Thursday, February 07, 2019




"திரைப்பட விமரிசனமல்ல "










"பேரன்பு " திரைப்படமும் ,



ஆசீர்வதிக்கப்பட்டவர்களும்...!!!





என் சகோதரிக்கு நான்கு . ஆண் குழந்தைகள். நான்கு பெண் கு ழந் தைகள் . கடைக்குட்டி கொள்ளை  அழகான பெண்குழநதை.. அந்த குடுமபத்தின் அன்பும்,பாசமும்,நேசமும், கருணையும் ,கவனிப்பும் அவ தான்.அவளும் குறும்புக்காரி. 

அந்த குழந்தை "டாடா" காட்டாமல் யாரும் வெளியே செல்லமாட்டாட்கள்.அப்படி ஒரு sentiment .  முகத்தை உர்  என்று வைத்து க்கொண்  டு டாடா காட்டாமல்  இருப்பாள். பள்ளிக்கு,கல்லூரிக்கு, அலுவலகத்திற்கு         நேரமாகிவிடும். அவளுடைய அண்ணண்கள்  அக்காமார் படும்பாடு சொல்லி முடியாதுபின்னர் வேண்டாவெறுப்பாக டாடா காட்டுவாள்.

அவள் இன்று இருந்தால் 60 வயது ஆகி இருக்கும் . தன 18 வது வயதில்இறந்து விட்டாள் .

என் சகோதரியின் குடும்பம் இடி விழுந்தது போல் ஆகிவிட்டது. ஆனால் அவர்கள் வசித்து வந்த தெருமனிதர்கள் "சீ  த்தபர்டி "  என்ற பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

காரணம் "லதா "என்ற பெயரிட்ட அந்த குழந்தை "மூளை 

முடக்கு வாதத்தால் "பாதிக்கப்பட்ட ஒரு SPASTIC CHILD .

கன்னியாகுமரி அம்மன் போன்ற கள்ளம் கபடமாற்ற பேரழகி அவள்.பதிமூன்று வயதில் அவளுக்கு மருத்துவர் ஆலோசனையின் பேரில் ஒரு அறுவை சிகிக்சை  செய்து அவள் கர்ப்பப்பை அகற்ப்பட்டது> பெண் என்ற வகையில் அவளுக்கு மாதாந்திர தொந்திரவு இல்லை  என்றானது.

இன்று அந்த குடுமபத்தின்குலதெய்வமாகஅவளை    கொண்டாடுகிறார்கள் . எந்த நல்லது கேட்டது நடந்தாலும் முதல் படையல் அவளுக்கு தான் .

---------------------------------------------------------------------------------------------------------


"பேரன்பு " என்று ஒருபடம் தி ரைக்கு வந்திருப்பதாக தெரிகிறது. எங்கள் "லதா"வின் உறவினர்கள் கலிபோர்னியாவிலிருந்து -கன்பராவரை,லண்டனிலிருந்து கென்யாவரை   இருக்கிறார்கள்.அவர்கள் இந்த  படத்தை பார்த்தார்களாதெ  ரியாதுசென்னையில் இருக்கும் , அவள்  அக்காமார் அண்ணன்மார் பார்த்தார்களாதெ  ரியாது .அந்தப்படத்தில்-லதாவாக - இல்லை  பாப்பாவாக நடிக்கும் சாதனா என்ற சிறுமிக்கு இந்த ஆண்டு சிறந்த நடிகை விருது கிடைக்கும்   >என்கிறார்கள் .தந்தையாக நடிக்கும் மம்மட்டி க்கு ஆஸ்கார் கிடைக்கும் என்கிறார்கள்.

அந்த படத்தை நான்பார்ப்பேனா !தெ ரியாது.?


சபிக்கப்பட்ட ஒரு குழந்தையின் பொம்மையை  வைத் து ஆசிர்வதிக்கப்பட்டவர்களுக்கு  பொழுதுபோக காட்டப்பட்ட பொம்மலாட்டம் தான்  

 " பேரன்பு"

வேறென்ன சொல்ல !!!



0 comments: