில் தான் சிவாஜி பற்றிய நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. பவானி மாதா கோவிலில் மக்கள் பிரார்த்திக்கிறார்கள். 

"நாங்கள் படும் துயரை தீர்க்க வேண்டும் தாயே ! மக்களுக்கு பாதுகாப்பு இல்லை ! பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை ! எங்களைக்காக்க சத்ரபதி சிவாஜி மகாராஜை அனுப்பி வை அம்மா ! அவரிடம் மறக்காமல் அந்த வாளையும் கொடுத்தனுப்பு !" 

மக்கள் வேண்டுவதாக ஒரு காட்சி !

மீரா நிருத்ய நிகேதன் என்ற அமைப்பினை நடத்துபவர் தமிழ்நாட்டை சேர்ந்த மீரா  சந்திரசேகரன்.

மீராவின் தாய் மாமன் தான்  எழுத்தாளர் காஸ்யபன் !!!.


0 comments: